குரு பகவனை பிரஹஸ்பதி என்றும் அழைப்பதுண்டு இவர் தேவர்களுக்கெல்லாம் குரு
, மிக நுண்னிய அறிவைக்கொண்டவரும்
கல்வி கேள்விகளில் மிக சிறந்தவர் என்பதால் பிர்ஹஸ்பதி என்றும் பெயர் .
ஸ்ரீ தீட்சதர் நவகிரஹ கிருதியில் பிரஹஸ்பதே என்று அடாணா ராகத்தில்
குருவின் வர்ணனை மிக அழகாகச்
செய்திருக்கிறார்,இவருக்கென்று அமைந்த மிகச் சிறப்பு பெற்ற ஆலயங்கள்
ஆலங்குடி , மாயவரம் அருகில் அமைந்திருக்கும் திட்டை பின் செனையில்
பாடியில் இருக்கும் அலயம் திருவலிதாயம் ,,,,,குரு பகவன் பூசித்த
திருத்தலம் திருச்செந்தூர்
இவருக்கு ஒரு துதி
" மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க்கரசன் ,மந்திரி
நறைசொரி கற்பகம் பொன் னாட்டினுக் கதியனாகி,
நிறைதனம் சிவிகை மண்னில் நீடுபோகத்தை நல்கும்
இறையவன் குரு வியழன் இருமலர்ப்பாதம் போற்றி"
குருவின் காயத்ரி
விருஷ்ப த்வஜய வித்மஹே
கிருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு: பிரசோதயாத்.
குரு பகவான் 6ம் தேதி முற்பக்ல 10-25க்கு பெயர்ந்து மகர லக்னத்திற்கு
வருகிறார் ,மகரம் குருவுக்கு நீச வீடு
ஸ்தான பலம் பலவீனமடந்ததால் பார்வை பலத்திற்கு முக்கியத்தவம் அதிகம் உண்டு .
நற்பலன் அதிகம் கிடைக்கும் ராசிகள்
ரிஷ்பம் கடகம் கன்னி
மிதமான பலன்கள் அடையும் ராசிகள்
தனுசு மீனம்
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்
மேஷம் , மிதினம் சிம்மம் துலாம் விருச்சிகம் மகரம் குமபம் ,
சில பரிகாரங்கள்
குருவின் ஸ்தலங்கள் ஆல்ங்குடி திட்டை சென்று அபிஷேகம் செய்யலாம்
வயதானவர்களுக்கு குருபோன்றவர்களுக்கு மஞ்சள் வஸ்திரம்
தம்பதியாக இருந்தால் மஞ்சள் புடவை ரவிக்கைத்துணியுடன் தனம் செய்யலாம்
வியாழன் அன்று நெய் விளக்கு ஏற்றலாம்
குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு ஆகையால் எண்ணெயில் தங்கப்பொருளை
நனைத்து பின் வேண்டிக்கொண்டு
தீபம் ஏற்றலாம்
பிரதொஷத்தின் போதும் நெய் விள்க்கு ஏற்றி சிவதரிசனத்தை நந்தி மூலம் தரிசிக்கலாம்
குருவின் கோலம் போட்டு வாமனாவதாரம் படிக்கலாம்
குரு பெயர்ச்சியின் போது குருவை வணங்கி நலம் பெறுவோம்
அன்புடன் விசாலம்
Friday, December 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment