Monday, April 4, 2011

செல்வம் செழிக்க ஒரு சிலை

அநேகமாக சிங்கப்பூர், மலேசியா ,சீனா போன்ற நாடுகளில் எல்லா கடைகளிலும்
கொழுத்தத்தொப்பையுடன் ஒரு சிலை இருக்கும் இப்போது இந்தச்சிலை இந்தியாவிலும் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது .போன வாரம் ஒரு பெரிய
புடவைக்கடைக்குப்போயிருந்தேன் நுழைந்தவுடனேயே இந்தச்சிலையைக்
கண்டேன் .சீனர்களின் சீதனம் இது ,இந்தச் சிலையைப்பார்த்தபடி நின்றேன்
குண்டுச்செட்டியார் பொம்மைப்போன்று அழகாக ஒருதிண்டில் சாய்ந்தவண்ணம்
இருக்கிறது இந்தச்சிலை. செல்வங்கள் கொண்ட பையைத் தாங்கிய வண்ணம்
மிக அழகானப்புன்னகையுடன் காட்சியளிக்கிறது இந்தச்சிலையை செழுமைச்சிலை
என்று அழைக்கிறார்கள் அந்தச்சிலையைப்பார்க்க செல்வத்திற்குப்பஞ்சமில்லை
உணவுக்குப்பஞ்சமில்லை மகிழ்ச்சிக்குப்பஞ்சமில்லை என்று தோன்றுகிறது
நல்ல கொழுத்த சாப்பாடு மூன்றுவேளையும் சாப்பிட்ட வயிறாக பெரிய
தொப்பையுடன் காண வேடிக்கையாகவும் இருக்கிறது

"பெங்க்சுயி"யைச்சீனர்கள் மிகவும் நம்புகிறார்கள் இந்தச்செழுமைச்சிலை
பெங்குசுயியைச் சேர்ந்தது சீனர்கள் சிமபல் என்ற அடையாளச் சின்னங்களுக்கும்
உருவங்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் தருகிறார்கள் .பாண்டிச்சேரி அன்னை
எல்லாப்பொருட்களுக்கும் ஒரு சக்தி உண்டு என்று கூறுவார் .அதே போல்
சீனர்க்ளும் ஒவ்வொரு பொருளுக்கும் சக்தி உண்டு எனவும் அந்தச்சக்திக்கு
தகுந்தாற்போல் அதிர்வுகள் வெளிப்படுகின்றன என்றும் நம்புகிறார்கள்
இதை ஒட்டியே "பெங் சுயி" எனும் சீனப்பரம்பரை வாஸ்து செயல்படுகிறது
உத்திராக்ஷம் முத்து போன்ற பொருட்கள் நல்ல அதிர்வைத்தருகிறது
வன்மைக்கு உபயோகப்படும் கத்தி கோடாரி துப்பாக்கி போன்றவை பாதகமான
அதிர்வுகளை வெளிப்படுத்துகின்றன ..


சரி இந்தச்சிலையை வாங்கியப்பின் எப்படி வைக்க வேண்டும்? அதற்கும் ஒரு
நியமம் இருக்கிறது காரியலயத்திலோ கடைகளிலோ பார்க்கவருபவரின்
கண்ணில் படும்படி அமைக்கவேண்டும் நீங்கள் அம்ர்ந்திருக்கும் இடத்தின் பின் பக்கம் உயர்ந்த இடத்தில் இதை வைக்க வேண்டும் . பொருடகள் வாங்க வருபவராக இருந்தாலும் சரி , வேறு தொழில் ரீதியாகப்பேச வந்தாலும் சரி இந்தச்சிலை உங்களுக்குச்சாதகமாகவே முடிவைத்தரும் ,சாதகமான
அதிர்வலைகளைப்பரப்பி வியாபாரத்தை வளம்படுத்தும்

சரி வீட்டில் நாம் வைக்கவேண்டுமானால் எப்படி வைப்பது ?
தலைவாசல் கடந்து உள்வந்தவுடன் கண்ணில் படும்படி இந்தச்செழிப்புச்சிலையை அமைக்க வேண்டும்.
வீட்டில் ஷோகேஸ் இருந்தால் அதற்குள்ளும் எல்லோருக்கும் தெரியும்படி
அமைக்கலாம் .
ஒரு செழிப்புச்சிலை வாங்கித்தான் பாருங்களேன். உங்கள் வீட்டில் செல்வம் கொட்டப்போகிறது ...
நான் இன்னும் வாங்கவில்லை ......உங்கள் ரிஸல்டைப்பார்த்தப்பின் வாங்கலாம் என நினைக்கிறேன்

No comments: