அற இலக்கியத்தில் "ஏலாதி"மிகச் சிறப்பு உடையது , "ஏலாதி" என்றால்
ஏலம்+ ஆதி ,,அதாவது ஏலக்காயுடன் இலவங்கம் சிறுநாவற்பூ, சுக்கு ,மிளகு,
திப்பிலி என்ற ஆறும் சேர்ந்த ஒரு மருந்து இவைகளில் சிலவற்றை நாம்
மசாலா பொருள்களாக உபயோகிக்கிறோம் ,இந்த ஆறும் சேர்ந்த மருந்து உடல் பிணியை அகற்றுகிறது உடலைப் புத்துணர்ச்சிப் பெற செய்கிறது அது போல்
ஏலாதி செய்யுளில் ஆறு அருமையான கருத்துக்கள் அமைக்கப்பெற்றுள்ளன,இது மனநோயாகிய அறியாமைக்கு சிறந்த மருந்தாகிறது ,நம் அறியாமையைப்
போக்குகிறது ஆகவே இந்நூல் "ஏலாதி" என்ற பெயருடன் விளங்குகிறது இந்நூல்
82 செய்யுட்களைக் கொண்டது இது பதினென்கீழ்க் கணக்கில் ஒன்றாக
வருகிறது இதை இயற்றியவர் திரு கணிமேதாவியர், இவர் "கணிமேதை "
என்ற தொடரும் எழுதியிருக்கிறார் சோதிடத்திலும் வல்லவர் , இவர் சமய
சமணத்தைச் சார்ந்தவர் ,"திணை மாலை நூற்றைம்பது "என்னும் நூலையும்
இயற்றியுள்ளார் இவர் திரு மாக்காயனாரின் மாணாக்கர் ,,
இவர் இயற்றிய ஒரு செய்யுள்
சாதல் பொருள்கொடுத்தல் இன்சொல்புணர்வுவத்தல்,
நோதல் பிரிவில் கவறலே -- ஓதலின்
அன்புடையார்க்{கு] உள்ளன ஆறு குணமாக
மென்புடடயார் வைத்தார் விரித்து .
இதில் இவர் சொல்கிறார் ,நண்பர் இறந்தால் தாமும் அவருடன் இறத்தல்
அவர்களுக்கு வறுமை வரும் போது பொருள் கொடுத்து உதவி செய்தல்,
துன்பம் வந்த போது இனிய சொற்களைப் பேசுதல் நணபர்களுடன்
கலந்து பேசி அவர்கள் துன்பத்திலும் பங்குக் கொள்ளுதல் பிரிந்தக் காலத்தில்
உள்ளம் கலங்குதல் ,,,,,,,,இந்த ஆறு குணங்களையும் நண்பர்களை உயிருக்குயிராய் நேசிப்பவர்கள் பெற்றிருக்கவேண்டும் ,,,இவைகள்
பெற்ற நண்பர்கள் மென்மையான் சான்றோர்கள் ,,,,,
இவைகளில் எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறான் ஆனால்முதலாக்ச்
சொல்லிய சாதல் அதாவது நண்பர் இறந்தவுடன் தானும் இறத்தல் என்பது
எந்த அளவு சரி என்று தெரியவில்லை அந்த நண்பனின் குடும்பத்தைக்
காப்பாற்றலாமே ,இதற்கு வேறு அர்த்தம் உள்ளதா என்றும் தெரியவில்லை நான் சாதல் என்பதற்குக் கொண்ட பொருள் சரிதானா
என்றும் தெரியவில்லை
Tuesday, July 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment