Thursday, November 6, 2008

சிவகாசியில் "முத்து"

சிவகாசியில் "முத்துவேலுஅவன் வயது பதினாலு,அவன் பெயர் முத்துஒரு அழுக்கு நிக்கர்,மேலே கிழிஞ்ச பனியன்இதுவே அவனது உடை.புத்தாடைக்கு பணமே தடை ,கைகளில் ஒரு பரபரப்பு,,செய்யும் வேலையில் ஒரு சுறுசுறுப்பு .ஊசிவெடி சுருட்டுகிறான் ,மருந்தை உள்ளே அப்புகிறான்.சிவப்புத்தாளை ஒட்டுகிறான் .நூலுடன் சேர்த்துக் கட்டுகிறான்கையில் கிடைப்பதோ தினக்கூலி.சிலவு செய்ய ஒரு வேலி .அவனைச் சுற்றி ஒரு குடுமபம் ,வாழ்க்கையே அவனுக்குச் சிலம்பம்அவனது பட்டாசு பலரிடம் ,ஆனால் செய்தவனுக்கு ஒன்றும் இல்லை ,வாங்கித்தர தந்தையுமில்லை தாயிடமோ காசுமில்லை ஏன் என்று கேட்க யாருமில்லை ,பல கட்டுக்கள் அவன் முன்னால் ,ஏக்கப்பார்வை அதன் மேலே ,வருகிறது ஒருபெருமூச்சு ,ஏழையின் கதி இப்படி ஆச்சு

No comments: