Friday, December 19, 2008

ஆசாரக்கோவை

சில காரியங்களைச் செய் சிலகாரியங்களைச் செய்யாதே என்று நம் முன்னோர்கள்
நமக்கு பலதடவைகள் எடுத்துக் கூறியதைக்
கண்டிருக்கிறோம் ,வடமொழிகளில் இன்னன்ன ஆசாரங்களை பின் பற்ற வேண்டும்
என்பதைச் சொல்வது ஸ்மிருதிகள் ,,நாம் அப்போது ஏன் எதற்கு என்று கேட்காமல்
பின் பற்றினோம். அதனுள் ஏதாவது நன்மை இருக்கும் ஏனென்றால் அனுபவஸ்தர்கள்
சொல்வது என்று நினைத்து நம்பினோம் இதைப் போல் பண்டைக்காலத்தில்
ஆசாரக்கோவை என்னும் நூல் எதைச் செய்யவேண்டும் எது ஆகாது என்று
விவரித்திருக்கிறது ,இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் .இவர்
வடமொழியிலும் திறைமைப்பெற்றுள்ளார் .ஆனால் இவரது ஆசாரக்கோவையில்
வெண்பாக்கள் நீரோட்டம் போல் தெளிவாக ஓடுகிறது.
நூறு வெண்பாக்கள் இருக்கின்றன சில இரண்டு வரிகளும்
சில ஐந்து அடிகள் வரையிலும் காண்ப்படுகின்றன .
எப்படி நிலத்தில் நல்லவிதைப்போட நல்ல விளைச்சலோ அதே போல் நம்
வளர்ச்சிக்கு ஒழுக்கம் என்ற நல்ல விதைப்போட நல்ல
மனிதனாக உயர்கிறான் ,இதுதான் "விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?
என்ற பழமொழி சொல்கிறது
ஆசாரக்கோவை என்ன சொல்கிறது ,,,,,,,,

"நன்றிஅறிதல் பொறை உடமை இன்சொல்லோடு
இன்னாத எவுயிர்க்கும் செய்யாமை .கல்வியோடு
ஒப்புறவு ஆற்ற அறிதல் :அறிவுடமை
நல் இனத்தரோடு நட்டல் : இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து '

பிறர் நமக்குச்செய்த நன்மையை மறவாமல் இருக்கவேண்டும் அறியாமைக் காரணமாக
பிறர் நமக்குச்
செய்யும் துன்பங்களைப் பொறுத்துப்போவது ,எப்போதும் இனிமையாகப்பேசுவது
கடுஞ்சொற்களை அகற்றுவது ,
எந்த உயிர்களுக்கும் தீமை செய்யாதிருத்தல் அவைகளுக்கு வருத்தம் அளிக்காமல் இருத்தல்
உலக நடப்புக்கு ஏற்றார்போல் பின் பற்றுவது எதையும் நன்றாகச் சிந்தித்து
செயல்படுவது உண்மைக் காணும்
அறிவைப்பெறுவது ,அறிவு கல்வி நல்லொழுக்கம்
கொண்ட கூட்டத்தாரோடு நட்பு வைப்பது ஆகியவைகள்
நம் வளர்ச்சிக்கு நல்ல விதைகளாகும்
காலையில் எழுந்தது முதல் செய்யும் எல்லா காரியங்களும் எப்படி செய்ய
வேண்டும் என்று இந்த ஆசாரக்கோவையில் எழுதப்பட்டிருக்கிறது

பிருந்தாவன துவாதசி

கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியின் மறு நாள் பிருந்தாவன துவாதசி ,
மஹாராஷ்ட்ராவில் இதை மிகப் பிரபலாமாக துளசி விவாஹமாகக் கொண்டாடுவார்கள்
,அவர்கள் பெண்களுக்கும்
பிருந்தா துளசி விருந்தா என்ற பெயர்கள் வைப்பார்கள் தனி வீடு இருந்தால்
நிச்சியம் துளசி மாடம் இருக்கும் ,அத்ற்கு காவி பூசி கோலம் போட்டு
வாழைமரங்கள் நட்டு பின் மாலைகளுடன் அலங்கரித்து வழிபடுவார்கள்
துளசியுடன் கூட நெல்லிமரத்தின் சிறு
கொம்பையும் நட்டு வைப்பார்கள் இன்றைய நாளில் தான் திருமாலை
மணந்துக்கொண்டதாக ஐதீகம் பெண்களுக்கு மங்கல்ப்பொருட்கள் தந்து இனிப்பு
பண்டங்களும் வழ்ங்குவார்கள்
கர்நாடகாவிலும் இந்த வழிபாடு உண்டு ,துளசி துதிகள் சொல்லி
பின் கற்பூரம் காட்டி வழிபடுவார்கள்
ஒரு துளசி ஸ்லோகம்

ஜகத்தாத்ரி நமஸ்துப்யம் விஷ்ணோச்ச பிரியவல்லபே
ய்தோ பிரஹ்மாதயோ தேவா: ஸ்ருஷ்டிஸ்தித்யந்த காரிண:

நமஸ்துளசி கல்யாணி நமோ விஷ்ணு ப்ரியே சுபே
நமோ மோக்ஷப்பிரதே தேவி நமஸ்ஸம்பத் பிரதாயினீ

நம்ஸ்தே துளசி தேவி ஸ்ர்வாபீஷ்ட பலப்பிரதே
நமஸ்தே த்ரிஜகத் வந்த்யே நமஸ்தே லோக ரக்ஷிகே

திருவிண்ணகர் என்ற ஒப்பிலியப்பன் கோயில் துளசி வனமாக இருந்தது ,அந்த
வனத்தில் ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷி தனக்கு மகாலட்சுமியே பெண்ணாக
அவதரிக்க வேண்டும் என்று வரம் கோரி தவம் இருந்தார் ,துளசியும் தனக்கு
திருமகள் போல் திருமாலுடன் இருக்கும் பாக்கியம் வேண்டும் என்று
வேண்டினாள். இருவரது கோரிக்கையும் ஒப்பிலியப்பன் தலத்தில் நிறைவேறியது
மார்க்கண்டேயருக்கு பூமிதேவியாக ஒரு துளசிச்செடியின் கீழ் குழந்தை
உருவில் கிடைக்கப்பெற்றாள்.
திருமாலும் துளசியை தனக்கு உகந்தப்பொருளாக ஆக்கிக்கொண்டதால்
திருமால்திருமேனியை எப்போதும் அலங்கரிக்கும் பாக்கியம்
துளசிக்குக்கிடைத்தது ,துளசிசெடியின் கீழ்
தான் ஆண்டாளும் அவதரித்தாள் ,அவளும் பூமி தேவியின் அம்சம்தான்
துளசிச்செடியில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கிறார்கள்,துளசி செடி
வாசலில் வைக்க பாம்பு போன்ற ஜந்துக்கள் உள்ளே நுழையாது துளசியைப்பூஜிக்க
அந்த வீட்டில் என்றும் மங்களம் உண்டாகும் ,,துளசி இலைகளை மாலையில்
பறிக்கக்கூடாது ,,,

சக்தியைச் சேமிப்போம்

டிசம்பர் 14 சக்தியைச் சேமிக்கும் நாள் energy conservation day
இந்த நாளை நாம் மிக முக்கியமான நாளாகக்கொண்டு நம்மால் முடியும் வரை
சக்தியைச் சேமிக்க வேண்டும் இந்த பூமியிலேயே நமக்குத் தேவையான சக்திகள்
அனைத்தும் உள்ளன நீர்மின்சக்தி ,,அணுமின்சக்தி என அனைதையும்
உருவாக்கியது மனித ஆற்ரல் என்ற சக்திதான் ,
இல்லத்தரசிகள் கேஸ் அடுப்பை தேவைக்கு அதிகமாக உபயோகிக்காமல்
சேமிக்கலாம் சிலர் தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு டிவி கீழ் அமர்ந்து
விடுவார்கள் அது கொதித்து பாதி ஆனவுடன் பின் வந்து அணைப்பார்கள் சிலர்
தோசை வார்க்கும்
தவாவை பெரிய அளவில் வைத்து அதில் சிறிய தோசை வார்ப்பார்கள் ,சின்ன தவா
வைத்தாலே தேவையான் சூடு பரவும் ,
பர்னரின் அளவு இருந்தால் நன்றாக இந்தச் சக்தியைச் சேமிக்கலாம்,
சில ஆண்கள் ஷேவிங் செய்த்துக்கொள்ள குழாயைத் திறந்து விட்டபடி
தொடருவார்கள் ,அத்துடன் செல்லிலும் பேசுவார்கள்
தண்ணீர் போனபடி இருக்கும் ,,,,,,,இதே போல் பலதடவைகள் குழாய் திறந்து
விட்டபடி வந்து பக்கெட் ரொம்பி வழிந்துக்கொண்டிருக்கும் போது ஞாபகம்
வந்து மூடுவார்கள் ,,,சிலர் மேலே தண்ணீர் ஏற மோட்டார் போட்டு விட்டு
பின் அந்த டேங்க் ரொம்பி வழிந்து கீழே கொட்ட பின் முழித்துக்கொள்வார்கள்
சில தெருவில் பகலிலும் விளக்கு எரியும் ,,அதை அணைக்க மறந்து இருக்கலாம்
இதே போல் மனிதர்கள் இல்லாத அறையிலும் சுழல் காற்றாடி
சுழன்றுக்கொண்டிருக்கும் ,கணினியோ கேட்கவே வேண்டாம் அதை சிலர் அணைப்பதே
இல்லை. மைக்ரோஅவனில் தேவையான
அளவுடன் கண்ணாடி பாத்திரம் வைக்க நிறைய சக்தி சேமிக்கலாம் ,
வீட்டு வாசலில் மரங்கள் இருந்தால் நல்ல காற்று வருவதால் மினசாரச் சக்தி
சேமிக்கலாம் ,
தில்லியில் பஹுவாய் மந்திர் கட்டிருக்கும் வித்ம் மிக வியப்பைத்
தருகிறது தாமரை மலர் போன்று அமைப்பு ஒரு இடத்திலும்
மின்சாரம் இல்லை சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம் ,,,,,
உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம் உள்ளே மிகவும் சில்லென்று ஏசி
போட்டாற்போல் இருக்கிறது இது நல்ல வெயில்
கால்த்திலும் தான் ,,,,,,,,,,எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளி

இந்தச் சக்தியைச் சேமிக்கும் போது நம்மிடம் இருக்கும் சக்தியையும்
சேமிக்கலாமே படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம் கோபத்தில் சக்தியை
இழக்கிறோம் ,காமத்தில் சக்தி
அதிகமாக போகிறது ,அதிக மௌனமாக இருந்தால் அதில் சக்தி சேமிக்கப்பட்டு பல
நல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது,
ஜே.வி செர்னே சொல்கிறார்
"ஆற்றல் சக்தியை நாம் பயன்படுத்தி வெற்றிபெற் வார்த்தைகள்
வாகனங்களாக உள்ளன . "செய்து முடிப்பேன்" என்ற வாகனத்தில்
ஏறிக்கொண்டால் அடக்கமுடியாத ஆர்வத்துடன் கூர்ந்து செயல்
வடிவில் ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நோக்கிச் செல்லலாம் வானத்தைத் தொட்டுவிடலாம் "

சக்தியைச்சேமிப்போம் ,,,,,,,,,

அன்புடன் விசாலம்

)

Reply


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.


டாக்டர் சங்கர் எழுதிய முதல் திருப்பாவையைப் படித்துப் பாடியும்
பார்த்தேன் இதை ஏன் எழுதுகிறேன் என்றால் இந்தத் திருப்பாவைக்கு ஒருவர்
பல நல்ல பொருட்களைச் சொன்னார் இதில் இத்தனை விஷயங்களா என்று மலைத்து
நின்றேன்
அவர் மேடையில் பேசியதில் பாதிதான் என் மண்டையில் நின்றது பாதி
மறந்துவிட்டது இருந்தாலும் ஞாபக்ப்படுத்தி எழுதுகிறேன்
மார்கழி ஒரு சிறந்த மாதம் இது தேவர்களின் உஷாக்காலம்
இது நமது பிரும்ம முகூர்த்த காலம் இந்தக்காலம் தத்வ நிலைக்கும்
தவநிலைக்கும் ஏற்றது ,
திங்கள் என்றால் மாதம் , சந்திரன் மதி நிறைந்த என்றால்
நம் புலன்களை அடக்கி உள் நோக்கிப் பார்த்து அந்த நாரயணனைக்
காண்பது ,,,,,,,நன்னாள் என்பது மிகச் சிறந்த நாள்,,, அதாவது தெய்வ பணி
செய்ய எல்லாமே மிகச் சிறந்த நாள் தான் ,
"நீராட போதுவீர் " இங்கு நீராட்டம் என்றால் கிருஷ்ணரின் அனுபவ
நதியில் நீராடி அதில் மூழ்கி குளித்து ,,,,அதன் ஆனந்தத்தைப்
பெறுவது ,,,, கிருஷ்ண அனுபவமே நீராட்டம் ,இந்த நீராட்டத்தை
பெற தகுதி இருக்கிறதா ? ஆம யாருக்கு கிருஷ்ணாமிருதத்தில்
நீராட ஆசையோ அவர்கள் எல்லோரும் சேரலாம்,
அதாவது அதற்கு விருப்பம் ஒரு தகுதி ,உண்மையான பக்தி
இருந்தால் போதும் கீதையில் கண்ணன் ஒரு துளசி இலை வைத்தாலே போதும் நான்
வந்து விடுவேன் என்கிறார் ,ஆகையால் கண்ணன் விரும்புவது தின்பண்டம் இல்லை
உண்மையான் ப்கதி
சிரத்தையே ,,,,,
சிறுமிகள் என்றால் ஐந்து வயதிலிருந்து ஆரம்பிக்கும் வயது ,செல்வசிறுமிகள்
,,,என்றால் அவர்களுக்கு கண்ணன் என்ற
மிகப் பெரிய செல்வம் இருக்கிறது
கூர் வேல் கொடுந்தொழிலன் ,,,,,,,,,நந்த கோபர் முதலில் மிகவும் சாது
வாகத்தான் இருந்தார்,பின் குட்டிக்க்ண்ண்னைக் கொல்ல ஒருவர் மாறி ஒருவராக
அசுரர்கள் வர ,தன் அருமைப்புதல்வனைக் காக்க கூர் வேலைப் பிடித்துக்கொண்டு
கண்ணின் இமைப்போல்
அவனைக் காத்தாராம் நந்தகோபர்,
ஏரார்ந்தக்கண்ணி யசோதை ,,,,கண்ணனைப் பார்த்துப்பார்த்து மகிழ்ந்த
யசோதையின் கண்களும் மிக அழகாக ஆனதாம்
"என்ன தவன் செய்தனை அடி யசோதா எங்கும் நிறைந்த பரபிரும்மம் அம்மா
என்றழைக்க " என்ற பாடல் இந்த இடத்தில் பொருந்துகிறது
"இளஞ்சிங்கம் ,,," சின்ன பாலகன் ஆனால் கொன்றதோ அசுரர்களை ,,ஒரு
கட்டைவிரலால் உதைக்க சக்டாசுரன் மரிக்கிறான் பூதனை ஸ்தனங்களை உரிய அவளும்
சாய்கிறாள் இதனால் தான் இங்கு கண்ணனை ஆண்டாள் இளஞ்சிங்கம் என்று
பாடுகிறாள்
கார்மேனி ,,மேகன் போன்ற மேனி ,, மேகம் பிரதிபலன் பார்க்காமல் மழையைப்
பொழிகிறது தராதரமும் பார்ப்பத்தில்லை
"கதிர்மதியும் போல் முகத்தான் " வருகிற பக்தர்களுகெல்லாம் அருள்
புரிகிறார் ஒரு கண் சூரியன் ஒரு கண் சந்திரன் ,,,,,ஒன்று உஷ்ணம்
மற்றொன்று குளிர்ச்சி ,,இது எப்படி சாத்தியம்?
நரசிம்ம அவதாரத்தில் ஹிரண்யனைக்கிழித்தக்கோபம் அத்துடன் பிர்ஹ்லாதனின்
ஸ்தோத்திரத்தில் குளிர்ச்சி ,,,,இப்படி இரண்டும்
கலந்தது "கதிர்மதியம்"
"நாராயணனே நம்க்கே பறைத் தருவார்"
ஆண்டாளை ஒரு ஏகாரச் சீமாட்டி என்பார்கள் சிலர்
இங்கும் நாராயணனே என்றும் நம்க்கே என்றும் பாடுகிறாள்
அதாவது நாராயணன் மட்டுமே நமக்கு அதாவது இந்த நோம்பு நூற்கும் நமக்கே
மோட்சம் கொடுப்பார் அவனே கதி என்று நினைக்கும் நம்க்கு அவன் தான் ரட்சகன்
,
இந்த நோன்பு நூற்கும் அதிகாரிக்கு ஆசை வேண்டும் அடைய வேண்டியது நாரயணன்
செய்ய வேண்டியது நிதய கைங்கர்யம்
கிடைக்கபெறுவது அவனின் திருவடி"

என் மனதில் நின்ற சில்வற்றை எழுதினேன் ,,,,,,,,,,ஒருதிருப்பாவையில்
இத்தனை உள்ளர்த்தங்கள் பொதிந்து தேனாம்மிருந்தமாக இருக்கிறது
,,,,,,சூடிக்கொடுத்த நாச்சியாருக்கு என் வணக்கங்கள் பல ,,,,,,
அன்புடன் விசால்ம் ,,,,

கல்லும் முள்ளும் கலுக்கு மெத்தை

ஸ்வாமியே சரணமய்யப்பா,,,,,,,,,,

"பள்ளிக்கட்டு சபரிமலைக்க்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" என்ற
கோஷங்கள் கேட்கின்றன குருஸ்வாமி வழிக்காட்ட பகதர்கள் பின் செல்கின்றனர்
முதலில் போகும் இடம் எரிமேலிபேட்டை
இங்கு பகதர்கள் பேட்டை துள்ளல் செய்கிறார்கள் இந்த இடத்தில் தான் ஸ்ரீ
மணிகண்டன் மகிஷியுடன் போர்செய்தான் இதை நினைவுகூரும் நிகழ்ச்சிதான் இது,
அவர்கள் பாடும் பாட்டு நமையும் பாடவைக்கிறது "ஸ்வாமியே அய்யப்ப ,அய்யப்ப
ஸ்வாமியே ,,சுவாமி திந்தக்க தோம் தோம் ஐயப்ப திந்தக்க தோம் தோம் என்ற
கோஷத்துடன் பாடல் , ,,,,,,,

பேட்டைத்துள்ளிக்குப்பின் எரிமேலி சாஸ்தா பின் வாபரின் தரிசனம்
,,,,,அதன் பின் காட்டு வழி தொடங்குகிறது

அவர்கள் ஒரு நாள் தங்குவது பம்பாநதி தீரத்தில் தான் , இந்தப்
பம்பா நதியை தக்ஷிண கங்கை என்றும் கூறுகிறார்கள் ,
இது மிகச் சிறப்பு வாய்ந்த இடம் ஏனென்றால் ஐயப்பனைப் பிறக்கச் செய்த
இடமல்லவோ ? ஈசனும் மோகினி அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணுவும் தங்கள் சக்தியை
ஒன்று கலக்கச் செய்து ஹரிஹரனை உண்டாக்கிய இடம் ,அதோடு மட்டுமல்ல! பந்தள
ராஜா குழந்தை ஹரிஹரனைக் கண்டு எடுத்த இடமும் இதுதான் .
இங்கு குளித்து பின் பூஜை செய்தப்பின் பக்தர்களுக்கு கிடைக்கும்
சாப்பாட்டை "பம்பாசத்தி" என்கின்றனர் வடை பாயசத்துடன்
சக்கைவரட்டி எரிசேரி ஓலன் , அவியல் , என்று பல ஐட்டங்கள்
இருக்கும் சரியான பிறந்த நாள் விருந்துதான் .இந்த விருந்திலே
சாதி இல்லை பேதமில்லை பண்க்காரரென்று இல்லை ஏழையென்றும் இல்லை ,எல்லோரும்
ஒரே குலம் எல்லோரும் ஒரே இனம் என்றபடி அமைகிறது ,தவிர ஐயப்பனும் பகதர்
வடிவில் வந்து அமர்ந்து "சத்தி"saddhi}உண்வாராம் ஆகையால் எல்லா
பக்தர்களும் தம் அருகில் அமர்ந்திருப்பது ஐய்யப்னோ என்று எண்ணி மகிழ்ந்து
போவார்கள்.
இதற்கு சமைப்பது இலேசல்ல ,,எத்தனைக் கூட்டம் ,,,அன்னதானம் நடந்தபடியே
இருக்கும் ,இதற்கென்று மூட்டப்பட்ட விறகின் சாம்பல் மகா பிரசாதமாக ஆகி
வினியோகிக்கப்படுகிறது இதனால் வளர்க்கும் அடுப்புக்கள் 108 ,,இந்த
அடுப்புச் சாம்பலை அல்லது பஸ்மத்தை பிரசாதமாக கன்னிசாமி வீடு எடுத்து
வரவேண்டும்
ஹரித்துவாரில் கங்கா மாதாவுக்கு மாலை ஆர்த்தி காட்டுவார்கள்
ஒவ்வொரு அகல் விளக்கோ அல்லது பனை ஓலையில் விளக்கோ ஏற்றி ஆர்த்தி முடியும்
தருவாயில் அவைகளை கங்கை நதியில்
மிதக்க விடுவார்கள் ஒரே சமயத்தில் நூறுகண்க்கான விளக்குக்ள்
மிதந்துப்போவது கண்கொள்ளாக்காட்சிதான் ,,அதேபோல் இங்கும்
மூங்கிலால் செய்யப்பட்ட சிறு சப்பரங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து
நதியில் விடுவார்கள்,இவரது இருமுடிகளை ஐய்யப்னாகவே நினைத்து அவற்றுக்கும்
தீபபராதனைச் செய்து
பின் தலையில் ஏற்றி வைப்பார் ,,,,,,,
பமபா நதி பார்க்க மிக அழகு ,,,கோயிலுக்கு போக முடியாதவர்கள்
பமபா நதி தீரத்திற்காவது அவசியம் போக வேண்டும் சபரி மலைக்குப் போகும்
ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சிறப்பைக் கொண்டுள்ளது ,,,,அங்குப் போக
அனுஷ்டிக்கும் நியதிகளால்
ஒரு ஒழுங்குமுறை , மனத்தூய்மை எல்லாம் ஒன்றாக நினைக்கும் பக்குவம்
எல்லாம் வந்துவிடுகிறது ஒரு வேளை சாப்பாடு பின் பலகாரம் என்பதில் சீரண
சக்தி சீராக இயங்குகிறது ,படாடோபம்
அஹங்காரம் மறைகிறது ,தேகப்பயிற்சி போல் நிறைய நடை இருப்பதால் உடல்
சீராகுகிறது ,மனம் ஒருமைப்படுகிறது ,
ஞாபகச்சக்தி பெருகுகிறது ,

குரு பெயர்ச்சி

குரு பகவனை பிரஹஸ்பதி என்றும் அழைப்பதுண்டு இவர் தேவர்களுக்கெல்லாம் குரு
, மிக நுண்னிய அறிவைக்கொண்டவரும்
கல்வி கேள்விகளில் மிக சிறந்தவர் என்பதால் பிர்ஹஸ்பதி என்றும் பெயர் .
ஸ்ரீ தீட்சதர் நவகிரஹ கிருதியில் பிரஹஸ்பதே என்று அடாணா ராகத்தில்
குருவின் வர்ணனை மிக அழகாகச்
செய்திருக்கிறார்,இவருக்கென்று அமைந்த மிகச் சிறப்பு பெற்ற ஆலயங்கள்
ஆலங்குடி , மாயவரம் அருகில் அமைந்திருக்கும் திட்டை பின் செனையில்
பாடியில் இருக்கும் அலயம் திருவலிதாயம் ,,,,,குரு பகவன் பூசித்த
திருத்தலம் திருச்செந்தூர்
இவருக்கு ஒரு துதி

" மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க்கரசன் ,மந்திரி
நறைசொரி கற்பகம் பொன் னாட்டினுக் கதியனாகி,
நிறைதனம் சிவிகை மண்னில் நீடுபோகத்தை நல்கும்
இறையவன் குரு வியழன் இருமலர்ப்பாதம் போற்றி"

குருவின் காயத்ரி
விருஷ்ப த்வஜய வித்மஹே
கிருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு: பிரசோதயாத்.


குரு பகவான் 6ம் தேதி முற்பக்ல 10-25க்கு பெயர்ந்து மகர லக்னத்திற்கு
வருகிறார் ,மகரம் குருவுக்கு நீச வீடு
ஸ்தான பலம் பலவீனமடந்ததால் பார்வை பலத்திற்கு முக்கியத்தவம் அதிகம் உண்டு .
நற்பலன் அதிகம் கிடைக்கும் ராசிகள்
ரிஷ்பம் கடகம் கன்னி

மிதமான பலன்கள் அடையும் ராசிகள்
தனுசு மீனம்

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

மேஷம் , மிதினம் சிம்மம் துலாம் விருச்சிகம் மகரம் குமபம் ,

சில பரிகாரங்கள்

குருவின் ஸ்தலங்கள் ஆல்ங்குடி திட்டை சென்று அபிஷேகம் செய்யலாம்
வயதானவர்களுக்கு குருபோன்றவர்களுக்கு மஞ்சள் வஸ்திரம்
தம்பதியாக இருந்தால் மஞ்சள் புடவை ரவிக்கைத்துணியுடன் தனம் செய்யலாம்
வியாழன் அன்று நெய் விளக்கு ஏற்றலாம்
குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு ஆகையால் எண்ணெயில் தங்கப்பொருளை
நனைத்து பின் வேண்டிக்கொண்டு
தீபம் ஏற்றலாம்
பிரதொஷத்தின் போதும் நெய் விள்க்கு ஏற்றி சிவதரிசனத்தை நந்தி மூலம் தரிசிக்கலாம்
குருவின் கோலம் போட்டு வாமனாவதாரம் படிக்கலாம்
குரு பெயர்ச்சியின் போது குருவை வணங்கி நலம் பெறுவோம்

அன்புடன் விசாலம்

Thursday, November 6, 2008

மொழிப்பிரச்சினை நட்பில் முடிந்தது

நமக்கு பல மொழிகள் தெரிந்திருந்தால் மிகப் பலன்கள் உண்டு,என்னுடைய
அனுபவத்தை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.ஒரு சமயம் எங்கள் பள்ளி
மாணவ மாணவியர் குழுவுடன் தில்லியிலிருந்து கன்யாகுமரி வரை
அழைத்துச் சென்றோம். எல்லோரும் ஹிந்தி பஞ்சாபி பேசுபவர்கள்தான்
ஆகையால் அங்கு நான் தான் ராணி . அவ்வளவு மரியாதை ஏன் என்றால்
தமிழ் .மலையாளம் தெரிந்த ஒரே பெண்மணி நான் தான் .தவிர தெலுங்கும் புரியும்
.ஆகையால் ஒவ்வொரு நிமிடமும் என் உதவி அவ்ர்களுக்குத்
தேவைப் பட்டது.,,எழுவதுக்கும் மேல் மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டதால் முழு போகியையும்
புக் செய்து பேனரும் கட்டி கதவை அடைத்து வைத்தோம் உள்ளே
மாணவர்கள் கொம்மாளம் போட அது எங்கள் வீடாகிவிட்டது நாங்களும்
சிறிது கண்டிப்புடன் .முழு சுத்ந்திரம் கொடுத்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சி. ரயில் விஜயவாடா, வந்தது சில மாணவர்கள் சில தின்பண்டங்கள்
வாங்க கீழே இறங்கினார்கள் கதவு திறந்திருந்தது அப்பொது ஒரு தெலுங்கு மாணவன் உள்ளே ஏறினான் கீழே நின்ற ஒரு பெண்ணையும் கூப்பிட்டான் "இக்ட ரண்டி .,,,இக்ட ரண்டி" ஒரு வினாடிதான்
திடீரென்று எங்கள் பள்ளி மாணவன் அந்தத் தெலுங்கு பையனைப் பிடித்து, அவன் காலரையும் பிடித்து "மொத்து மொத்து" என்று மொத்தத்
தொடங்கினான் அந்த சத்தம் கேட்டு நாங்கள்{ஆசிரியர் குழு} நான் தான்
அங்கு அவர்களது வலது கை .அருகில் போனேன் கைக் கலப்பு
நின்றது,அந்த ஹீரோக்கள் வெற்றியுடன் என்னைப் பார்த்தனர் .
"ஏன் அவனை இப்படி மொத்துகிறாய் "
"இல்லை மேடம் அவன் நம் பெண்களைப் பார்த்து ,,,,,,,,,,
"ஏன் நிறுத்திவிட்டாய்? மேலே சொல்லு"
அவன் சொன்னான் "கெட்டவார்த்தைகள் சொன்னான் "
என்ன சொன்னான்?அதைச் சொல்லு "
"ரண்டி என்று சொன்னான் நம் சகோதரிகளைப் பார்த்து அவன் சொன்னால் நான் சும்மா
விடுவேனா மேடம் ?
அந்தத் தெலுங்கு பிள்ளை திரு திருஎன்று மொழி தெரியாமல் முழித்தான்
பின் என்னை பரிதாபமாகப் பார்த்தான் என்னைக் காப்பாற்றுங்கள் என்று
கூறாமல் கூறியது அவன் கண்கள். நான் கூறினேன்
"அட பைத்தியமே தெலுங்கில் ரண்டி என்றால் "வாருங்கள்" என்று அர்த்தம் இக்ட என்றால் இங்கே என்று அர்த்தம் அவன் தன் உறவினரை அப்படி அழைத்திருக்கிறான் என்றேன் ,
ஒ அப்படியா மாப் கர்னாஜி ஸோ ஸாரி என்று அவனை அப்படியே அணைத்துக் கொண்டார்கள் அவர்கள் .
ஆமாம் ஹிந்தியில் ரண்டி என்றால் என்ன? வேச்யா என்று பொருள்
கெட்ட அர்த்தத்தில் உபயோகிப்பார்கள் இதை அந்தத் தெலுங்கு மாணவனுக்கும் விளக்கினேன் அழுகையை நிறுத்தி விட்டு விழுந்து விழுந்து சிரிக்கலானான்.. பின் என்ன? அந்தப் பையன் அரைகுரை ஆங்கிலத்தில் போடு போட நட்பு தொடர்ந்து சீட்டு கச்சேரியில் முடிந்தது
அவன் இறங்கும் இடம் வந்ததும் கைக் குலுக்கி கீழே இற்ங்கி அவனை அனுப்பி வைத்த விதம் மனதைத் தொட்டது
மொழிதெரியாத பிரச்சனை எதில் கொண்டுவிட்டது பாருங்கள்
ந்ல்ல வேளை நான் இருந்தேனோ அவன் பிழைத்தான் இல்லாவிட்டால் சினிமாவில் வரும் ஹீரோ வில்லன் சீன் தான்.

வேரொரு சம்பவம் சொல்கிறேன் .ஒரு பாலக்காடு கல்யாணம் சாப்பிடும் சமயம் என் அருகில் ஒரு மலையாளி பெண் நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம்
அப்போது இருட்டிக் கொண்டு மழை ஆரம்பமாயிற்று
:"ஒ தூற்றல் போடுகிறதே என்று நான் இழுத்தேன்,,,
எந்தா இங்கன பரையுன்னது ஊணு கழிக்காம்போது. "ஒருமாதிரி முகம்
மாற்றிக்கொண்டாள். அதன் அர்த்தம் தெரிந்த்துக் கொண்டபின் எனக்கே
ஒரு மாதிரித்தான் இருந்தது .

எல்லா மொழியையும் வரவேற்போம் விரும்பிக் கற்போம் .ஆனால் தாய் மொழிக்குத்தான்
முதலிடம் .வாழ்க தாய் மொழி ,,,விசாலம்

மனிதன் எங்கே போகிறான்

மனிதன் எங்கே போகிறான் ?

மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை,
ஆனால் நெறியிலிருந்து தவறுவதில்லை.
புலி பசித்தாலும் புல்லைத் தின்பதில்லை
பசுவோ பால் கொடுக்க தவறுவதில்லை.
தண்ணீரோ மேலிருந்து கீழே பாய தவறுவதில்லை.
உரியக்காலத்தில் பழங்களோ பழுக்கத் தவறுவதில்லை
மல்லிகை தன் மணத்தை மாற்றிக் கொள்ளவுமில்லை.
இயற்கை தன் கடமையிலிருந்து தவறினதில்லை.
ஆனால் ஆறரிவு பெற்ற மனிதன் தவறிவிட்டானே.

எதையே தின்கிறான் .
எதையோ உடுக்கிறான்
எப்படியோ வாழ்கிறான்.
கட்டுப்பாட்டை உடைக்கிறான்
தன் இஷ்டப்படி ஆடுகிறான்
மிருக இனத்திற்குப் போகிறான்
தாழ்ந்த மட்டத்தையும் அடைகிறான்.
பணத்திற்குப் பின் ஒடுகிறான்
தெய்வ்த்தை தேட மறுக்கிறான்.
சத்யத்தை நழுவ விட்டான்
அன்பையும் உதறி விட்டான்
தெய்வம் போன்ற பெற்றோர்களை
முதியோர் இல்லத்தில் போடுகிறான்
எங்கே போகிறான் மனிதன்?
என்று திருந்துவான் மனிதன்?

இன்பமும் துன்பமும்

அழகான புத்தகம் என் எதிரில் ,
பல படங்கள் எதிர் சுவரில் ,
அழகான சூரியோதயம் ஒரு படம் ,
கண்ணீர் விடும் குழந்தை மறு படம்,
நான் சென்றது ஒரு கலைக்கூடம்,
அங்கு கற்றுவந்தது ஒரு பாடம்
பிரித்துப் பார்த்தேன் ஒரு புத்தகத்தை,
கண்கள் ரசித்தன ஒரு சித்திரத்தை,
பஞ்சவர்ணகிளி தன் சிகப்பு அலகுடன்,
சிவப்பு பழத்தைக் கொத்தியது அழகுடன்,
என் மனம் நிறைந்தது,
இலேசாகப் பறந்தது,
கலைப் பூரித்தது,
அடுத்தப் பக்கம் புரட்டினேன்,
என் கண்கள் குத்திட்டு நின்றன .
ஒரு பயங்கர சிறுத்தை,
அதன் கண்களில்தான் என்ன கொடூரம்.
அதன் கோரைப்பற்கள் நடுவில்
அழகு புள்ளிமானின் கழுத்து
உயிருடன் பிடித்த பெருமிதம்
உயிருக்குப் போராடி உயிர் விட்ட மான்.
முதல் படத்தின் அழகுதான் என்ன?
அடுத்த சித்திரத்தின் அகோரம்தான் என்ன?
இதுதான் வாழ்க்கையின் சாரமோ?
இதுதான் கடவுளின் விருப்பமோ/
அழகு அகோரம்.இன்பம்,துன்பம்,
மாறி,மாறி வருவது அவனது சித்தம்,
வெப்பம் .தண்மை விருப்பு,வெறுப்பு,
போன்ற எதிர்ப்பதம் வாழ்க்கையின் சுழலோ?
வெயிலின் அருமை நிழலுக்குத்தெரியும்,
கடவுளின் வேதாந்தம் சுவைக்க,சுவைக்கப் புரியும்,
இன்பத்தையும்.ரசித்துப் பார்,
துன்பத்திலும் இன்பம் பார்,
இரண்டிலும் சமத்துவம் பார்.
வாழ்க்கையில் பூரணத்துவம் பார்.

வரதட்சிணை பேய்

வரதட்சிணை என்ற பேய் ,
என்னைத் துரத்தி துரத்தி வருகிறதே,
பேராசைப் பிடித்த அம்மாக்கள்,
சுயநலமிக்க கணவர்கள்,
அதைத் தட்டிக்கேட்காத அப்பாக்கள்,
ஆ,,,,என் கண் முன்னே சுழல ,
சினிமாப் படம் போல் சுற்றிச் சுற்றி வருகிறதே.

முதல் காட்சி,
பெண் பார்க்கும் படலம் ,,,என்னைத்தான்,
ஒரு ஆணழகன் வந்தான் ,
கூடவே ஒரு கூட்டம் ,
பஜ்ஜி, ஸொஜ்ஜி தட்டுகளில்
சுடச் சுட காபி என் கையில்
பொம்மைப் போல் என் அலங்காரம்
இயந்திரம் போல் நமஸ்காரம் ,
என் அழகை ரசித்த பல கண்கள்
கேட்டதோ எண்பது ப்வுன் நகை
என் மனதில் எழுந்ததோ எரியும் புகை
சீர் என்ற பெயரில் பலவரிசை,
காட்டினார்கள் தன் கை வரிசை,
இடிந்துப் போனார் என் அப்பா,
ஒடிந்துப் போனது என் மனமும் தான்


காட்சி இரண்டு ஆரம்பம்,

வந்தான் அம்மாவுடன் ஒரு செல்லப் பிள்ளை,
சாவி முடுக்கிய பொம்மையானேன்,
ஒரு போலிப் புன்னகை என் முகத்தில்
இனிப்பு காரம் என் கையில் ,
ஸல்வார் .கமீஸில் என் அலங்காரம் ,
வணங்க மறுத்தது என் மனம்
சிலைப் போல் நின்றேன் ஒரு ஒரத்தில் ,
மனம் அசைப் போட்டது ,
நான் பாஸா, பெயிலா?தீர்வு என்ன?
"ரொம்பத்திமிர் இந்தப் பெண்"
முணுமுணுத்தா'ள் ஒரு மாது
மனத்தில் பாரம் அழுத்தியது,
அதேபாட்டு .அதே பல்லவி,
"வரதக்ஷிணை ஒன்றும் வேண்டாம்,
ஆனால் "பிஸினஸுக்குப் பணம் வேண்டும்
முதல்வனைவிட மிஞ்சிவிட்டான் .
கேட்டும் விட்டான் பல லட்சங்கள்.
உடைந்துப் போனாயே அப்பா நீ,
எப்படி உதவி செய்வேன் நான்

மூன்றாவது காட்சி ஓடுகிற்து
சகோதர சகோதரியுடன் வந்தது ஒரு குடும்பம் ,
பழக்கூடையுடன் வாசனைக்கதம்பம்
சாந்தம் அன்புடன் ஒரு தோற்றம்
திருமணச்சிலவுடன் சிறு ஏற்றம்

அப்பாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி,
என் தோற்றத்தில் ஒரு கவர்ச்சி.
"உங்கள் வீட்டுப் பெண்,
எங்கள் வீட்டு செல்லம் ,
சொன்னாள் என் வருங்கால அத்தை ,
பின்னால் தெரிந்தது எனக்கு
நான் விழுந்தது ஒரு பள்ளம்,,
அம்மாவின் படத்திற்கு மாலையிட்டேன்
அவன் எனக்கு மாலையிட்டான் .


நான்காவது காட்சியின் க்ளைமேக்ஸ்,

நாலு மாதங்கள் ஒடிவிட்டன.
ஆபீஸ் தொலைவு ஒரு கார் தேவை,
தொடர்ந்தது நச்சரிப்பின் உச்சம்
முளையிட்டது வெறுப்பின் ஆரம்பம்
என் இன்பக்கதவு மூடியது
வாழ்க்கையில் மேகம் சூழ்ந்தது

"மாப்பிள்ளை கார் கேட்கிறார்"
நெஞ்சம் அழுதது குரல் கொடுத்தேன்
காரும் வந்தது ஒரு மாதத்தில்
ஆனால் ஏறி அமர பிடிக்கவில்லை
உயிர் போக மாடாய் உழைத்த
அந்த அப்பாவின் ரத்தமல்லவா?
என் வாழ்க்கையைக் காப்பாற்ற
ஒரு தியாகச்செம்மல் ஆகிவிட்டார்
முதல் வருடச் சீர் வரிசை
முதலைப் போல் விழுங்கியது
வாய் ஒடுக்கி வயிறு ஒடுக்கி
கடன் தொல்லையால் மனம் புழுங்கி
நடைப்பிணம் ஆனார் என் அப்பா.
பசுத்தோல் போற்றியப் புலிப் போல்
அமைந்துவிட்டது என் புகுந்த இடம்
"தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்"
என் அப்பா என் கண்முன் ஒரு ஏசு ஆனார்.
என் அப்பவின் எலும்பை எண்ணுகிறேன் ,
மனத்திற்குள் புழுங்குகிறேன்,
என் ந்ல் வாழ்க்கைக்காக
உன் வாழ்க்கைத் தியாகம் எனப்பா?
வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவத்திப்போல்,
என் வாழ்வு சிறக்க உருகினாயோ?


அப்பா வரதக்ஷினைப் பேய் என்னைத்
துரத்தித் துரத்தி வருகிறதே,,,,,,,,,,,

ஒரு ஆடு மனம் திறக்கிறது

ஆடி மாதம் வந்து விட்டால் ,
அம்மன் கோவிலில் கொண்டாட்டம்,
எங்கள் வாழ்க்கை ஒரு பந்தாட்டம்,
எங்கள் இனத்திற்குத் திண்டாட்டம் ,

என் வயிற்றில் புளியைக் கரைக்க,
என் மகனை நான் தேடுகிறேன் ,
இன்னும் எங்கே போனான் அவன் .
புல் மேய இவ்வளவு நேரமா?
திண்டாடிப் போனேன்
மனம் தவித்தேன்
ஓடி வந்தான் என் மகன் ,
கழுத்தில் பூ மாலை நெற்றியில் மஞ்சள் ,
கொம்பின் நடுவில் குங்குமம் .
அழகாக மின்னினான் .
"அம்மா ,எனக்கு பிறந்த நாளா?
ஏன் எனக்கு இந்த அலங்காரம்.?
மனதிற்குள் அழுதேன் அவனை நினைத்து
"மகனே உன் பிறந்த நாளில்லை இது
இன்று உன் மரண நாள்"
ஒன்றும் புரியாமல்.அவன் விழித்தான்
நான் மே,,,மே,,, என்று அலறினேன்,
காந்தியை அழைத்தேன் .கேட்டேன்
பார்த்தாயா? உன் அஹிம்சைக் கொள்கையை ,
கீழே இறங்க முடியாமல் மேலிருந்தே வேதனைப்பட்டார்,
புத்தர்.மகாவீரர் அன்னை தெரசா
என்ற பலபேர் வந்து வந்து போனார்கள்.
என் கண் முன்னே.,
அவர்கள் பரப்பிய அஹீம்சை எங்கே?
ஜீவ காருண்ய தத்துவம் எங்கே ?
மனிதனின் சுய நலத்திற்கு
எங்கள் கழுத்தில் கத்தியா?
உங்கள் விரதம் நிறைவேற்ற
எங்கள் உயிர் தேவையா/
பலி கொடுக்கும் மக்களே
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
போன உயிர் திரும்புமா
அதைக் கொடுக்கத்தான் முடியுமா?

விசாலம்

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

"ஹெப்பி வெட்டிங் டே அப்பா'
இது என் பெண்ணின் குரல்,
இனிமையான் குரல்,
அணைத்துப் பிடித்தேன்,
தேன்க்யூஎன் செல்லமே என்றேன்
என் மனைவியைப் பார்த்தேன்.
கன்னம் சிவக்க என் சாந்தி சிரித்தாள்,
சாந்தமான குணம்,
வீட்டில் அவளால் சாந்தி.
பத்து வ்ருடங்கள் முன்.
என் மனம் அசைப்போட்டது.

இதே தேதி.
உள்ளே நுழைந்தேன் ,
கட்டிலும்.மணக்கும் பூக்களும்
வா வா என்று அழைத்தன.
ஆனால் என் முகத்தில் சந்தோஷமில்லை,
ஆர்வமில்லை,சிரிப்பும் இல்லை,
இந்த நாள் இப்படியா?
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
வ்ந்தாள் என் கனவுக்கன்னி,
அருமைக்காதலி,
இன்று என் மனைவி.
எங்கள் காதல் ஒரு புனிதக்காதல்,
நான்கு வ்ருடங்கள் காத்தகாதல்
விரல் நுனிக்கூட் படாத காதல்
இந்த நாள் வருமா என்று ஏங்கிய காதல்


ஆனால் இன்று,
இந்த நாள் ஏன் வ்ந்தது ?
என் மன்ம் கனத்தது.
எதிர் காலம் இருட்டானது,
உள்ளேஇடி இடித்தது.
என் கனவுக்கன்னி சாந்தி அருகில் .
சற்று நேரம் மௌனம்
கடிகாரம் டிக்,டிக்,என்றசத்தம்
"எனக்கெல்லாம் தெரியும் "
மொழிந்தாள் அவள்
நான் அவள் கையில் முகம் புதைத்தேன்
கண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது
ஆண்கள் அழலாமா? நான் அழுதேன்
அவள் தடுக்கவில்லை.
"எப்படி இது........."
என் மேல் முழு நம்பிக்கை .
கிராமத்தில் வைரஸ் சுரம் வ்ந்தது
ஒரு ஊசிதான் ....முடிக்கவில்லை நான்
எப்போது தெரிந்தது?என் சாந்தி கேட்டாள்
ப்ளட் க்ரூப் டெஸ்ட்க்கு போன வாரம் ....
மேலே பேச முடியவில்லை
விம்மினேன்.
என் தலையைக் கோதினாள் அவள்
உங்கள் நிழல் போல் நான் இருக்கிறேன்,
கவலை வேண்டாம்"
என்ன அன்பு. என்ன பாசம்
பிரமித்து போனேன்.
"மனப்பொருத்தம் தான் முக்கியம் .
இனி நாம் பிரும்மசாரி{ணி]
வாழ்க்கை என்றபடகை
அன்பு என்ற தோணியால்
அமைதியாக ஒட்டலாமே"

நான் சிலைப்போல் ஆனேன்
அவள் எனக்குப் பராசக்தி ஆனாள்.
"அப்போது நமக்கு குழந்தை?
"காப்பகம் சென்று தத்து எடுத்து கொள்ளலாமே"

ஆமாம் என் எய்ட்ஸ்க்கு
அன்பு என்ற மருந்து தந்து.
எனக்கு உயிர் கொடுத்த சக்தி அவள்.
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
எனக்கு உயிர் கொடுத்த ரக்ஷகி அம்மா நீ
நான் என் நிலைக்கு வ்ந்தேன் .
நன்றியுடன் அவள் கையைப் பிடித்தேன் .
"ஹெப்பி வெட்டிங் டே அப்பா'
இது என் பெண்ணின் குரல்,
இனிமையான் குரல்,
அணைத்துப் பிடித்தேன்,
தேன்க்யூஎன் செல்லமே என்றேன் .
என் மனைவியைப் பார்த்தேன்.
கன்னம் சிவக்க என் சாந்தி சிரித்தாள்,
சாந்தமான குணம்,
வீட்டில் அவளால் சாந்தி.
பத்து வ்ருடங்கள் முன்.
என் மனம் அசைப்போட்டது.

இதே தேதி.
உள்ளே நுழைந்தேன் ,
கட்டிலும்.மணக்கும் பூக்களும்
வா வா என்று அழைத்தன.
ஆனால் என் முகத்தில் சந்தோஷமில்லை,
ஆர்வமில்லை,சிரிப்பும் இல்லை,
இந்த நாள் இப்படியா?
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
வ்ந்தாள் என் கனவுக்கன்னி,
அருமைக்காதலி,
இன்று என் மனைவி.
எங்கள் காதல் ஒரு புனிதக்காதல்,
நான்கு வருடங்கள் காத்தக்காதல்
விரல் நுனிக்கூடப் படாத காதல்
இந்த நாள் வருமா என்று ஏங்கிய காதல்


ஆனால் இன்று,
இந்த நாள் ஏன் வ்ந்தது ?
என் மன்ம் கனத்தது.
எதிர் காலம் இருட்டானது,
உள்ளேஇடி இடித்தது.
என் கனவுக்கன்னி சாந்தி அருகில் .
சற்று நேரம் மௌனம் .
கடிகாரம் டிக்,டிக்,என்றசத்தம்.
"எனக்கெல்லாம் தெரியும் "
மொழிந்தாள் அவள்
நான் அவள் கையில் முகம் புதைத்தேன்.
கண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது
ஆண்கள் அழலாமா? நான் அழுதேன்
அவள் தடுக்கவில்லை.
"எப்படி இது........."
என் மேல் முழு நம்பிக்கை .
கிராமத்தில் வைரஸ் சுரம் வ்ந்தது
ஒரு ஊசிதான் ....முடிக்கவில்லை நான்
எப்போது தெரிந்தது?என் சாந்தி கேட்டாள்
ப்ளட் க்ரூப் டெஸ்ட்க்கு போன வாரம் ,,,,,
மேலே பேச முடியவில்லை
விம்மினேன்.
என் தலையைக் கோதினாள் அவள்
உங்கள் நிழல் போல் நான் இருக்கிறேன்,
கவலை வேண்டாம்"
என்ன அன்பு. அன்ன பாசம்.
பிரமித்து போனேன்.
"மனப்பொருத்தம் தான் முக்கியம் .
இனி நாம் பிரும்மசாரி{ணி]
வாழ்க்கை என்றபடகை
அன்பு என்ற தோணியால்
அமைதியாக ஒட்டலாமே"

நான் சிலைப்போல் ஆனேன்
அவள் என்க்கு பராசக்தி ஆனாள்.
"அப்போது நமக்கு குழந்தை?
"காப்பகம் சென்று தத்து எடுத்து கொள்ளலாமே"

ஆமாம் என் எய்ட்ஸ்க்கு
அன்பு என்ற மருந்து தந்து.
எனக்கு உயிர் கொடுத்த சக்தி அவள்.
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
எனக்கு உயிர் கொடுத்த ரக்ஷகி அம்மா நீ
நான் என் நிலைக்கு வ்ந்தேன் .
நன்றியுடன் அவள் கையைப் பிடித்தேன் .

சிவகாசியில் "முத்து"

சிவகாசியில் "முத்துவேலுஅவன் வயது பதினாலு,அவன் பெயர் முத்துஒரு அழுக்கு நிக்கர்,மேலே கிழிஞ்ச பனியன்இதுவே அவனது உடை.புத்தாடைக்கு பணமே தடை ,கைகளில் ஒரு பரபரப்பு,,செய்யும் வேலையில் ஒரு சுறுசுறுப்பு .ஊசிவெடி சுருட்டுகிறான் ,மருந்தை உள்ளே அப்புகிறான்.சிவப்புத்தாளை ஒட்டுகிறான் .நூலுடன் சேர்த்துக் கட்டுகிறான்கையில் கிடைப்பதோ தினக்கூலி.சிலவு செய்ய ஒரு வேலி .அவனைச் சுற்றி ஒரு குடுமபம் ,வாழ்க்கையே அவனுக்குச் சிலம்பம்அவனது பட்டாசு பலரிடம் ,ஆனால் செய்தவனுக்கு ஒன்றும் இல்லை ,வாங்கித்தர தந்தையுமில்லை தாயிடமோ காசுமில்லை ஏன் என்று கேட்க யாருமில்லை ,பல கட்டுக்கள் அவன் முன்னால் ,ஏக்கப்பார்வை அதன் மேலே ,வருகிறது ஒருபெருமூச்சு ,ஏழையின் கதி இப்படி ஆச்சு

கல்லுடைக்கும் பாட்டாளி

கடும் வெயில் உனக்கு நிலவானதா?இல்லை இல்லை !உன் வயிற்றின் பசி அக்னிஆதவனையும் அமுக்கியதா?காலிலோ செறுப்புமில்லை ,காலும் கல்லானதா?மலைக்கு நடுவில் நீஉன் மனமே பறையானதா?கல்லை உடைக்கும் உன் கையும்உடைத்து உடைத்து இரும்பானதா?கருமமே கண்ணாகியதா?மனமும் ஒடிந்து போனதா?ஓ பாட்டாளியேகடும் வெயில் உனக்கு நிலவானதா?

விவேக சூடாமணி 2

இரண்டாம் பாகம் ,,,இந்த நான் என்பதற்கு சாதி இல்லை பேதமில்லை மொழி, நாடு, குணம் , குறைஎன்று ஒன்றும் இல்லை. நாம் உலகத்தில் நடக்கும் நாடகத்தில் ஒரு வேஷம்எடுத்து க்கொண்டிருக்க்கிறோம் ,அந்த வேஷம் போட்டுக்கொள்ள நிச்சியம் ஒருஉடல் தேவை ,இப்போது நாம் நடிகராகிறோம் மேடையில் அந்த வேஷத்துடன் நடிக்கிறோம் ,பின் நாடகம் முடிந்ததும் வேஷமும் கலைந்து விடுகிறது. இதே போல்தான் உலகப்பற்று,,,,,,,,முதலில் பற்றினால் ஒரு வேஷம் போடுகிறோம் ,அது ஒரு நாள் கலையத்தான்போகிறது , குருவின் தயவால் அவரின் உதவியால் இந்த வேஷம் கலைக்கப்பட்டுபின் ஆன்மாவை உணர்கிறோம் ,எல்லா வேதாந்தத்திலும் ஆரம்பத்தில் கயிறு ,பாம்பு உதாரணம் வரும் ,இருளில் ஒருவன் நடக்கிறான் ஒரு சாதாரணத்தாம்புக் கயிற்றைக் கண்டு பாம்பு எனநம்பி அலறுகிறான் பின் வெளிச்சத்தில் பார்த்தவுடன் அது கயிறாகஇருக்கிறது ,அதாவது ஞானஒளி வந்தவுடன் அவனுக்கு இது புரிகிறது , தெளிவுபிறக்கிறது ,அறியாமை என்ற இருளில் அவன் கயிறைப்பாம்பாக நினைக்கிறான் இதுதான் அவன் மாயையில்சூழ்ந்திருப்பது ,,,,,,,எப்போது ஒருவனுக்கு பற்று அகல்கிறதோ அப்போதுஞானமும் பிறக்கிறது அந்த ஞானம் பிறந்து விட்டால் என்றுமே ஆனந்தம் தான்துக்கம் அவனை அண்டுவதேயில்லை ,துக்கம் சுகம் ஏழை பணக்காரன் வெயில் குளிர் எல்லாமே அவனுக்குச் சமம் தான்"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்போருள்மெய்ப்பொருள் காண்பது அறிது "என்கிறார் திருவள்ளுவர் ,எந்தப்பொருளையும் அதன் உண்மைக்குணங்களை நன்கு உணர்ந்து பின் தான்செயல்படவேண்டும்உலகம் மாயையால் கவரப்பட்டிருக்கிறது அந்த மயக்கத்தில் நாம் விழாமல் பொருள்களின் உண்மையைப் புரிந்து வாழ்ந்தால் அதுவே ஞான வாழ்வாகும்.ஒரு பெரிய நீரோடையில் பனிக்கட்டி விழுகிறது.. அது மிதந்தபடி பல நாட்கள்அப்படியே இருப்பதில்லை .மெள்ள நீரில் கரைந்து அத்துடன் சேர்ந்து கலந்தும் விடுகிறது சங்கரர் சொல்கிறார் ." ஒரு கையளவு நீரை எடுத்து இதுதான் கரைந்த பனிக்கட்டி நீர் என்று சொல்லமுடியுமா? ஆன்மா பனிக்கட்டி என்றால் பிரம்மம் ஒரு கடல்,,பனிக்கட்டிப்போல் ஆன்மா பிரும்மத்துடன்கல்க்கிறது இதுவே "அஹம் பிரும்மாம்மி " நானே பிரும்மம் ,,,,,,,,,,

விவேக சூடாமணி

விவேக சூடாமணி என்பது ஆத்மாவின் தத்துவங்களைச் சொல்லும்நூல் ,இதை எழுதியவர் ஆதி சங்கரர் , இது அவரது முதல் ஆன்மீக நூல்.இதில்அவர் பாமர மக்களுக்கும் புரியும்படி மிகஎளிதாக எழுதியிருக்கிறார்,இதைப் படிக்கப்படிக்க ஆன்மீக வழிஎளிதாக அடைய முடியும் விவேகம் என்பதை இரண்டு விதமாகப்பிரயோகிக்கலாம் "அந்த மனுசன் ரொம்ப விவேகமான மனுசன் தான்" என்றும்"அவனுக்கு சின்ன வயதிலேயே விவேகம் வந்து விட்டது என்றும் கூறக்கேட்டிருக்கிறோம் இந்த அர்த்தத்தில் விவேகம் என்றால் அறிவு ,ஆன்மீகத்தில் விவேகம் என்பதற்கு உலகத்தில் இருந்தும் காணமுடியாத இறைவனைப்பற்றி உண்மைகளைத் தெரிந்துக்கொண்டு அதைப்பற்றிச் சிந்தித்துமேலும் பல உண்மைகளை அறிவது எனலாம் எது தவறு எது சரியானது என்றுசிந்திப்பதும் விவேகம் தான்சூடாமணிஎன்பது நம் எல்லோருக்கும் தெரியும், சிதாப்பிராட்டிஅந்த அனுமனிடம் தன்னுடைய சூடாமணியைத் தான் உயிருடன்இருப்பதைத்தெரிவிக்க ஒரு அடையாளமாகக் கொடுத்துஅனுப்பினார் ,இதற்கே 500க்கும் மேல் ஸ்லோகங்கள் உண்டுஎன நினைக்கிறேன்,பலர் இதற்கு பாஷ்யமும் எழுதியுள்ளனர்.இன்னும் ராஜஸ்தானிலும் குஜராத்திலும் இந்தச் சூடாமணி அணியும் வழக்கம்உள்ளது இது பலரககற்களால் ஆனது நவரத்தினங்களால் செய்யப்படும் ஒரு அணிகலன்,இதைதலையில் வகிட்டிலிருந்து ஆரம்பித்து நெற்றி அரம்பத்தில் படும்படியாகஅணிவார்கள் தலையில் தான் கடைசி சக்க்ராவான ஸ்ஹஸ்ராரா இருப்பதால் அதுமுக்கியமாக இருந்திருக்குமோஎன நினக்கிறேன்சூடாமணி தலையில் எப்படி பிரகாசிக்கமோ அதுபோல் விவேகச்சுடர்சூடாமணியைப்போல் பிராகாசிக்கிறதுஅதில் கூறிய கருத்துக்கள் ,,தெய்வத்தின் அருள் இருக்க ஒருவன் சத்சங்கத்தில் இருப்பான்சத்சங்கத்தில் இருக்க அவனுக்கு நல்ல குருவும் கிடைப்பார் , ஒரு நல்லகுரு கிடைக்க நல்ல எண்ணங்கள் உருவாகும் ,குரு எப்படி இருக்க வேண்டும்?அவர் நல்லெண்ணங்கள் மட்டும் கொண்டிருக்க வேண்டும் சொல்லிக்கொடுப்பதைக்கடைப்பிடிக்க வேண்டும் பாபச்செயலகள் செய்யாதிருத்தல் வேண்டும் .வேதங்களைக் கற்று ஓதி அதன் வழிநடக்கவும் வேண்டும் தீயஎண்ணங்கள் வரவிடாமலும் அப்படி வந்துவிட்டால்அதைச்சுட்டெரித்து மனதைவிட்டே நீக்க வேண்டும்இரக்க சுபாவம் மனித நேயம் கருணை நல்வழி இவைகளுக்குவழிகாட்ட வேண்டும்.துக்கம் சுகம் இரண்டையும் சமநிலையாகப்பாவிக்கவேண்டும் பிறர் சேவை செய்யவேண்டும் தன் நலமில்லாமல் இருக்கவேண்டும் பற்றை ஒதுக்குப்வராக இருக்க வேண்டும் இதே போல் மஹான்கள்இப்பவும் இருக்கிறார்கள்{ஆனால் நம்க்கு பக்குவம் போதாமல் அவர்களைக் கண்டுக்கொள்ள முடிவதில்லை ,போலி சாமியார்களினால் நம்பிக்கைகுறைந்து போகிறது என நினக்கிறேன் }அடுத்த நிமிடம் நம் வாழ்வில் நட்ப்பது என்ன்வென்று தெரியாதுஆகையால் நல்லகாரியத்தை இப்போதே செய்து விடு ஆசை யாரை விட்டது?ஆசைப்படலாம்,ஆனால் அதிக அளவு அதாவது பேராசைப்படாதே ." பேராசைபெருநஷ்டம்"ஆசைகள் ஓரளவு அந்தந்த காலங்களில் அனுபவித்தபின்னர் அதையும்விவேகத்தால் வராமல் பார்த்துக்கொள் ,வந்து விட்டால் தடைசெய்துவிடு நான் என்றச்சொல்லைக் கவனித்து அந்த நான் யார்?என்று சிந்தித்தல் வேண்டும் .கைவலி என்கிறோம் கை என்பதுநானா ,,,கால் வலி என்கிறோம் கால் என்பது நானா? கால் என்பது நானாகஇருந்தால் "நான் வலி "என்று ஏன் சொல்வதில்லை?"நான் தூங்கிவிட்டேன்என்பதில் தூங்கியது யார் ?என் கண்ணா அல்லது நானா ? இவைகளெல்லாம் சிந்திக்கச் சிந்திக்க நம்க்குவிடைக்கிடைக்கும் ,எல்லா விஷயங்களுக்கும்"நான் யார்?"என்ற கேள்வி கேட்க ஒரு நாள் ஞானம் வெளிப்படும்என்று விவேக சிந்தாமணி சொல்கிறதுஇந்த ஞானம் ஆரம்பத்தில் கொடுப்பது நல்ல குருதான் அவர்ஆசியுடன் கடவுள் சித்தமும் இருந்தால் தான் இந்த நிலை கிடைக்கும் .

Tuesday, October 14, 2008

மனதின் ஒருமைப்பாடே தியானம்

Compose Mail

Chat

vishalam raman

away
Status menu
AvailableAbdul Jabbar
AvailableAKR
AvailableAnna Kannan

http://annakannan-kavithaigal.blogspot.com
AvailableAsan Buhari

Share Points
Availablegiri vasan
AvailableJay Jayabarathan
AvailableTthamizth Tthenee
IdleSankar Kumar

தேவி திருக்கதை படியுங்கள்!
Idleseethaalakshmi subramanian
OfflineRaja Natesan
Options
Add Contact

Labels

Invite a friend

Give Gmail to:
94 left
Preview Invite
>
<
Sponsored Link
தமிழ கல்யாணம் - TamilMatrimony.Com/TamilMarriage - 11 Million தமிழ Brides, Grooms For திருமணம், Join Free!
« Back to Inbox
More Actions
‹ Newer 12422 of 12434 Older ›

manathin orumaipaade thyaanam.






Inbox
X









ஒம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய .
அன்னைக்கு சமர்ப்பணம்.
.தியானத்தைப்பற்றி பல பெரியவர்கள்.பல வழிகளில்கற்றுக் கொடுக்கிறர்கள்.அதவது சிதறிக்கிடக்கும் எண்ணங்களை,கொஞ்சம்.கொஞ்சமக் குறைத்து.கடைசியில் எண்ண ஒட்டங்களே இல்லாமல்,மனதை ஒருமைப் படுத்துவது.தியானம்.அப்போது நம் மூச்சு ஓட்டம் தான் ந்ம் கவனத்தில் வரும் ..நிறைய பயிற்சிக்குப்பின் அதுவும் மறையும்.இந்த நிலையை
அடைந்தால் பேரானந்தம் கிடைக்கும் என்கிறார்கள் .அதை அனுபவித்தவர்கள்.
இதற்கு முன் தியானம் செய்ய நம் உடலை அதற்கு தகுதி ஆக்கிக் கொள்ள வேண்டாமா?அழுக்கு உடல் மீது புது ச்ட்டைப் போட்டுக் கொண்டால் உள்ளே அழுக்கு போய் விடுமா?
மனதில் இருக்கும் அழுக்கை அகற்றினால்தான் தியானம் செய்யும் தகுதி நமக்கு ஏற்படும்.
எல்லாவ்ற்ருக்கும் மனம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.சுத்தமனம் .அசுத்தமன்ம் என்று இரண்டு வகை பிரிக்கலாம்.அசுத்த மனம் அதிகம் தத்தளிக்கிறது. இந்த தத்தளிக்கும் மனத்தை அடக்க உதவுவது தியானம் .அலை பாயும் மனம் தியானத்திற்கு ஒவ்வாது.
அழுக்கன் மனத்தில் எண்ணங்களின் ஒட்டம் ஒடிக்கொண்டே இருக்கும்.
கலங்காத நீரில் நிலவின் பிர்திபிம்பம் ந்ன்கு தெரியும் .ஆனால்கலங்கிய குட்டையில்
இருட்டுதான் நிலவும்."மனம் ஒரு குரங்கு ,மனித மனம் ஒரு குரங்கு"என்றபாடல் நினைவுக்கு வருகிற்துதாவிக்கொண்டே இருக்கும்.அதை நிருத்த அன்பு என்ற கடிவாளம் தேவை.
தின்சரி செய்யும் வேலையில் நாம் ந்ம்மை தியானத்திற்கு
தையார் செய்து கொள்ளலாம்.வீடு கூட்டும் போது நம் மனதிலிருக்கும் குப்பைகளையும் கூட்டிவிட்டோம் என்று
எண்ணுவோம்..மிக்ஸியில் அரைக்கும் போது நமது
அகங்காரம்.பொறாமை.போன்ற தீய குணங்களையும்
பொடிப்பொடியாக அறைத்து விட்டதாக எண்ண வேண்டும்
ரொட்டி வட்டமாக இடும் போது நம் உள்ளிருக்கும் அன்பு
சிறு வ்ட்டத்திலிருந்து பெரிதாக் வளர்ந்து கொண்டே
போகிறது என்று எண்ணலாம்.எந்த வேலை செய்தாலும்
கடவுளுக்கே என்று அர்ப்பணித்து சிரத்தையாக செய்தால்
அதனால் உண்டாகும் பலன்கள் பல.கோவில்களில் பிரசாதம் மணக்க பொங்கல்.புளியோதரை ருசி பார்க்காமல் செய்யப்படுகிறது.ஆனாலஅதனருசியோ தனிதான்.ஏன் ? எம்பெருமான் பிரசாதம் என்று அன்பு உள்ளத்துடன் செய்யப்படுகிறது.அதை சாப்பிடும் ந்மக்கு ஒரு கெடுதலும் வருவதில்லை.ஆனால் ந்ல்ல ஹோட்டலில் சாப்பிடும் போது சிலசமயம் வ்யிறு கெடுகிற்து.ஏன்?..சமைப்பவரின் எதிர் மறைவு எண்ணங்களால் வரும் அலைகள்.செய்யும் பதிவாகி நம்மை வ்ந்து அடைகிறதுஆகையால் எங்கும் அன்புதான் மூலகாரணம்.அதை எல்லா காரியங்களுக்கும் பயன் படுத்தவேண்டும்.எல்லோரையும் அன்புடன் பார்க்க
கடவுள் ந்மக்குத்தெரிவார். இந்த சூழ்நிலையை
வளர்த்தல் நாம் தியானம் செய்ய தகுதியாகிவிட்டோம்.
செய்யும் தொழிலே தெய்வம் என்று பேசுகிறோம்.அந்த வேலையை கோவிலுக்கு நுழைந்து செய்வது போல்
செய்தால் அவர்களுக்கு தியானம் நன்கு வரும்.
காலையிலும் மாலையிலும் மன உளைச்சல் இல்லாமல் ச்ஞ்சலமில்லமல் அமைதியாக் இருக்க பழக்கிக் கொள்ள வேண்டும்.மனதில் இருக்கும் சிந்தனை ஒட்டங்களை
சிறிது சிறிதாக் குறைத்து மௌனத்தைக் க்டைப்பிடிக்க
வேண்டும்.காலை .மாலயில்.நாம் செய்த ந்ல்ல காரியங்களையும் கெட்ட காரியங்களையும் கணக்கிட்டு செய்யத்தகாத காரியங்களை படிப்படியாக் குறைத்து
ந்ம் வாழ்க்கையை உயரும்படி செய்தால் அல்லது இதனால் நம் வாழ்க்கை தரம் உயர்ந்தால் நாம் தியானம் செய்ய தகுதியாகிவிட்டோம் ந்ம்க்குள் ஒரு அரிச்ச்ந்திரனோ,ஒரு புத்தரோ ஒரு துகாராமோ குடிகொண்டிருக்கவேண்டும்.ந்ம் மனதில் தேளுக்கும்
ஒர் பாம்புக்கும் அதாவது சாத்தான் போன்ற
குணங்களுக்கும் இடம் கொடுத்தால் எங்கிருந்து தியானம் வரும்? சரி இப்போது நாம் தையார் ஆகி விட்டோம்
தியானத்திற்கு. ..............................