Tuesday, July 1, 2008

நான்கு திசையில் காளி

விக்ரமாதித்தன் என்ற அரசன் மிகச் சிறந்த காளி பக்தன் அவன் காளியிடம் மனம்
உருகிப் பிரார்த்தனைச் செய்யக் காளியும் அவன் முன் தோன்றினாள் அவனும் தான் ஆயிரம் ஆண்டுகள்
வாழ அரசு புரிய வரம் வேண்டினான் . காளிதேவியும் வரம்
கொடுத்தாள் அவனுக்கு தன் தம்பி பட்டியின் மேல் மிகப் பாசம் அவனும் பல்லாண்டுகள் வாழத் திரும்பவும் காளியைக் குறித்துத் தவம் இருந்தான்
காளியும் வந்தாள் பகதர் கூப்பிட்டால் ஓடியும் வருவாள் காளி ,,,தன் தம்பிக்கு இரண்டாயிரம் வருடங்கள் வாழ வரம் கேட்டான் .காளியும் அவனுக்கும் அருள் புரிந்தாள்
"காடாறு மாதம் நாடாறு மாதம் என வாழ்ந்தால் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி
செய்வாய் "எனக் கூறி மறைந்தாள் ஆதலால் ஆறு மாதம் வருடத்தில்
அவன் காட்டில் கழித்தான் அப்படி அலையும் தருணத்தில் தான் நான்கு
திசைகளிலும் காளி கோயில் கட்டினான் , திருச்சி மாவட்டத்தில் சக்திப்பெற்ற
பெரிய காளிக்கோயில்களைக் கட்டினான் உறையூர் வெக்காளிஅம்மன்
கோயில் தெற்கு திசைக் கோயில்
தொட்டியத்தில் உள்ள காளிகோயில் மேற்கு திசைக் கோயில் ,,,,,
சிறுவாச்சூரில் அமைந்துள்ள மதுர காளியம்மன் கோயில் வடக்கு த்சைக் கோயில்
திருச்சி சமயபுர மாரியம்மன் கோயிலுக்கு அருகே மஹாகாளிகுடியில் உள்ள
காளிக்கோயில் கிழக்குத் திசைக் கோயில் ,கேட்டதை வழங்கும் சிறப்புப் பெற்ற இந்த நாலுகோயில்களையும் நேரே போக முடியாவிட்டாலும்
மானசீகமாக வலம் வருவோம்
அன்புடன் விசாலம்

No comments: