Saturday, January 5, 2008

வணக்கம்

வணக்கம் என்று கூறுவோம்
அழகுத் தமிழில் வண்ங்குவோம்
இரண்டு கைகள் கூப்புவோம்
பணிவுடன் புன்னகை வீசுவோம்
அக மகிழ்ந்து வாழ்த்தி மகிழ்வோம்
வாழ்த்து அலைகளைப் பரப்புவோம்
சுற்றுச்சூழ்நிலையில் நற்றலைகள்
எந்நிலையிலும் காக்கும் பேரலைகள்
சொல்,, வாய் நிறைய வணக்கம்,
நம் உளமெல்லாம் மணக்கும் .
கும்பிடும் இரண்டு கைகளின் சேர்க்கை
ஆத்மா பரமாத்மாவின் சேர்க்கை
பெருவிரல்கள் திரும்பும் திசையே
உள்ளொளியைக் காட்டும் திசை
அந்த மெய்ப்பொருளை உணர்வோம்
வணக்கத்தின் பெருமையை அறிவோம்

No comments: