மனிதன் எங்கே போகிறான் ?
மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை,
ஆனால் நெறியிலிருந்து தவறுவதில்லை.
புலி பசித்தாலும் புல்லைத் தின்பதில்லை
பசுவோ பால் கொடுக்க தவறுவதில்லை.
தண்ணீரோ மேலிருந்து கீழே பாய தவறுவதில்லை.
உரியக்காலத்தில் பழங்களோ பழுக்கத் தவறுவதில்லை
மல்லிகை தன் மணத்தை மாற்றிக் கொள்ளவுமில்லை.
இயற்கை தன் கடமையிலிருந்து தவறினதில்லை.
ஆனால் ஆறரிவு பெற்ற மனிதன் தவறிவிட்டானே.
எதையே தின்கிறான் .
எதையோ உடுக்கிறான்
எப்படியோ வாழ்கிறான்.
கட்டுப்பாட்டை உடைக்கிறான்
தன் இஷ்டப்படி ஆடுகிறான்
மிருக இனத்திற்குப் போகிறான்
தாழ்ந்த மட்டத்தையும் அடைகிறான்.
பணத்திற்குப் பின் ஒடுகிறான்
தெய்வ்த்தை தேட மறுக்கிறான்.
சத்யத்தை நழுவ விட்டான்
அன்பையும் உதறி விட்டான்
தெய்வம் போன்ற பெற்றோர்களை
முதியோர் இல்லத்தில் போடுகிறான்
எங்கே போகிறான் மனிதன்?
என்று திருந்துவான் மனிதன்?
Thursday, November 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment