பலர் பலவிதமான பூஜை செய்கிறார்கள் சிலர்.அதற்கென்று மிகப் படாடோபமாய்
சிலவுகளைச்செய்து த்ங்களது பெயர் பெரிதாக வரவேண்டும் என்ற நினைப்பில்
மிகவும் அலட்டிக் கொள்கிறார்கள் .
அந்தப்பூஜையில் அவர்கள் மனது நிலைக்கின்றதா என்றால் இல்லை .கூட்டத்தில் எந்தப்பெரியவர் வந்திருக்கிறார்
{இங்குப்பெரியவர் என்றால் பணக்காரர் ]என்றுப்பார்த்து அவர் உள்ளே நுழைய
பூஜையையும் விட்டு எழுந்தோடி வரவேற்பார் . நான் வழக்கமாகப்போகும் ஒரு கோயிலில் உள்ளே நுழைந்தால் ஒருவிதமான நிம்மதியும் மனதில் சாந்தியும் உண்டாவதை உணருவேன் .நல்ல பாசிடிவ் எனர்ஜி அலைமோதும் ,
ஆனால் அங்குப்பூஜை செய்யும் சிலரின் போக்கு சுத்தமாக எனக்கு ஒத்துவருவதில்லை . புரோகிதர் கண்களுக்குத்தெரியும் யார் யார் தட்டில் பத்துரூபாய்
வைப்பார்களென்று .....ஆகையால் சிலருக்கு ஆர்த்திக்கூடக்காட்டாமல்
ஏதோ வேலைச்செய்வது போல் பாவித்து தவிர்த்துவிடுவார் ,வேறுசிலருக்கு
"வாங்கோ வாங்கோ"என்று அழைத்துக் குசலம் விசாரித்தப்பின் எல்லாம் நியமும்
செய்து அவர் கழுத்தில் மாலையும் போட்டு விபூதி வழங்குவார் .அவர் தட்டிலும்
ஐம்பது ரூபாய் விழும் இதெல்லாம் பார்த்தால் வீட்டிலேயே மானசீகமாக ஒரு நிலைமனதோடு சிரத்தையோடு பிரேமபாவத்துடன் அந்த இஷ்டத்தெய்வத்தைநினைத்துப்பூஜை
செய்யலாமே என்று தோன்றுகிறது பகவான் அந்தப்பக்தியை ஏற்று உடனே வந்துவிடுவார்,
வீட்டுப்பெண்மணிகள் தாங்கள் வேலைச்செய்யும் போதேமனதில்இஷ்டத்தெய்வத்தின்
தியானத்தில் ஈடுபட்டால் அங்கும் அம்பிகை அல்லது ஈசன் அருள் புரிய வந்துவிடுகிறார் .
இதெற்கெல்லாம் முக்கியமாகத்தேவைப்படுவது
சிரத்தை ..
பக்தப்பிரஹலாதன் "நாராயணா "வை விடாமல் நினைந்தான் எத்தனையோ இடர்கள் வந்தும் அவரால் காப்பாற்றப்பட்டான் .தியாகராஜரோ
தன் பக்தியால் இசைமூலம் ஸ்ரீராமரையே
தரிசித்தார் ,கோரகும்பர் மண்பாண்டம் செய்தப்படியே பக்தியைக்கடைப்பிடித்து இறைவனையும் தரிசித்தார் கபீர்தாஸ் தரிபோடும் ஒரு நெசவாளி .அவரும் தன் தொழிலைவிடவில்லை ஆனால் பல "தோஹா"க்கள் செய்து வேதந்தத்க்கருத்துக்களை
நம்மிடம் வைத்தார் ,செறுப்பு தைக்கும் தொழிலைக்கொண்ட ரயிதாஸும் தன் தொழிலை
விடவில்லை ஆனால் நாமஸ்மரணனையினால்
கடவுளின் அருளுக்குப்பாத்திரமானார் ,
ஆகையால் மானஸபூஜை மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்றாகக்கருதப்படுகிறது
"மானஸசிவபூஜை செய்குவோம்
சச்சிதானந்தம் பெற "என்ற பாடல் எனக்கு
ஞாபகம் வருகிறது
"கனகதாசரின்வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இந்த மானசபூஜையின் மேன்மைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது
கனகதாசர் மிகச்சிறந்த கிருஷணபக்தர் பிறப்பால் அவர் நீசகுலத்தில் தோன்றினாலும்
அந்தமாதவன் மேல் அவருக்கு இருந்த பக்தியைச்சொல்லமுடியாது மிகவும் தயாளுவாக
இருந்ததால் தனக்கென்று ஒன்றும் அவர் வைத்துக்கொள்ளாமல் எல்லாமே தானம் செய்துவிடுவார் .முக்கால்வாசி நேரம் அவர் காட்டில் மாடுகள் மேய்த்தபடி மானசபூஜை செய்தபடி கிருஷணரின் அழகில் தன்னை
மறப்பார்
ஒரு நாள் .ஒரு பல்லக்கு அந்தக்காட்டில் வந்துக்கொண்டிருந்தது அதில் அமர்ந்திருந்தவர்
ஒரு பெரிய மஹான். பெயர் வியாசராயர்.
அங்கு ஒரு துளசிவனம் இருக்க இந்த மஹான் மனதினாலேயே ஒரு துளசிமாலைக்கட்டி
கண்ணனை நினைத்து அவன் தோளில் போட்டார் ஆனால் அந்த மாலை கண்ணனின் தோளில் விழாமல் கீழே சரிந்தது இதைப்பற்றி அவர் தெரிந்துக்கொள்ள அவர் தன் சிஷ்யர்களிடம் காரணம் கேட்டார் .
"ஒருநிலைப்பட்ட மனமாக இருந்தால் இப்படி நடக்காது மனம் அலைப்பாயும் போதுதான்
இதுபோல் நடைப்பெறும் அதனால் தான் நீங்கள் வீசிய துளசிமாலையும் கண்ணன்
கழுத்தில் விழவில்லை " என்றனர் சீடர்கள்
தூரத்தில் வரும் சிபிகையைப்பார்த்து அதில் யாரோ பெரிய மகான் இருப்பார் என எண்ணி
கன்கதாசர். ஓடோடி வந்து கைக்கட்டியபடி தூர நின்றார் பின் வணங்கினார். அவரைப்பார்த்த
மகான் கேட்டார் .
"நீ ஓடி வந்தக்காரணம் என்னவோ?"
"சுவாமி நான் நீசக்குலத்தில் உதித்தவன் படிப்பில்லாதவன் அறிவற்றவன் இருப்பினும்
நான் கூற வந்ததைத்தயவு செய்து கேட்க வேண்டும் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும் "
"மேலே சொல்லு"
"நீங்கள் கிருஷ்னனுக்கு அணிவித்த துளசிமாலை அவனது மத்தில் மாட்டிக்கொண்டு
விட்டது அதனால் அவனது தோளில் அது விழவில்லை'
"ஏம்பா இதெல்லாம் உனக்கு எப்படித்தெரிந்தது?'
"நானும் அந்தமாதவனின் தியானத்தில் இருந்தேன் .நீங்கள் துளசிமாலைக்கட்டி கிருஷ்ணனுக்கு வீசியதைக்கண்டேன் அது மத்தில் மாட்டிக்கொண்டதையும் கண்டேன் "
"அப்படியா என்ன ஆச்சர்யம் "
"சுவாமி மானஸ பூஜை நாம் இருவரும் செய்கின்றோம் அதனால் நம் இருவர் மனதிலும்
கிருஷ்ணன் தானே இருக்கிறான் "
"தம்பி ஹரிதாஸர்களில் மிகச்சிறந்தவனாக
இருக்கும் நீ நீசனில்லை. யோகேச்வரன் நீ
உத்தம புருஷன் நீ . தூர ஏன் நிற்கிறாய்/
என் அருகில் வா"
கனகதாசர் அருகில் வர அப்படியேஅவரை
ஆலிங்கனம் செய்துக்கொண்டு மந்த்ரோபதேசம்
செய்து அவரைத்தன் சிஷ்யராக ஆக்கிக்கொள்கிறார் .
இந்த உண்மைச்சம்பவம் நமக்குப் பக்தியும் சிரத்தையும் மனத்தின் ஒருநிலையும் இருந்தாலே போதும் இறைவனின் தரிசனம் கிடைத்துவிடும் என்பதை மிகத்தெளிவாக
எடுத்துக்கூறுகிறது ,அலைப்பாயும் மனதுடன் பல கோயில்களைத் தரிசிப்பதைவிட உள் மனதில் கோயிலைக்கட்டி ஆண்டவனைக் காணலாம்
Thursday, April 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Very nice :) plesase add follwer widjet . i have to follow your blog
:)
thanks
rajesh
pl.add follwer widjet:)
superb aanmeega pathivugal:})
Post a Comment