Monday, April 4, 2011

குடி படுவா ,

மும்பையில் ஒரு தடவை மராட்டியர் புத்தாண்டில் நான் டோம்பவ்லி என்ற இடத்தில் பாகசாலாமைதானத்திற்குப்போயிருந்தேன்
,"குடிபாடுவா " என்ற புத்தாண்டு விழா அங்கு நடைப்பெற்றுக்கொண்டிருந்தது .நம் தமிழ் நாட்டில் எதாவது விசேஷம் வந்தால் பெண்மணிகள் ஒன்பது கெஜம் புடவை
கட்டிக்கொண்டு பூஜை செய்யும் கலாச்சாரம் இருந்திருக்கிறது.ஆனால் இப்போதெல்லாம்
அவைகளைக்காண முடிவதில்லை .அப்படியே அவர்கள் அணிந்தாலும் பல்லைக்கடித்துக்கொண்டு எப்போது அதிலிருந்து மாறுவோம் என்ற பாவனையுடன் இருந்து உடனே அவிழ்த்து சல்வாரில் புகுந்துவிடுகிறார்கள் .
ஆனால் மஹாராஷ்டிய பெண்கள் தங்கள் கலாசாரத்தை மிகப்பெருமையுடன்
பின்பற்றுகிறார்கள் .நான் போன் அந்த இடத்தில் முக்கால்வாசிப்பெண்கள்
ஒன்பது கெஜம்புடவையை அவர்கள் பாணியில் கட்டியிருந்தார்கள் .எனக்கு

" மாதுரி தீக்ஷித் " ஒரு ஹிந்தி சினிமாவில் நடித்த ஞாபகம் தான் வந்தது .
அவர்கள் மூக்கிலும் முத்தால் ஆன " நத்து" அலங்கரித்தன.
சில பெண்கள் சைக்கிளிலும் சிலர் "பைக்கிலும் "மெள்ள ஓட்டியபடியே வர
அதன் பின்னால "லேசிம் " கைகளில் ஏந்தி "ஜல் ஜல்" என்ற சல்ங்கைச்சத்தம்
போல் மிக அழகான ஒலி வர செவிக்கு மிக ஆனந்தமாக இருந்தது .
ஒரேமாதிரி அவர்கள் கால்கள் ஜதி போட .டோல் சத்தத்துடன் "லேஜிம்" என்ற பொருளை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும்
மேலேயும் அசைய வைத்துக்குதித்தபடி
ஆடியது மிகவும் ரசிக்கத்தக்க ஒன்று ,
அவரகள் முகம் பிரகாசிக்க பச்சைக்கலரில
பிறைச்சந்திரன் போல் நெற்றியில் குங்குமத்தின்
கீழே இடப்பட்டு அழகை மேலும்ம் கூட்டின..

அதன் பின் பழையகாலத்தில் ஓடும் மாட்டுவண்டிகள் மிகுந்த அலங்காரத்துடன் பவனி வர அதை இழுத்துவரும் காளைகளும் சிங்காரித்தபடி நடையை[ப்போட்டன . அதன் கழுத்தில் தொங்கிய குண்டு மணிகளின் ஒலியோ ஒவ்வொரு நடைக்கும் சரியான
"ரிதம்" கொடுத்து தாள வாத்திய கச்சேரி போன்ற பிரமை ஏற்பட்டது ,

சதரபதி சிவாஜி மஹராஜ் வெற்றிக்குமேல் வெற்றி பெற்று இந்த "குடிபடுவா" தினத்தன்று
திரும்பி வந்தாராம்
பிரும்மா இன்றுதான் எல்லா லோகங்களையும் சிருஷ்டித்தாராம் இதனால்தான் ஒவ்வொரு
வீட்டு வாசலிலும் பால்கனியிலும் சன்னலிலும்
"குடி" {gudi} என்ற ஒரு அடையாளம் அமைக்கப்படுகிறது பிரும்மாவின் கொடி அது.

ஒரு மூங்கில் கமபை எடுத்து அதை சிவப்பு ,பச்சை வர்ணப் பட்டுத்துணியால மூடி அதை
ஒரு சொம்பால மூடிவிடுகிறார்கள் .
அந்தப்பாத்திரம் வெள்ளியகாவோ செம்பாகவோ இருக்க வேண்டும் பின் அந்தக்கம்பில்
ஸ்வஸ்திக் சிம்பலை எழுதுகிறார்கள் .பின் அதன் மேல் பெரிய மாலையும் மாட்டுகிறார்கள் . பின் அதை எல்லோருக்கும் தெரியும்படி வெளியில் வைக்கிறார்கள்
இந்த "குடி" அடையாளம் பல தீய சக்திகளை விரட்டி வீட்டிற்கு வளத்தைத் தருகிறது என்ற
நம்பிக்கையும் அவர்களிடம் இருக்கிறது

இந்த நன்நாளில் ஒவ்வொரு வீட்டு வாசலையும்
"ரங்கோலி" என்ற கோலங்கள் பல வர்ணங்களுடன் அலங்கரிக்கின்றன .
அதில் புள்ளிக்கோலங்கள் ,கணபதி சிவாஜி
போன்ற சித்திரங்கள், .இயற்கைக்காட்சிகள்
என்று ஒன்றை ஒன்று சக்கைப்போடு போடுகின்றன .

இன்றுதான் மஹாவிஷ்ணு 'மத்ஸ்யாவதாரம்"
எடுத்தார் என்றும் கூறுகின்றனர் ,

பூரன்போளி என்ற வெல்லப்போளியும் 'ஸ்ரீகண்ட்""என்ற இனிப்பும் அவர்களது புத்தாண்டு
ஸ்பெஷல் .குவாலிடி ஐஸ்க்ரீம் விற்பது போல்
"ஸ்ரீகண்டும் " குவாலிடியில் கிடைக்கிறது .

ஏபரல் நாலாம் தேதி புத்தாண்டு கொண்டாடும் எல்லோருக்கும் என் அன்பு கனிந்த
வாழ்த்துகள்

No comments: