அழகான புத்தகம் என் எதிரில் ,
பல படங்கள் எதிர் சுவரில் ,
அழகான சூரியோதயம் ஒரு படம் ,
கண்ணீர் விடும் குழந்தை மறு படம்,
நான் சென்றது ஒரு கலைக்கூடம்,
அங்கு கற்றுவந்தது ஒரு பாடம்
பிரித்துப் பார்த்தேன் ஒரு புத்தகத்தை,
கண்கள் ரசித்தன ஒரு சித்திரத்தை,
பஞ்சவர்ணகிளி தன் சிகப்பு அலகுடன்,
சிவப்பு பழத்தைக் கொத்தியது அழகுடன்,
என் மனம் நிறைந்தது,
இலேசாகப் பறந்தது,
கலைப் பூரித்தது,
அடுத்தப் பக்கம் புரட்டினேன்,
என் கண்கள் குத்திட்டு நின்றன .
ஒரு பயங்கர சிறுத்தை,
அதன் கண்களில்தான் என்ன கொடூரம்.
அதன் கோரைப்பற்கள் நடுவில்
அழகு புள்ளிமானின் கழுத்து
உயிருடன் பிடித்த பெருமிதம்
உயிருக்குப் போராடி உயிர் விட்ட மான்.
முதல் படத்தின் அழகுதான் என்ன?
அடுத்த சித்திரத்தின் அகோரம்தான் என்ன?
இதுதான் வாழ்க்கையின் சாரமோ?
இதுதான் கடவுளின் விருப்பமோ/
அழகு அகோரம்.இன்பம்,துன்பம்,
மாறி,மாறி வருவது அவனது சித்தம்,
வெப்பம் .தண்மை விருப்பு,வெறுப்பு,
போன்ற எதிர்ப்பதம் வாழ்க்கையின் சுழலோ?
வெயிலின் அருமை நிழலுக்குத்தெரியும்,
கடவுளின் வேதாந்தம் சுவைக்க,சுவைக்கப் புரியும்,
இன்பத்தையும்.ரசித்துப் பார்,
துன்பத்திலும் இன்பம் பார்,
இரண்டிலும் சமத்துவம் பார்.
வாழ்க்கையில் பூரணத்துவம் பார்.
Thursday, November 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment