ஸ்ரீகிருஷ்ணதேவராயர் வழிவந்த மன்னர்கள் விஜயநகரில் பல ஆண்டுகள் இருந்தனர்
ஆந்திர வம்சம் ஆக இருந்தனர் ,ஆனால் பலவித போர்களால் ஆட்சி முடிவடைந்து தப்பித்து தமிழகம் நோக்கிப் பிரயணித்தனர் அப்போது அவர்கள் வளர்த்தச் செல்லப்
பிராணிகளும் அவர்கள் கூட வந்தன நடந்து நடந்து திருவாங்கூர் சமஸ்தானப்பகுதியின்
எல்லையில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தின் கீழ் வந்து அங்கேயே
தங்கவும் ஆரம்பித்தனர் அகதிகள் போல் முதலில் முகாம் இட்டு பின் பக்காவாக வீடு கட்டி
தங்க ஆரம்பித்தனர் சஞ்சீவி மலைப்பகுத்தில் பரவி அங்கேயே அவர்களது சொந்தமாக்கிக்
கொண்டனர் அந்தப்பகுதியே ராஜபாளையம் என்கிறார்கள். அவர்களுடன் வந்த நாயின் ஒரு ஜாதி ராஜபாளையம் என்ற பெயரில் மிகவும் பிரபலமானது
பார்த்தால் அல்சேஷன் அல்லது ஜெர்மன் ஷெப்பர்ட் போன்று பெரிதாக இருக்கும் காவலுக்கு மிகச்சிறந்த நாய் ,அதற்கு பாராமரிப்புச் செலவும் குறைவு ,,சைவம் தான் விரும்பி சாப்பிடும் தயிர் சாதம் பாலுஞ்சாதம் என்று எதுகொடுத்தாலும் சாப்பிடும் இதற்கு மோப்பச் சக்தியும் அதிகம் ,இன்றும் பல போலீசின் படை குற்றம் கண்டுப்பிடிக்க
இந்தவகை நாயை அழைத்துப்போகிறார்கள் இன்றும் பல பங்களாவிலும் எஸ்டேட் பெரிய தோட்டங்கள் போன்ற இடத்தில் இவைகளை வளர்க்கிறார்கள்
டாபர்மென் லெப்ரடார் ஜெர்மன் ஷெப்பர்ட் போன்ற நாய்களுக்கு சமமாக இதுவும் இருக்கிறது மிகவும் விசுவாசமான நாய் ஆனால் யஜமானரின் கட்டளைக்குத்தான் அடிபடியும் .கவ்வினால் பிடி சதை வந்துவிடும் வீட்டைப் பாதுகாக்க மிகச் சிறந்த நாய் .
ஆனால் அனபையும் எதிர்ப்பார்க்கும் ,அதன் கண்கள் காது மிக அழகு ,,மேற்கு பகுதியில் நிறைய இடத்தில் இந்தவகை நாயகளை நான் பார்த்து இருக்கிறேன்
இத்துடன் சிப்பிப்பாறைநாய் என்றும் ஒன்று இருக்கிறது மிகவும் மூளை உள்ளது
வெள்:ளையாக இருக்கும் 4அடி உயரம் 4 அடி நீளம் கூர்மையான் கண்கள் உதடு ரோஜா நிறம் ,,,பார்க்க சாது போல் இருக்கும் ஆனால் யாராவது எதாவது தொட்டால்
அவ்வளவுதான் பிடுங்கிவிடும் ,,,தன்நலமில்லாத அன்பு நாயினுடையது.அதன் தலவன்
எத்தனை அடித்தாலும் அதை மறந்து வாலை ஆட்டிக்கொண்டு திரும்ப அன்பு செலுத்தப் போகும் .மனிதன் மன்னிக்கும் குணம் கொண்டு இதே போல் அனபு காட்டி வந்தால்
உலகம் எத்தனை நன்றாக இருக்கும்
அன்புடன் விசாலம்
Saturday, January 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment