Thursday, April 7, 2011

ஓம் எனும் சக்தி

ஓம் என்ற மந்திரத்திற்கு மிகுந்த சக்தி உண்டு என்பது நம் எல்லோருக்கும் தெரியும் . அதை மேலும் என் அனுபவத்தில் உணரும் சந்தர்ப்பமும் எனக்குக்கிடைத்தது . நாம் உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் இருப்பவர்களையும் அதே போல் வீட்டில் படுத்திருப்பவர்களையும் காணச்செல்கிறோம் .அப்போது நாம் அவர்களுக்கென்று முசம்பி ,ஆரஞ்சு
அல்ல்து ஆப்பிள் என்று ஏதாவது வாங்கிப்போகிறோம் சில சமயம் ஹார்லிக்ஸ்
பாட்டிலும் வாங்கிச்செல்கிறோம் .
எனக்குத்தெரிந்தவர் தில்லி அருகில் இருக்கும் குர்கான்வில் {gurgaon} ஒரு பத்து நாளாக படுத்த படுக்கையாக இருந்தார் நல்ல சுரம் .........அவர் வீட்டில் ஒரு திருமணம் வெகு சமீபத்தில் நடக்க இருந்தது . நான் அவரைக்காண ஆப்பிள் வாங்கிவந்தேன் . அப்போது மும்பையில் ஒரு மஹானைச்சந்தித்ததும் அவர்
கூறியதும் என் ஞாபகத்திற்கு வந்தது .

"யாராவது உடல்குன்றி வியாதியுடன் படுக்கையில் வீழ்ந்திருக்கும் போது எதாவது பழத்தை வாங்கி அதைக்கட்டைவிரலாலும் ஆழ்காட்டிவிரலாலும் பிடித்துக்கொண்டு வலது கையினால் அதன் மேல் " ஓம் " என்று எழுதிவிட்டு
அதை 108 தட்வையோ அல்லது 1008 தடவையோ உருவேற்றி பின் வாயால் ஊதிவிட்டு அந்தப்பழத்தை அந்த நோயளிக்கு அளிக்க அவர் விரைவில் குணமடைந்து விடுவார் .அந்தப்பழத்தைக்கொடுக்கும் போது மிருத்துஞ்சய மந்திரத்தைச்சொல்லி மனதார பிரார்த்தித்தபடி கொடுக்க வேண்டும்'

அந்தப்பெரியவர் சொன்னதை நான் பார்க்கப்போகும் நோயாளியிடம் முயன்று பார்க்க எண்ணினேன் மிகவும் சிரத்தையாக அதன்படி செய்தேன் . ஆஹா என்ன ஆச்சர்யம் . ! இரண்டுநாளில் சுரம் போய் அவர் திருமணத்திலும் கலந்துக்கொண்டார் . எல்லாம் நம்பிக்கைதான்
இதைச்சிலர் "காக்கா உட்க்கார பனம் பழம் விழுந்தது போலும் எண்ணலாம் .
எனக்கு இந்த "ஓம்" பலித்தது

No comments: