அவள் படிப்பு நின்றது,
பொம்மைகளும் மறைந்தன
தாயில்லை, சித்தி வந்தாள்
பேரம் பேசினாள்
முடித்து வைத்தாள்
அழகி பிமபம் ஆனாள்
படிக்க ஆசைக் கொண்டாள்
வெற்றிலைக் கொதப்ப
தலைவி வந்தாள்.
"நீ என் ராசாத்தி
உனக்கு எதுக்கு படிப்பு
படுக்கையில் கொட்டும் பணம்
மிராசுதார் நல்ல குணம் '
நுழைக்கபட்டாள் தனி உலகம்
இரவில் எடுக்கும் விசுவரூபம்
இந்த ராஜ்ஜியத்தின் ராணி அவள்
உறவு இல்லை நட்பு இல்லை
உணர்ச்சி இல்லை அன்பு இல்லை
இயந்திர வாழ்க்கை
மொழியும் இல்லை
தானம் கொடுத்தாள் உடலை
அவளுக்குத் தேவை ஒரு மழலை
தேவை ஒரு குடும்பம்
காண்பாள் அதிலே இன்பம்
வேண்டும் அன்புடன் மனப்பொருத்தம்
ஓடிப்போகும் அவள் மன வருத்தம்
அன்புடன் விசாலம்
Saturday, January 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment