Saturday, January 5, 2008

ராகம்

சங்கீதம் ஒரு மேன்மையான கலை அதைக்கேட்க ஒரு தனி இன்பம் கிடைக்கிறது இதைக்
காந்தர்வ வேதம் என்றும் சொல்லுகின்றனர் நாலு வேதம் தவிர ஆயுர்வேதம் தனுர் வேதம் அர்த்தஸாஸ்திரம் முதலியவைகள் கடவுள் வழிப்பாட்டிற்கு முக்கிய சாதனை
இசை புத்தியினாலும் உழைப்பினாலும் வளர்ந்த ஒன்று உயர்ந்த சங்கீதத்திற்கு முதலில் நல்ல குரல் வேண்டும் அது ஈசனின் அருள்தான் உயர்ந்த இசைக் கேட்க காதின்
நரம்புகளுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது ஆனால் அதுவே அளவுக்கு மீறிய சத்தம்
ஆனால் காது ஜவ்வை நாசமும் படுத்துகிறது மனரஞ்சனமான பாடல் உண்மையாகவே
மனதை அமைதி படுத்துகிறது உள் ஆத்மாவரைத் தொடுகிறது என்று தோன்றுகிறது
என் அக்கா கலயாணி பெரிய பாடகி ,அவள் மூச்சே சங்கீதம் தான் அவள் மிகவும் உடல் குன்றி ஐசியூ வில் சேர்க்கப்பட்டாள் ,நான் பார்க்கப் போயிருந்தேன் அவள் நினைவு
அவளிடம் இல்லை ,கண்கள் மூடி இருந்தன ,நான் டாக்டரிடம் கேட்டு உள்ளே போனேன்

இசைமேல் அவளது ஆசையைச் சொல்லி ஒரு நல்ல அவளுக்குப்பிடித்தப் பாட்டை அவள் காதில் சிடி ப்ளேயரின் மூலம் வைக்கச் சொன்னேன் ,,அவள் கைகள் அந்தப் பாட்டிற்கு சரியான தாளம் போட்டன , அவளுக்கு அதைக் கேட்க முடிந்தது ,
ஆகையால் சங்கீதம் நெஞ்சின் ஆழத்தைத் தொடுகிறது திரு ரமணன் அவர்களின் மாரியம்மனின் இசைக்கேட்டு நான் என்னையே மறந்தேன் கண்களிலிருந்து
கண்ணீர் கொட்டியது உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது ஆகையால் ந்ல்ல இசை மனதின்
ஆழம் வரைப் போய் நம்மை பரவசப்படுத்துகிறது இதனால்தான் சங்கீதமும் ஒரு ஹீலிங்
தெரபி என்று கண் டு பிடித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்
நல்ல சங்கீதம் மனதில் ஒரு ஒழுங்கு,,, நற்குணங்களை வளர்க்கிறது

ராகம் எனபது எந்தத் த்வனி,, ஸ்வரங்களினாலும் வர்ணங்களினாலும் அலங்கரிக்கப்பட்டு
செவிக்கு இனபத்தைத் தருகிறதோ அதுவே ராகம் சரியான ஸ்வரஸ்தானத்தில்
ஆலாபனை விழ கீழ்ஸ்தாயி நடுஸ்தாயி மேல்ஸ்தாயி என்று எல்லா
ஸ்தானங்களிலும் பாடுவது "கானக்கிரியை" ,,, இது ஸ்தாயி ஆரோஹி அவரோஹி ஸஞ்சாரி என் நான்கு வகைப்படும் ஆரோஹி ஸரிகம் ,,என்றால் அவரோஹி மகரிஸ
ஆகும்

நிஷாந்திய ராகம் ,,,,,இதில் நிஷாதத்திற்கு மேல் சஞ்சாரம் இல்லாத ராகம்
அதாவது மேலே நி க்குமேல் போகாது ,
உதாரணம் நாதநாமக்கிரியா ஸ்ரிகமபதநி,,,,,,,,நிதபமகரிஸநி

புன்னாகவராளி நிஸ்ரிகமபதநி நிதபமகரிஸ்நி

ஆடுபாம்பே பாடிப்பார்த்தால் இது புரியும் ,,,,,,,,,,,,,,,

அன்புடன் விசாலம்

No comments: