Tuesday, July 1, 2008

ஆடிசம் குழந்தை

சுகந்தி தனக்கு ஒரு தம்பி பிறக்கப்போகிறான் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்
படிப்பு பாட்டு நடனம் என்று எல்லாவற்றிலும் முதலிடம் பெற்று புகழுடன் விளங்கினாள் சர்தார்படேல்வித்யாலயாவில் அவள் பங்கு பெறாத இடமே இல்லை அவள் தம்பியும் பிறந்தான் ஒன்பது வருடம் இடைவெளிக்குப் பின் ,,,கொள்ளை ஆசைதான் அந்தத் தம்பிப்
பாப்பாவின் மேல் ,,நாளாக் நாளாக அந்தக் குழந்தையிடம் நார்மல் குழந்தைப் போல் இல்லாமல் சில மாற்றங்களைக் கண்டாள் அதனின் தாய் ,,குழந்தை நிகிலைக் கைத்தட்டிக்
கூப்பிட அது தன் உலகத்தில் இருந்தது அந்த அம்மா காட்டிய சிவப்புக் கலர் பொம்மையோ அவள் கொஞ்சும் குரலும் நிகிலுக்கு விளங்கவில்லை ஸ்பூனால் பால் கொடுத்தலும் சில சமயம் முழுங்கத் தெரிந்தது சில சமயம் வெளியே வழிந்தது அதன் அக்கா சுகந்தி
"நிகில் குட்டி நான் பாட்டு பாடுவேனாம் நீ கைத்தட்டி சிரிப்பாயாம் என்று பல சினிமா மெட்டுக்களைப் பாட அதன் விழிகள் வேறு எங்கேயோ நிலைதிருந்தது என்ன பரிதாபம் ஒன்பது வருடம் கழித்து வந்த ஆண்குழந்தை ,உணர்ச்சியே இல்லாமல் தனக்கு என்று ஒரு தனி உலகம் செய்து வாழுகிறானே ,,,,,பெற்றோர்கள் மனம் நொந்தனர் டாக்டரிடம் போய்
பரிசோதனைச் செய்ததில் அதற்கு ஆடிசம் இருக்கிறது என்று தெரிய வந்தது மூளைக்குப்
போகும் பல நரம்பு மண்டலங்கள் ந்யூரான்ஸ் அதைக் கொண்டு சேர்க்கும் நரம்புகளும் செல்களும் பழுது பட்டிருக்கின்றன் என்று டாகடர் சொன்னார் அவ்வளவுதான் அந்த முதல்
ரேங்க் வரும் அக்கா மனம் ஒடிந்து படிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக கவன்ம் இல்லாது
ஏதோ பறிக்கொடுத்தாற்போல் இருக்கிறாள் ,
அந்தக் குழந்தை நிகிலுக்கு வயது 5 ஆகியும் ஒரு மாற்றமும் இல்லை ஆனால் உடல் மட்டும் ராஜகுமாரன் போல் அழகாக வளர்ந்திருக்கிறது
ஒரு நாள் அந்தக் குழந்தையை அழைத்து அவனது அம்மா கைப்பிடித்தபடி தெருவைக்கடக்க
திடீரென்று எதிர்பாராத விதமாய் நிகில் அம்மாவின் கையை உதறிவிட்டு ஓடினான் அந்தச்
சமயம் பார்த்து ஒரு கார் வந்து கீரீச்சென்று பிரேக் போட்டு நின்றது உள்ளே இருந்தவன்
"என்ன அம்மா நீங்கள் என்ன யோசனையில் வருகிறீர்கள் குழந்தையைக் கூட பார்த்துக்
கொள்ள முடியவில்லை விபத்து ஏற்பட்டால் மட்டும் கோர்ட் கேஸ் என்று வந்துவிடுவீர்கள்"

என்று கன்னாபின்னா என்று கத்தினான அந்தத் தாய் மனம் கலங்கி குழந்தையின்
ராமாயணத்தை திரும்பவும் கூட்டம் நடுவில் சொல்லத் தயங்கி வந்து விட்டாள் அந்தத் தாய்
பிஎச் டி படிக்கிறாள் {எகனாமிகஸ்}காலேஜில் பெரிய பதவி வகிக்கிறாள்
விட்டில் குழந்தைப் பார்த்துக்க்கொள்ள ஒரு தனி பெண்மணியை அமர்த்தவேண்டி இருந்தது இல்லாவிட்டால் பால்கனியிலிருந்து கூட குதிக்கும் வாய்ப்பு உண்டு இந்த ஆடிசம்
வருவதற்கு காரணங்கள் என்ன ?கர்ப்பம் தரித்தவுடனேயே இது பற்றி தெரிய வாய்ப்பில்லையா
இது போல் குழந்தைகள் 25 வயதுக்கு மேல் இருக்காது என்கிறார்களே அது உண்மையா?
நம் டாக்டர் ச்ங்கர் இதற்கு பதில் அளிப்பார் ,,
இந்தக்குழந்தை யாருமில்லை என் அக்காவின் பேரன் தான் ,,,,,பார்க்க மனது மிகவும்
வருந்துகிறது ஆண்குழந்தைப் பிறக்காதா என்று ஏங்கி பின் பிறந்தக்குழந்தையால் வீட்டில்
எல்லோரும் நிம்மதி இழந்து தவிக்கின்றனர் ,,,,blood group சேரக்கூடாதது சேர்ந்து விட்டால் வரும் பிரச்சனையோ ,

அன்புடன் விசாலம்
,,,

No comments: