Tuesday, July 1, 2008

சரளாதாசர்

அன்பு குழந்தைகளே ஒரிஸ்ஸா மாகாணம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ,அங்குப்
பேசும் மொழி ஒரியா இது அநேகமாக பெங்காலி போல் தான் இருக்கும்.இந்த ஒரிய மொழியில் ஒரு கவிஞர் பல கவிதைகள் எழுதி இருக்கிறார் தவிர வில்லங்க ராமாயணம் சண்டி புராணம் எழுதி இருக்கிறார் இவரை ஒரிஸ்ஸாவின் வியாசர் என்றே சொல்வார்கள் நம்
காளிதாசருக்கு நாக்கில் காளி எழுதியதுபோல் இவருக்கும் நாக்கில் அமபாள் சரளாதேவி வந்து
எழுதிவிட்டுச்சென்றாள் ,இவர்தான் திரு சித்தேஸ்வர் பாண்டா பின்னால் சரளாதாசர் என்று புகழ் பெற்றார் கூட்டுக்குடும்பத்தில் ஒருவனாக இவன் சிறுவயதில் இருந்தான் சிறுவயதில் படிப்பில் கவனம் செல்லாமல் ஒரு வேலையிலும் ஆர்வம் காட்டாமல் அப்பாவின் வசவுகளை அடிக்கடி வாங்கிக் கட்டிக் கொள்வான்
ஒருநாள் ஊரைச்சுற்றிப்பின் அவன் வீடு நுழைந்த போது எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு
இருந்தனர் "அம்மா எனக்கும் சாதம் போடு"என்றான்
"எங்கள் எல்லோருக்கும் வயிலில் வேலை நிறைய இருக்கு அதான் அவசரமாகப் போகிறோம்"
"நானும் வரேன் அப்பா"
:நீயா தண்டச்சோறு ஒரு வேலை ஒழுங்கா செய்யத் தெரியாது அங்கு வந்து என்ன
செய்யப்போகிறாய் .ஏதாவது பாடிக்கொண்டே இருப்பாய் ,அது கூட தனக்காத் தெரியாது என் அம்மா சொல்லித்தந்தப் பாட்டுக்கள் எல்லாம் "

சித்துவின் முகம் வாடியது "இல்லேப்பா நானும் வரேன்"
"சரி பேசாமல் சோறு கட்டிக்கொண்டு வயலுக்குப்போ ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சு உருப்படியாக அதையாவது செய்"
"அம்மா" என்றுச் சொல்லிக்கொண்டே அம்மாவை அணைத்தான் சித்து
"கவலைப்படாதே நம் குலதெய்வம் சரளாதேவி காப்பாற்றுவாள் நீதான் குலதெய்வம்
சரளாதேவிமேல் எவ்வளவு அழகாக்ப் பாடுகிறாய் அது அவர்களால் பாடமுடியுமா?
சரளாதேவி நிச்சியம் உனக்கு அனுக்கிரஹம் செய்வாள்?"
அவள் அவர்கள் என்றுக் குற்ப்பிட்டது சித்துவின் சகோதரர்களைத்தான் ,,,,,,,
சரி என்று சொல்லியபடியே சித்து வயலுக்குப் போனான் அங்குஅவன் நண்பர்கள்
"என்ன சித்து நீ வயல் வேலைகெல்லாம் வரமாட்டாயேஇன்று என்ன வந்திருக்கிறாய்?
"எல்லோரும் சந்தைக்குப் போய்விட்டார்கள் அதனால் நான் இங்கு வந்தேன்"

"சித்து உன்னைப்பார்த்தாலே எங்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான் ஒரே ஒரு பாட்டு பாடு .உன்
பாட்டைக்கேட்டுக்கொண்டே வேலைச்செய்தால் அலுப்பேதெரியாது இல்லையா?"

சித்து பாடப்பாட பறவைகள் அனுபவித்துக்கேட்டன.பின்னர் மாடுகள் அசைப்போட மறந்தன
உழவர்கள் மெய்மறந்து நின்றார்களவன் குலதெய்வம் சரளாதேவியும் மெய்மறந்துப் போனாள்
சங்கீதத்தில் அப்படியே லயித்துப்போனாள்,ஒரு கிண்ற்றின் திண்டில் அமர்ந்து அவள் ஒரு நேரத்தில் தாளமும் போட்டாள் சித்துவுக்கு தாளம் போடும் சத்தம் கேட்டது ஆனால் தரிசனம் கிடைக்கவில்லை
சட்டென்று பாட்டை நிறுத்தினான் சித்து,"ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்?"என்று கேட்டாள்
அவள்,பின் சொன்னாள் "பாடுப்பா அருமையாகப்பாடுகிறாய் ஒரு வரம் ஒன்று கேள்
தருகிறேன்"
"நீ என்ன பெரிய சரளாதேவி என்றநினைப்போ?வரம் எப்படித் தருவாய் ?"
"நான் சரளாதேவிதான் சித்து நீ என்னக்கேட்டாலும் தருகிறேன்"
சித்து யோசித்தான் இவளை எப்படி நம்புவது?என்று நினைத்து "நான் யோசித்துப் பின்னால் தேவைப்பட்டால் கூப்பிட்டு வரம் கேட்கிறேன் கூபிடும் போது வருவாயா?"என்றான்
"சரி சித்து நீ எபோ கூப்பிட்டாலும் ஓடி வருவேன் " என்று கூறி சரளாதேவி மறைந்தாள்

சித்து பாடிக்கொண்டே நீர் இறைத்ததால் மூங்கில் கிணற்றில் விழுந்துவிட்டது வீட்டிற்கு வந்து
மூங்கில் விழுந்துவிட்டதைச் சொன்னான் அவன் அப்பா அவனைத் திட்டி "எந்தக்காரியம் ஒழுங்காகச் செய்கிறாய் ?என்று ஒரு கம்பால் அடித்துவிட்டார்
"ஆ வலி தாங்கமுடியவில்லையே ! எங்கே என் சரளாதேவி வா எனக்கு வலித் தெரியாமல்
செய் " அன்புடன் அழைத்தான் அவளும் உடனே தோன்றினாள் வலி இல்லாமல் செய்து
பின்"சித்து என்னம் வரம் வேண்டும்" என்றாள் ,பின் "நானே முடிவு செய்து விட்டேன் உன் நாக்கை நீட்டு ?என்றாள் சித்து நாக்கை நீட்டியவுடன் தன் திரிசூலத்தினால் நாக்கின் மேல்
ஏதோ எழுதினாள்பின் சொன்னாள்" சித்து இனி நீ மாடுமேய்க்கும் சிறுவன் அல்ல உன் நாக்கில் வியாசர் வால்மீகிய
ும் குடிகொள்ளப் போகின்றனர் ஒரியா மொழியில் பல இலக்கியங்களைப் படைப்பாய் மிக உன்னத நிலையை அடைவாய்
சரளாதேவியின் அருளால் பெரிய மேதை ஆனார் கவிஞர் ஆனார் சித்து. பெயரும் சரளாதாசர்
ஆனது

பல சமுதாயத்தொண்டுகளும் செய்தார் ஒரு நாள் அவரைத்தேடிஅந்த நாட்டு படை வீரர்கள்
வந்தனர்
"கவிஞரே வீட்டுக்கு ஒருவ்ர் போர் புரிய தேர்ந்தெடுக்கிறோம் வீட்டுக்கு ஒருவர் படையில் சேர மன்னரின் உத்தரவு திருவுளச்சீட்டின் படி உங்கள் பெயர் விழுந்து
இருக்கிறது. "
குடும்பத்தில் எல்லோரும் இவரின் முகம் கண்டு பின் "வேண்டாம் சரளதாசர் நீங்கள் கவி
படைக்கவும் .எங்களில் ஒருவர் போகிறோம் உன் கவிதைத் தொண்டுதான் முக்கியம் அது
தடைப்படக்கூடாது "
பின் என்ன?பல படைப்புக்கள் அவர்மூலம் வெளிவந்தன "மக்கள் கவிஞர் "இலக்கியத் தந்தை
என்ற பட்டங்கள் கிடைத்தன இன்றும் ஒரிஸ்ஸாவில் அவர் பெயருடைய பல ஸமஸ்தானங்கள் உள்ளன ,


அன்புடன் அம்மம்மா

No comments: