Monday, April 4, 2011

"டும் டும் டும் "கல்யாணம்

திருமணம் என்பது நம் வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்று. முன்பெல்லாம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கவில்லையென்றால்
பல பரிகாரங்கள் .சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம் ஆனால் இப்போது ஆண்கள் அதிகமாகி பெண்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது .மங்கையர் மலரில் ஒரு ஆறு பக்கம் "பெண்கள் தேவை" என இருக்க ஒரு பக்கம் தான்
"ஆண்கள் தேவை" என்று வருகிறது . எனக்குத்தெரிந்த பல ஆண்களுக்கு
பல சிறப்பு அம்சம் பெற்றிருந்தும் தகுந்த வரன் கிடைக்காமல போகிறது .
நல்லபடி திருமணம் அமையவும் தடங்கலில்லாமல் நடக்கவும் பல திருமணத்தலங்கள் தமிழகத்தில் இருக்கின்றன .

"திருமணஞ்சேரி" என்ற திருத்தலத்தை அறியாதவரில்லை .பெயரிலேயே திருமணம்
என்ற சொல் வந்திருக்கிறது .இங்கு இருக்கும் இறைவன் பெயர் "திரு கல்யாண சுந்தரர் " . தடைப்படும் திருமணம் நடக்க ஆண்களும் .பெண்களும்
இந்தத்தலத்திற்கு வந்து மனதாரப்பிரார்த்தித்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து
மாலைச்சார்த்தினால் திருமணம் நடந்துவிடும் .இந்தக்கோயில் மாயவரம் --குற்றாலம் சாலையில் உள்ளது ஆண்களுக்குத்திருமணம் நடக்க தாயாரின்
மாலையும் .பெண்களுக்கு இறைவனின் மாலையும் பிரசாதமாக தரப்படுகிறது .
அந்த மாலையை திருமணம் நிச்சியம் செய்யும் வரை மிகவும் பத்திரமாக
பாதுகாக்க வேண்டும் இதேபோல் தான் திருவீழிமிழலையிலும் உத்தமர் கோயிலிலும் திருமணம் நடக்க பகதர்கள் வேண்டி நிற்கின்றனர்

இந்தத்திருமணத்தலங்களில் இருக்கும் விசேஷம் என்ன்வென்றால் இறைவனும்
இறைவியும் ஒரு சேர கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அருள் புரிவார்கள்.
அவர்களுக்குத் தனித்தனி சன்னிதி கிடையாது என்று நான் பார்த்தவரையிலும்
நினைக்கத்தோன்றுகிறது
சென்னை மஹாபலிபுரம் போகும் வழியில் இருக்கும் திருவிடந்தை ஸ்ரீநித்யகல்யாண் பெருமாள் கோயிலும் இந்த வகைதான்

காஞ்சிபுரத்தில் இருக்கும் ஏகாம்பரநாதரும் கன்னியாகுமரியில் அருள் பாலிக்கும்
கன்னியாகுமரி அம்மனும் திருமண வேண்டுகோளை நிறைவேற்றி அருள்
புரிகின்றனர் .
தவிர வீட்டில் ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாள் சொன்ன ஸ்ரீ பவானி அம்மன் பூஜையைஒரு மண்டலம் செய்ய கை மேல் பலனுண்டு

கேரள்த்திலும் கொல்லத்தில் இருக்கும் திரு உமாமகேஸ்வர கோயில் தமிழ் நாட்டு திருமணஞ்சேரியாகும் இங்கும் பக்தர்களின் கூட்டத்தை எப்போதும்
காணமுடிகிறது ,
திருமணம் வேண்டி நிற்கும் ஆண்களே .பெண்களே .மேலே சொன்ன எதவது ஒரு கோயில் போய் மலையை அணிந்துக்கொள்ளுங்கள் ..... அவசியம் என்னை
உங்கள் திருமணத்திற்கு அழைக்கவும் .

No comments: