Friday, December 19, 2008


)

Reply


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.


டாக்டர் சங்கர் எழுதிய முதல் திருப்பாவையைப் படித்துப் பாடியும்
பார்த்தேன் இதை ஏன் எழுதுகிறேன் என்றால் இந்தத் திருப்பாவைக்கு ஒருவர்
பல நல்ல பொருட்களைச் சொன்னார் இதில் இத்தனை விஷயங்களா என்று மலைத்து
நின்றேன்
அவர் மேடையில் பேசியதில் பாதிதான் என் மண்டையில் நின்றது பாதி
மறந்துவிட்டது இருந்தாலும் ஞாபக்ப்படுத்தி எழுதுகிறேன்
மார்கழி ஒரு சிறந்த மாதம் இது தேவர்களின் உஷாக்காலம்
இது நமது பிரும்ம முகூர்த்த காலம் இந்தக்காலம் தத்வ நிலைக்கும்
தவநிலைக்கும் ஏற்றது ,
திங்கள் என்றால் மாதம் , சந்திரன் மதி நிறைந்த என்றால்
நம் புலன்களை அடக்கி உள் நோக்கிப் பார்த்து அந்த நாரயணனைக்
காண்பது ,,,,,,,நன்னாள் என்பது மிகச் சிறந்த நாள்,,, அதாவது தெய்வ பணி
செய்ய எல்லாமே மிகச் சிறந்த நாள் தான் ,
"நீராட போதுவீர் " இங்கு நீராட்டம் என்றால் கிருஷ்ணரின் அனுபவ
நதியில் நீராடி அதில் மூழ்கி குளித்து ,,,,அதன் ஆனந்தத்தைப்
பெறுவது ,,,, கிருஷ்ண அனுபவமே நீராட்டம் ,இந்த நீராட்டத்தை
பெற தகுதி இருக்கிறதா ? ஆம யாருக்கு கிருஷ்ணாமிருதத்தில்
நீராட ஆசையோ அவர்கள் எல்லோரும் சேரலாம்,
அதாவது அதற்கு விருப்பம் ஒரு தகுதி ,உண்மையான பக்தி
இருந்தால் போதும் கீதையில் கண்ணன் ஒரு துளசி இலை வைத்தாலே போதும் நான்
வந்து விடுவேன் என்கிறார் ,ஆகையால் கண்ணன் விரும்புவது தின்பண்டம் இல்லை
உண்மையான் ப்கதி
சிரத்தையே ,,,,,
சிறுமிகள் என்றால் ஐந்து வயதிலிருந்து ஆரம்பிக்கும் வயது ,செல்வசிறுமிகள்
,,,என்றால் அவர்களுக்கு கண்ணன் என்ற
மிகப் பெரிய செல்வம் இருக்கிறது
கூர் வேல் கொடுந்தொழிலன் ,,,,,,,,,நந்த கோபர் முதலில் மிகவும் சாது
வாகத்தான் இருந்தார்,பின் குட்டிக்க்ண்ண்னைக் கொல்ல ஒருவர் மாறி ஒருவராக
அசுரர்கள் வர ,தன் அருமைப்புதல்வனைக் காக்க கூர் வேலைப் பிடித்துக்கொண்டு
கண்ணின் இமைப்போல்
அவனைக் காத்தாராம் நந்தகோபர்,
ஏரார்ந்தக்கண்ணி யசோதை ,,,,கண்ணனைப் பார்த்துப்பார்த்து மகிழ்ந்த
யசோதையின் கண்களும் மிக அழகாக ஆனதாம்
"என்ன தவன் செய்தனை அடி யசோதா எங்கும் நிறைந்த பரபிரும்மம் அம்மா
என்றழைக்க " என்ற பாடல் இந்த இடத்தில் பொருந்துகிறது
"இளஞ்சிங்கம் ,,," சின்ன பாலகன் ஆனால் கொன்றதோ அசுரர்களை ,,ஒரு
கட்டைவிரலால் உதைக்க சக்டாசுரன் மரிக்கிறான் பூதனை ஸ்தனங்களை உரிய அவளும்
சாய்கிறாள் இதனால் தான் இங்கு கண்ணனை ஆண்டாள் இளஞ்சிங்கம் என்று
பாடுகிறாள்
கார்மேனி ,,மேகன் போன்ற மேனி ,, மேகம் பிரதிபலன் பார்க்காமல் மழையைப்
பொழிகிறது தராதரமும் பார்ப்பத்தில்லை
"கதிர்மதியும் போல் முகத்தான் " வருகிற பக்தர்களுகெல்லாம் அருள்
புரிகிறார் ஒரு கண் சூரியன் ஒரு கண் சந்திரன் ,,,,,ஒன்று உஷ்ணம்
மற்றொன்று குளிர்ச்சி ,,இது எப்படி சாத்தியம்?
நரசிம்ம அவதாரத்தில் ஹிரண்யனைக்கிழித்தக்கோபம் அத்துடன் பிர்ஹ்லாதனின்
ஸ்தோத்திரத்தில் குளிர்ச்சி ,,,,இப்படி இரண்டும்
கலந்தது "கதிர்மதியம்"
"நாராயணனே நம்க்கே பறைத் தருவார்"
ஆண்டாளை ஒரு ஏகாரச் சீமாட்டி என்பார்கள் சிலர்
இங்கும் நாராயணனே என்றும் நம்க்கே என்றும் பாடுகிறாள்
அதாவது நாராயணன் மட்டுமே நமக்கு அதாவது இந்த நோம்பு நூற்கும் நமக்கே
மோட்சம் கொடுப்பார் அவனே கதி என்று நினைக்கும் நம்க்கு அவன் தான் ரட்சகன்
,
இந்த நோன்பு நூற்கும் அதிகாரிக்கு ஆசை வேண்டும் அடைய வேண்டியது நாரயணன்
செய்ய வேண்டியது நிதய கைங்கர்யம்
கிடைக்கபெறுவது அவனின் திருவடி"

என் மனதில் நின்ற சில்வற்றை எழுதினேன் ,,,,,,,,,,ஒருதிருப்பாவையில்
இத்தனை உள்ளர்த்தங்கள் பொதிந்து தேனாம்மிருந்தமாக இருக்கிறது
,,,,,,சூடிக்கொடுத்த நாச்சியாருக்கு என் வணக்கங்கள் பல ,,,,,,
அன்புடன் விசால்ம் ,,,,

No comments: