ஹம்பி என்ற இடத்தில் ஆஞ்சநேயர் வந்து அமர்ந்தது மிக வியப்பான சம்பவம் தான் ,
மாத்வர்களின் ஆசார்யரான திரு வியாசராயர் மிகப் பெரிய ஆஞ்சநேயபக்தர் மிக அழகாக் வரைபவர் ,எங்கு போனாலும் ஸ்ரீ ஆஞ்சநேயரை வரைய ஆரம்பித்து விடுவார் அவர் கை
ஆஞ்சநேயமூர்த்தியை வரைந்தபடியே இருக்கும் ஒரு நாள் ஒரு இடத்தில் வந்து அமர்ந்து
வழக்கம் போல் மாருதியின் உருவத்தை வரைந்தார் ,மறு நாள் அந்த இடம் சுத்தமாக
அழிக்கப்பட்டிருந்தது அவருக்கு வியப்பும் சந்தேகமும் ஏற்பட்டது மறு நாளும் அதே இடத்தில் ஆஞ்சநேயரின் படம் வரைந்தார் ,அதுவும் மறுநாள் அழிந்திருந்தது இப்படியே பலநாட்கள் நடக்க அவர் ஒரு நாள் அந்த அழிப்பவனைக் கையும் களவுமாய் பிடிக்க
வேண்டும் என்று எண்ணி இரவு தூங்காமல் அங்கேயே நின்று காவல் காத்தார் , அப்போது
ஹனுமானே அங்கு வந்து அவர் படத்தை அழிப்பதைக் கண்டார் ஓடிப்போய் அவரைக்
கட்டிப்பிடித்தார் அவர் கைவிட்டுப்போகும் நிலையில் ராமநாமம் ஜபித்தார் அவர் அதில் மெய்மறந்து கட்டுண்ட போது அவரை ராமநாம ஜப இயந்திரத்திற்குள் அடைத்துவைத்து
விட்டார் ஆஞ்சநேயர் ஓடிப் போகாதபடி அங்கே ஒரு கோயிலும் கட்டிவிட்டாராம் ,
இந்தக் கோயில் கர்ப்பக்கிரஹத்தில் மூல உருவமே யந்திர உருவில் உள்ளது பத்மதளம் ஒன்று இருக்கிறது பின் ஒரு வட்டம் நடுவே ஆறுகோணங்கள் கொண்ட ஒரு யந்திரம் அதன் மத்தியில் ஆஞ்சநேயர் பீஜாட்சமந்திரம் உள்ளன ஒரு தியான ஸ்லோகம் கிரந்தத்தில் ,,வட்டத்தின் உட்புறம் எழுதப்பட்டுள்ளது ,,,, ஸ்ரீஆஞ்சநேயர்
ஜயந்தி அன்று பெங்களூர் அருகில் இருப்பவர்கள் எல்லோரும் இந்தக் கோயிலைத்
தரிசிக்கலாமே ,,,ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பல கோடி நம்ஸ்காரங்கள் அன்புடன் விசாலம்
Saturday, January 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment