இடம் அரண்மணை ..பாத்திரங்கள்--- அரசன் அமணன் என்ற இளங்குமணன் மற்றும் சில சேவகர்கள் , சில புலவர்கள் ...
காட்சி ஒன்று .தனியாக அரசன் குமணின் தம்பி இளங்குமணன் அங்கும் இங்கும்
நடந்துக்கொண்டிருக்கிறான். நடுவே தனக்குத்தானே பேசிக்கோள்கிறான்
இளங்குமணன் " அப்பாடி! எப்படியோ தில்லுமுல்லு செய்து என் சகோதரன் குமணனைக் காட்டிற்கு அனுப்பிவிட்டேன் .இனி இந்த ராஜ்ஜியம் எனக்குத்தான்.
காட்டில் தனியாக என் அண்ணன் வாழட்டும் .ஹா ஹாஹா ஹா "
காட்சி இரண்டு .... இடம் தெருவீதி பாத்திரங்கள் --- நான்கு புலவர்கள்
முதல் புலவர் ' அப்பப்பா நம் மன்னன் கொடுங்கோலாட்சி தாங்க முடியவில்லையே இப்படியே போனால் இந்நாட்டில் புலவர்கள் எல்லாம் மிக ஏழையாகிவிடுவார்கள்"
இரண்டாம் புலவர் "ஆம் மிகச்சரியாகச் சொன்னீர்கள். நம்மையெல்லாம்
ஆதரித்த பேரரசர் குமணன் எங்கே! அவர் சகோதரன் இந்த அமணன் எங்கே! "
மூன்றாம் புலவர் .' புலவர்கள், படித்தவர்கள் ஒருவருக்கும் இந்த ஆட்சியில்
மதிப்பு இல்லை நீதி செத்துவிட்டது "
நான்காம் புலவர் ''நாமெல்லாம் வெளியூர் செல்வோம்
நடுவில் காட்டில் இருக்கும் குமணரைப்பார்த்து விவரத்தைச்சொல்வோம் "
நடுவில் தளபதியின் நுழைவு ....
தளபதி '" என்ன புலவரே எங்கே கூட்டமாக கிளம்பிவிட்டீர். "
புலவர்களில் ஒருவர் -----"நாங்கள் காட்டிற்குச்செல்கிறோம் "
தளபதி "ஐயோ காட்டில் புலிகள் நடமாடுமே ! அந்த இடமா செல்கிறீர்கள்.ரொம்ப பயமாக இருக்குமே."
புலவர் --" இங்கிருந்து என்ன பயன் ? எங்களுக்கு
ஒரு மரியாதையில்லை .கொடுங்கோல் ஆட்சியின் புலியவிட காட்டில் இருக்கும் புலி
எத்தனையோ மேல்"
மூன்றாவது புலவர் -" மிகச்சரியாகச் சொன்னீர்கள் .புலவரே "
திரை விழுகிறது
காட்சி மூன்று . அரண்மணை சீன்
அரசன் கைகளைப்பின்னால் கட்டியபடியே
முன்னும் பின்னும் நடக்கிறான் அப்போது
தளபதியின் பிரவேசம்
அரசன் ---என்ன தளபதியாரே வேகமாக இப்படி
ஓடி வருகிறீர்"?
தளபதி ---- மன்னா { வணங்குகிறான் }
மன்னா தங்களைப்பற்றி மிகவும் கேவலமாக
சில புலவர்கள் பேசினர் ."
அரசன் ----" அப்படியென்ன பேசினர்"?
தளபதி -- "உங்கள் ஆட்சி கொடுங்கோல்
ஆட்சியாம் . அதனால் எல்லா புலவர்களும் காட்டிற்குப்போய் தங்கள் சகோதரரைப் பார்க்கப்
போகிறார்களாம் '
அரசன் ---"தொலையட்டும் எனக்கு அவர்களது புகழ்ச்சிப்பாடல்கள் தேவையில்லை.
என் அண்ணன் தான் புலவர்களுக்கெல்லாம்
அள்ளி அள்ளிக்கொடுத்து நாட்டை
கவனிக்காமல் விட்டுவிட்டான் ..புலவர்கள் என்னைத்தூற்றினாலும் பரவாயில்லை ஆனால்
என் அண்ணனைபுகழ்வது என் உடலெல்லாம்
எரிகிறது சரி நீங்கள் இப்போது போகலாம் '
தளபதி ----"அரசே இனி இந்த மாளிகைக்குள்
எந்தப்புலவர் வந்தாலும் உள்ளே விடமாட்டோம்
விரட்டி விடுவோம் "
அரசன் -" -நல்ல யோசனை அப்படியே செய்யுங்கள்"
திரை விழுகிறது
காட்சி 4 காட்டு சீன் .. புலவர்கள் கூட்டம் ,
அரசன் குமணன் . காப்பாளர்கள் .
புலவர்கள் கையில் ஒருதட்டு ....அதில் அன்பளிப்பு
புலவர்கள் ---- அரசே எங்கள் அன்புக்காணிக்கையைப் பெற்றுக்கொள்ளுங்கள் "
தட்டை மன்னரிடம் நீட்டுகின்றனர்
குமணன் ----என்னை அரசே என்று சொல்லாதீர்கள் நான் நாட்டை விட்டுவந்து இன்று காட்டில் வசிக்கும் ஒரு சாதாரண மகன்
உங்களைப்போலவே ......"
புலவர் ---"மன்னா எங்கள் அன்பளிப்பை
புறக்கணிக்காமல் ஏற்க வேண்டும் "
குமணன் " தாங்கள் எல்லோரும் நான் இருக்கும்
இடம் தேடி வந்தது என் பாக்கியம் தான் ,"
தட்டை வாங்கிக்கொள்கிறார்
புலவர்கள் ---" வள்ளல் பெருமானே தாங்கள்
திரும்பவும் நாட்டிற்கு வந்து ஆளும் வாய்ப்பை
அந்த ஈசன் அளிக்க நாங்கள் பிரார்த்தனை
செய்வோம் "
திரை விழுகிறது
காட்சி 5 புலவர் பெருஞ்சித்திரனார் , குமணன்
காடு சீன்
குமணன் ---- "வாருங்கள் பெருஞ்சித்திரனாரே!
என்னைத்தேடி வந்துள்ளீர்கள். நான் தங்களுக்கு
என்ன செய்யட்டும் "?
புலவர் ----- அரண்மணையில் முதலில் வள்ளல் இருந்தார் . நிம்மதி இருந்தது .மகிழ்ச்சி இருந்தது
இப்போது அந்த இடத்தில் இதயமில்லாத ஒரு கொடுங்கோலன் அமர்ந்திருக்கிறான் "
குமணன்----"ஏன் வருந்துகிறீகள் ? என்ன ஆயிற்று "
புலவர் ---- மன்னா .வறுமை எனனைத்துரத்துகிறது .என் குழந்தைப்பாலுக்கு
அழுகிறது "
குமணன் ---புலவரே நான் ஆளும்போது நீங்கள்
வந்திருக்கக்கூடாதா ! பரவாயில்லை வேடர்கள்
கொடுத்த காணிக்கையில் சிலவற்றைத்த்ருகிறேன்
புலவரின் வீடு எப்போதும் சுபீக்ஷமாக இருக்க வேண்டும் .புலவர்கள் கண்கலங்குவது
நாட்டிற்கு நல்லதல்ல"
புலவர் ---- அரசே தாங்கள் திரும்பவும் வந்து
சிம்மாசனத்தை அலங்கரிக்க வேண்டும்
வாழ்த்துகிறேன் "
திரை விழுகிறது ,
காட்சி 6
அரண்மணை சீன் . அரசன் அமணன் புலவர்
பெருந்தலைச்சாத்தனார். சில காவற்காப்போன்
வாசலில் பெருங்கூச்சல் கேட்கிறது .
"பிடியுங்கள் பிடியுங்கள் அவையில் அனுமதியின்று ஒரு புலவர் நுழைந்துவிட்டார் "
மன்னன் ------ யார்நீங்கள் ?ஓ நீங்களா?
வாருங்கள் பெருந்தலைச்சாத்தனார் .........
காவலர் தடுத்தும் உள்ளே நுழைந்துவிட்டீரே!
வெட்கமாயில்லையா? இப்படி நீங்கள்
வந்திருப்பது எனக்கல்லவா அவமதிப்பு !"
புலவர் ஏதோ முணுமுணுக்கிறார் .
மன்னன் ------என்ன புலவரே என்ன மமதை உங்களுக்கு . என்ன முணுமுணுக்கிறீர்கள்?'
புலவர் ----" அரிமா இருந்த இடத்தில் இப்படி
நரிமா இருந்து ஆட்சி செய்கிறதே என்று சொன்னேன் "
மன்னன் ----- " என்ன திமிர் . என்ன ஆணவம்
பாட்டுப்பாடி பிழைக்கும் புலவனுக்கு இத்தனை
திமிரா! எல்லாம் என் அண்ணன் குமணன் கொடுத்த சலுகைதான் .அவனைத்தான் முதலில்
ஒழித்துக்கட்ட வேண்டும் . யார் அங்கே !
என் அண்ணனைக்கொன்று வருபோருக்குப்பொற்கிழி பரிசாக்கிடைக்கும் என
அறிவியுங்கள் '' மன்னன் வேகமாக உள்ளே செல்கிறான்
புலவர் ---- " என்ன பகை என்ன வெறுப்பு பேராசை நாட்டாசை பாசத்தையும் மறைத்து விட்டதா?
இதோ இப்பவே குமணனிடம் செல்கிறேன் .
இவனது வெறுப்பை ஒழித்துக்கட்டுகிறேன் "
திரை விழுகிறது
காட்சி 7,, காடு சீன் புலவர் பெருந்தலைச்சாத்தனார் குமண மன்னன் பாதுக்காப்பாளர்கள் .......
தன்னிடம் வந்து நிற்கும் புலவரை அப்படியே
அணைத்துக்கொள்கிறார் மன்னன் ,
குமணன்ந்---"பெருந்தலைச்சாத்தனாரே என்னிடம் கொடுக்க
ஒன்றுமேயில்லையே .என் தாயை இழநத
துக்கத்தை விட இந்தத்துக்கம் கடுமையாக என்னைப்பாதிக்கிறதே என்ன செய்வேன் "
புலவர் ----"மன்னரே தங்கள் சகோதரன் தங்கள் தலையைச்சிவி கொண்டுவருபவருக்கு பொற்கிழி தருவதாக அறிவித்திருக்கிறார் "
குமணன் ---ஆஹா என்ன நற்செய்தி என் நெஞ்சில் பாலை வார்த்தது போன்ற ஒரு செய்தி
என் தலைக்குப்பொற்கிழியா ? தயங்க வேண்டாம்
உடனே என் தலையைக்கொய்து அந்தப் பொற்கிழியைப்பெற்றுக்கொள்ளுங்கள்
என்னால் ஆன உபகாரம் உங்கள் வறுமையை
ஓட்டிக்கொள்ளுங்கள் "
புலவர் ----- மன்னா எனக்குகொரு யோசனை .....
எனக்கு தங்கள் தலை வேண்டாம் ஆனால்
உடைவாள் மட்டும் தாருங்கள் '
மன்னர் ----- ஏன் ? என் வாள் ஏன் உங்களுக்கு வேண்டும் ?'
புலவர் ---- ஒரு திட்டம் ஒன்று வகுத்திருக்கிறேன் அது தெய்வக் கிருபையினால் பலித்தால் நாட்டிற்கு மீண்டும் நல்லாட்சி அமையும் உங்கள் வாளை அமணனிடம் காட்டப்போகிறேன் அதன் பின் என்ன நடக்கும் என்பதைப்பார்க்கலாம் "
குமணன் தன் வாளைப்புலவரிடம் கொடுக்கிறார்,
திரை விழுகிறது ....
காட்சி 8
அரண்மணை சீன் .. அமணன் சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்க புலவர் முன்போலவே தடையை
மீறி உள்ளே வருகிறார்
அவர் கையில் இரத்தக்கறைப்படிந்த வாள் இருக்கிறது
மன்னன் --என்ன புலவரே அத்து மீறி போன தடவை நுழைந்த புலவரல்லவா நீர் ?இப்போது ஏன் வந்தீர் ,,,
ஆ இது என்ன?
புலவர் ----"-மன்னா இநத உடைவாளைப்பாருங்கள்
மன்னன் ---- "யாருடைய வாள் ? ஐயோ இது என்
அண்ணன் குமணனது ஆயிற்றே ! எப்படி இது உங்களிடம் வந்தது ?"
புலவர் ---உங்கள் அண்ணனிடம் போய் என் புலமையைக்காட்டினேன் அவர் எனக்குப்பரிசளிக்க ஒன்றுமில்லாததால் தன் தலையைக்கொய்து தங்களிடம்
தந்து பொற்கிழி பெறச்சொன்னார் .அதன்படியே தன் வாளையும் கொடுத்தார்''
மன்னன் ----கொய்தத் தலை எங்கே "?
புலவர் ------"வாசலில் நிற்கும் மூடு பல்லக்கில்
அவரது தலை இருக்கிறது "
மன்னன் ----ஐயோ என்ன காரியம் செய்துவிட்டீர்,புலவ்ரே
அண்ணா.... புலவருக்குப் பரிசுக்கொடுக்க உங்கள் தலையையே அர்ப்பணம் செய்துவிட்டீர்களே ! உங்கள் தலைக்கு விலைப்பேசிய பாதகன் நான் .மஹாபாவி நான் !
என் பேராசை இன்றோடு முடிந்தது . உங்களைக்கொன்ற பாவி நான். இனி இந்தக்குற்ற உணர்வுடன் என்னால் வாழமுடியாது நானும் உன்னுடன் வருகிறேன்."
ஒவென்று அழுதபடியே தன் உடை வாளை உருவிகிறான்
புலவர் ஓடிச்சென்று அவன்கைகளைப்பிடிக்கிறார்
புலவர் ---- நிறுத்துங்கள் மன்னரே உங்கள் தமையனார் உயிருடன் தான் இருக்கிறார் உங்கள் மனதில் இருந்த வெறுப்பு பொறாமையை அகற்ற நான் தான் இப்படி ஒரு நாடகம் ஆடினேன் என் நாடகமே வெறுப்பை ஒழித்துப்பாசத்தை வெளியில் கொணர்ந்துவிட்டது "
மன்னன் -----"-புலவரே மிக்க நன்றி பெரிய பாவம்
செய்யவிருந்த என்னைக்காப்பாற்றினீர்கள்
நீங்களே என் தெய்வம் இதோ ஓடுகிறேன் காட்டிற்கு .என் அண்ணனை அழைத்து அவருக்கு
இந்த அரியாசனத்தை மீண்டும் தந்துவிடுவேன்
இனி என் அண்ணனே இந்நாட்டு மன்னர் "
திரை விழுகிறது
Monday, April 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment