Sunday, January 6, 2008

புத்தாண்டு சங்கல்பம்

எல்லோரும் புத்தாண்டு சங்கல்பம் எடுத்துக்கொள்கின்ன்றனர் ஆனால் அது மூன்று மாதம்
வந்தாலே அதிகம் ,பின் குறைந்து அது விட்டுப் போய்விடுகிறது ஏன்?அதற்கு நாம் அவ்வளவு மதிப்பும் ,முக்கியத்துவமும் கொடுப்பதில்லை ,அன்பு ஷைலஜாவின் வலையில் விழுந்த மீன்களில் நானும் ஒருவள்.வங்கக்கடலில் அழுத்தம் இருந்து மழையும் புயலும் இருந்தும் கடலுக்கு வந்து வலையும் வீசி இருக்கும் வீர ஷைலஜா,
சரி நான் என்ன சங்கல்பம் எடுப்பது ,,எளிதான ஒன்றாக எடுபோம் என்று எண்ணி
யோசித்தேன்.,,ஒ,,கிடைத்துவிட்டது ஐடியா மாதம் ஒரு நாலு முறையாவது என்
வலைப்பதிவில் ஏதாவது ஆக்கப்பூர்வமான படைப்புகளை இடவேண்டும் ,,,,,,
இது என்னால் முடியும் .கடவுள் அருளுடன் ,,,,,,,

2 பலர் தன் மகன்களை விட்டு பிரிந்து தூரம் வாழ்ந்து வருகிறார்கள்,சிலர் முதியவர்
இல்லத்திலும் இருக்கிறார்கள் அவர்களுக்கு பணத்தைவிட அன்பும் ஆதரவும் தேவை
ஆகையால் தனியாக இருக்கும் வயதானவர்களிடம் சென்று அன்புடன் பேசி அவர்களுக்கு
இசை அல்லது வேறு அவர்களுக்கு பிடித்த் விஷயத்தில் பேசி ஒரு ஆரோக்கிய
சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் இதில் வம்பு..மற்ற வீட்டு விஷயங்களில் தூபம்
போடாமல் இருக்க வேண்டும் அவர்களுடன் பல்லாங்குழி ,,போன்ற விளையாட்டுக்கள்
விளையாடலாம் ,நாட்டின் நடப்பு பற்றியும் ஆன்மீக விஷ்யமும் அலசலாம் .
அவர்களைப் பாடவும் வைக்கலாம் ,இதற்கு முதியவர் இல்லம்தான் போக வேண்டும் என்பதில்லை எத்தனையோ பேர்கள் நம் வீட்டில் அருகிலேயே இருப்பார்கள்,,,,,,,,
இதைச்செய்ய நானும் சங்கல்பம் எடுத்துள்ளேன் ,

3,என் வீட்டுக் குழந்தைகளுக்கு {பேரன் பேத்தி] தமிழ் பேச கற்றுக்கொடுக்க வேண்டும்
எப்போது அவர்களிடம் பேசினாலும் அவர்களுக்கு புரிந்தாலும் ஆங்கிலம் அல்லது ஹிந்தியே பதிலாக வருகிறது இல்லாவிட்டால் "what do u mean?" என்று அவர்கள்
கேட்கும் போது எனக்கு மிக வருத்தம் ஏற்பதுகிறது ஆகையால் என் மகனிடமும் இந்தச்
சங்கல்பத்தை எடுக்கச் சொல்லி இருக்கிறேன் நானும் எடுத்திருக்கிறேன் இந்த
வருடத்திற்குள் அவர்கள் சரளமாக தமிழ் பேச வேண்டும் ,,,,
அப்பா,,,,,,இந்த மூன்று போதும் ,,,,,,,என்னால் முடியும்,,,,தம்பி.......,

அன்புடன் விசாலம்

No comments: