Thursday, April 7, 2011

ஏப்ரல் 7 எனக்கு மறக்கமுடியாத நாள்

ஏப்ரல் 7ந்தேதி என்னால் மறக்கமுடியாத தேதிதான் , ஏன் என்று கேட்கிறீர்களா?
இந்தத்தேதியில் தான் "உலக சுகாதார நாள் "கொண்டாடப்படுகிறது . இது மறக்க
முடியாத நாளாக இருக்கக் காரணம் என் கணவர் அந்த ஆபீசில் தான் வேலை செய்து
வந்தார் . மார்ச் மாதத்திலிருந்தே வேலை சக்கைப்போடு போடும் .இன்றைய தினம் தில்லி W.H. O. காரியாலயத்தின் பெரிய மண்டபத்தில் ஒரு பெரிய திருவிழாதான் நடக்கும் . ஒரு அரண்மணைக்குள் புகுவது போல் மிகப்பிரமிப்பாக இருக்கும் .வருடாவருடம் எனக்கும் சேர்த்து அழைப்பு வந்துவிடுமாதலால் அங்குப் போவதைத்தவிர்க்க முடியாது. மாலை சுமார் 6 மணிக்கு விழா ஆரம்பிக்க இரவு 11 வரைப்போகும் . இந்த விழாவிற்கு எல்லோரும் தவறாமல் ஆஜராகிவிடுவார்கள்
இந்தியாவின் சுகாதார மந்திரியும் வருவார் ,தவிர W.H O டைரக்டரும் வருவார்
அன்றைய வருட தீர்மானம் ,ஸ்லோகன் எல்லாம் பேசிமுடித்தப்பின் எல்லோரும்
அழகான கண்ணாடிக்கோப்பையை. எடுத்து அதில் ஷிவாஸ் ரீகல் என்ற மிக உயர்ந்த மதுவகையை நிரப்பிப்பார்கள் .கூடவே
சூடான பக்கோடா வகைகளும்
வறுத்த முந்திரிபருப்பும் மேலும் பல அசைவ விஷயங்களும் வரும் ,

அந்தச்சூழ்நிலைஎங்களைப்போன்றவருக்குச்சற்று சிரமம் தான் ,அந்த நேரத்தில் என்ன செய்வது ?
சில தமிழ்ப்பெண்மணிகளைக் கண்டுப்பிடித்து அவர்களுடன் பேசவேண்டும்
என்ன பேசுவது ? அதுவே ஒரு கலைதான் .

" மாமி நீங்கள் மிஸஸ் ......?
"நான் தான் மிஸஸ் வேணுகோபால் "

"உங்கள் ஸாரி மிகவும் எடுப்பாக இருக்கிறது"

"தாங்கஸ்.... .இது பிரகதிமைதான் எக்சிபிஷனில்
வாங்கினேன் "

" உங்கள் வீடு எங்கே.......கரோல்பாக்தானா?'

"இல்லை நாங்க ஜனக்புரியில் இருக்கோம் ஆமாம் நீங்க யாருன்னு சொல்லலையே !"

"நான் தான் மிஸஸ் ராமன் "

"ஒரே ஆபீஸிலே நம்ம கணவன்மாரெல்லாம் இருந்தும் நம்ம ஒருத்தருக்கொருத்தர் contact இல்லை " . என்று சொன்னபடியே அந்த மாமியின் கண்கள் தன் கணவர் இருக்கும் திசையில் செல்லும் அவர் கோப்பையை ரசித்து கையில் பிடித்திருப்பார். ..பின் அந்த மிஸஸ் என்னிடம் கேட்பாள்.

"உங்கள் பையன் இப்போ என்ன செய்யறான் ?' .

"அவன் இப்போ பிலானியில் நாலாவது வருஷம்படிக்கிறான் "

இதுபோல் அர்த்தமில்லாமல் மேலுக்காக பேசி காலங்கழிக்கும் ஒரு குழுவும்
தங்கள் கணவருடன் சேர்ந்து கொட்டம்போட்டபடி மதுவை ருசிப்பாக்கும் சில
வடநாட்டுப்பெண்மணிகளின் குழுவும் கலந்து பார்ட்டி நடக்கும் .
நாசூக்காக ஒன்று அல்லது இரண்டு முந்திரி பாதாமை எடுக்கும் ரகமும் இருக்கும்.

ஒவ்வொரு தடவையும் கையில் முந்திரியை அள்ளிக்கொள்ளும் ரகமும் இருக்கும் .

உதட்டளவில் அன்பும் .உள்ளத்தில் பொறாமையும் இருக்க உலவும் குழுவும் ,
"சம்சா "என்று சொல்லும் தொண்டர்கள் கூட்டமும் தனக்கு எதாவது ஆதாயம் கிடைக்காதா என்ற நினைவில் மேலதிகாரிகளின் வீட்டு வேலையும் செய்யத்தயங்காத நபர்களும்
அங்கு வந்து "மஜா" செய்வார்கள் ,
ஒரு மணி நேரம் பொழுதை எப்படியோ கழித்தாலும் பாக்கி மூன்று மணி நேரத்தைக்கழிப்பது என்னைப் பொருத்தவரையிலும் ஒரு தண்டனைதான் .ஆண்கள் தங்கள் ஆபீஸ்
நிர்வாகம் பற்றியோ .அரசியலைப்பற்றியோ அல்லது கிரிக்கெட் மாட்ச் பற்றியோ பேச நேரம்
போவதே தெரியாது அதுவும் கையில் மதுக்கோப்பையும் ஏற அந்த உலகமே தனிதான் .

வருடம் முழுவதும் உழைத்துப்பின்
தன் இஷடப்படி எல்லோரும் சமமாக ஒரே ஹாலில் கூடி இசை , ஜோக்குகள் , என்று ஆரம்பித்து எல்லோரும் ஒன்றாகப்பழக ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறதே ,இந்த ஆபீஸ் அதைப் பாராட்ட வேண்டியதுதான்

இந்த உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகளின் சபையின் ஒரு பிரிவாகும்
உலக சுகாதார கூட்டம் 1948ல் ஆரம்பித்தது பின்
1950லிருந்து {ஏப்ரல் 7ந்தேதி } தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது மக்களிடையே சுகாதார
விழுப்புணர்ச்சி ஏற்படுத்தவும் நோய்களைத்தடுக்க
தக்க நடவடிக்கை எடுப்பதும் இதன் முக்கிய கோளாக இருந்தது
இதன் தலைமை ஆபீஸ் ஜெனிவாவில் உள்ளது
இது எடுத்த சில தலைப்புக்கள்

சுகாதார கேடு ,
இன்று செயலில்லை என்றால் நாளை குணமில்லை

நோயைக்குணமாக்க கூடுதல் வசதி

ஒன்றுபட்டு உடல் நலத்திற்காக உழைப்போம்

தாய்க்கும் சேய்க்கும் இரு பாதுகாப்பு

தெருவின் சுத்தம்

சுற்றுச்சூழநிலை

பிறந்த குழந்தைக்கு மூன்று முக்கிய ஊசிகள்

மனக்கலக்கம் .மன அழுத்தம் , மாறுபட்ட மனநிலை mental disorder

தொற்று நோய்

இளம்பிள்ளை வாதம்

எய்ட்ஸ் நோய்


இது போல் பல விஷயங்களை எடுத்துக்கொண்டு அதற்கென்று என்னவெல்லாம்
செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்து
அதை வெற்றிகரமாக முடிக்கும் திறன்
அவர்களிடம் இருந்து வருகிறது
இதேபோல் சிக்கன்குனியா ஸ்வைன் ப்ளூ
போன்ற நடுநடுவே தலைக்காட்டும் பயங்கர நோய்களையும் ஆய்வு செய்து அதற்குத்தகுந்த
வைத்தியமுறைகளையும் ஆறாய்ந்து மக்களிடம்
அந்த்ந்த நாட்டின் பிரதிநிதிகள் மூலமாக சேர்ப்பிக்கிறார்கள்

இந்த வருடம் அவர்கள் எடுத்த தலைப்பு

"Anti micodrial resistance " அதாவது ஆங்கில மருநதுகளின் நச்சுபொருடகள் நம் உடலில் நாம் உட்கொள்ளும் போது இரத்தத்துடன் கலக்க அதைத்தாங்கும் சக்தியை {immunity }அதிக்கப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம்
என்ற விஷயத்தை இந்த வருடம் எடுத்துக்கொந்திருக்கிறது என நினைக்கிறேன்
மருத்தவர் இதைப்பற்றி நன்கு கூற இயலும்
உலக சுகாதார நாளில் நாம் உடல் சுத்தத்துடன்
மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக
அவசியம்

No comments: