என் பள்ளியில் 9 வது படிக்கும் ஒரு பெண் இருந்தாள் . சுமாராகப் படிப்பாள் 60% கிடைக்கும் அவள் அம்மா அவள் பத்தாவது வந்தால் நல்ல மார்க் கிடைக்க வேண்டும் என்பதால் ஸயின்ஸ் சப்ஜெச்டிற்கு
டியூஷன் வைத்தாள்,அதில் கணக்கிற்கும் இந்த ஆசிரியரை அமர்த்தினாள், அவரும் விடாமல் பாடம் எடுக்கப் போனார்
அவளை 100 மார்குகள் வாங்க வைத்து விடுகிறேன் என்று சவால்
விட்டார் ,இதனால் பல ஆயிரங்கள் அவருக்கு கிடைத்தது எங்க்ள் பள்ளியில் டியூஷன் எடுக்க அனுமதி இல்லை ,இருந்தாலும்
பிழைத்துப் போகிறார் என்று கண்டும் காணாமல் விட்டு விட்டோம்
இவர் பரீடசைக்கு வரும் கேள்வித்தாளை அப்படியே அவளுக்குச்
சொல்லிக் கொடுத்து விட்டார் அந்தப் பெண் மாத பரீட்சியிலிருந்தே
முழு மார்க் வாங்க ஆரம்பித்தாள் எல்லோருக்கும் இந்தத் திடீர்
மாற்றம் தெரிந்தது ,அதேபோல் நட்பு என்ற முறையில் மற்ற
கேள்வித்தாள்களையும் பார்த்து அந்தப் பென்ணிற்குச் சொல்ல அந்தப் பெண் அரைப் பரீட்சையில் முக்கால்வாசி ச்ப்ஜெக்டில் 80க்கு மேல் எடுத்திருந்தாள் 4வது ரேங்க் ,,,,,,எங்களுக்கு இதன் விஷ்யமாக சந்தேகம் வந்தது ,ஒரு நாள் நான் பள்ளிவிட்டு லேட்டாக கிளம்பினேன் அந்தப் பெண்ணின் அம்மா நின்றிருந்தாள்,கொஞ்சம்
குசலம் விஜாரித்து விட்டு அவளின் பெண்ணையும் புகழ்ந்தேன்
psychology application அவள் அம்மாவும் கணக்கு வாத்தியாரினால்தான்
அவர்தான் இரவு 9 வரை பாடு படுகிரார் என்றாள்
பின் அடுத்ததடவை கேள்வி தாள்களை வெளியேதெரியாதபடி ரகசியமாக வைத்தோம் ,,,,,
ராகுதசைப்பிடித்தநாள்,,,,,மாடி ஏறுமிடத்தின் கீழ் இருக்கும் இடம்
இசைக்கருவிகள் வைக்க ஒரு சின்ன அறையாக்கப்பட்டிருந்தது
அதில் ஒரு நாற்காலியில் அவர் அமர்ந்து காப்பிகள் திருத்த அந்தப்
பெண்ணிடம் எல்லாவற்றையும் சேகரித்து தருமபடி கூறினார் அந்தப்பெண்தான் மானிடர் போல் அவருக்கு எல்லாம் ,,,,அந்தப் பெண்ணும் வந்தது ,அறைக்குள் வந்தவுடன் அவருக்கு என்னத்
தோன்றியதோ அவளை அப்படியே தழுவினார் அந்தப் பெண் திமிறி
ஓவென்று அழுதுக்கொண்டு வகுப்பிற்கு வந்தது ,,,அதன் பின்
பின் அது பெரிய விச்வரூபம் எடுக்க அவர் "அந்தப் பெண் தடுக்கி விழப்போனாள் நான் விழாமல் பிடித்தேன் அவ்வளவுதான் என்று
சொல்ல மேலிடம் வரை இது போய்விட்டது பின் அவர் கணக்கு பேபர்
சொன்னதும் வெளிவந்தது. சரியாக ஒருமாதம் அவர் பள்ளியிலிருந்து
நீக்கப்பட்டார் ஆனால் அவருக்கு ரிப்போர்ர்டில் இதுபற்றி எழுதாமல் மனித நேயத்துடன் நல்ல ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது பாவம் சம்சாரி
பிழைத்துப் போகட்டும் என்று ....அவமானம் பட்டு பள்ளியிலிருந்து விலகுமபடி ஆகிவிட்டது ,,இது கிரஹங்களின்
கோளாறா?மனிதனின் சிந்திக்கும் சக்தி குறைந்ததாலா இல்லை
காம்த்தின் சக்தியா?இல்லை ஜோதிடமா? ஒன்றும் புரியவில்லை
Saturday, January 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment