சில காரியங்களைச் செய் சிலகாரியங்களைச் செய்யாதே என்று நம் முன்னோர்கள்
நமக்கு பலதடவைகள் எடுத்துக் கூறியதைக்
கண்டிருக்கிறோம் ,வடமொழிகளில் இன்னன்ன ஆசாரங்களை பின் பற்ற வேண்டும்
என்பதைச் சொல்வது ஸ்மிருதிகள் ,,நாம் அப்போது ஏன் எதற்கு என்று கேட்காமல்
பின் பற்றினோம். அதனுள் ஏதாவது நன்மை இருக்கும் ஏனென்றால் அனுபவஸ்தர்கள்
சொல்வது என்று நினைத்து நம்பினோம் இதைப் போல் பண்டைக்காலத்தில்
ஆசாரக்கோவை என்னும் நூல் எதைச் செய்யவேண்டும் எது ஆகாது என்று
விவரித்திருக்கிறது ,இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் .இவர்
வடமொழியிலும் திறைமைப்பெற்றுள்ளார் .ஆனால் இவரது ஆசாரக்கோவையில்
வெண்பாக்கள் நீரோட்டம் போல் தெளிவாக ஓடுகிறது.
நூறு வெண்பாக்கள் இருக்கின்றன சில இரண்டு வரிகளும்
சில ஐந்து அடிகள் வரையிலும் காண்ப்படுகின்றன .
எப்படி நிலத்தில் நல்லவிதைப்போட நல்ல விளைச்சலோ அதே போல் நம்
வளர்ச்சிக்கு ஒழுக்கம் என்ற நல்ல விதைப்போட நல்ல
மனிதனாக உயர்கிறான் ,இதுதான் "விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?
என்ற பழமொழி சொல்கிறது
ஆசாரக்கோவை என்ன சொல்கிறது ,,,,,,,,
"நன்றிஅறிதல் பொறை உடமை இன்சொல்லோடு
இன்னாத எவுயிர்க்கும் செய்யாமை .கல்வியோடு
ஒப்புறவு ஆற்ற அறிதல் :அறிவுடமை
நல் இனத்தரோடு நட்டல் : இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து '
பிறர் நமக்குச்செய்த நன்மையை மறவாமல் இருக்கவேண்டும் அறியாமைக் காரணமாக
பிறர் நமக்குச்
செய்யும் துன்பங்களைப் பொறுத்துப்போவது ,எப்போதும் இனிமையாகப்பேசுவது
கடுஞ்சொற்களை அகற்றுவது ,
எந்த உயிர்களுக்கும் தீமை செய்யாதிருத்தல் அவைகளுக்கு வருத்தம் அளிக்காமல் இருத்தல்
உலக நடப்புக்கு ஏற்றார்போல் பின் பற்றுவது எதையும் நன்றாகச் சிந்தித்து
செயல்படுவது உண்மைக் காணும்
அறிவைப்பெறுவது ,அறிவு கல்வி நல்லொழுக்கம்
கொண்ட கூட்டத்தாரோடு நட்பு வைப்பது ஆகியவைகள்
நம் வளர்ச்சிக்கு நல்ல விதைகளாகும்
காலையில் எழுந்தது முதல் செய்யும் எல்லா காரியங்களும் எப்படி செய்ய
வேண்டும் என்று இந்த ஆசாரக்கோவையில் எழுதப்பட்டிருக்கிறது
Friday, December 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment