உன்னைக் கண்டவுடன்
பல இன்பக் கவிதைகள்
ஊற்றாகப் பிறக்கிறது
நீ பின்னல் அசைய நடக்கும் நடையோ
அனைத்தையும் கிறங்க வைக்கிறது
காய்கறிகளுடன் உன் ஊர்வலம்
தெருவையே அசர வைக்கிறது
அடிக்கடி கூந்தலைக் கோதும் அழகோ
என்னையே மறக்க வைக்கிறது
கன்னம் குழிய ஒரு புன்னகை
முத்தம் இட விழைகிறது
மன்மதனின் அழைப்பும்
என் காதில் வந்து விழுகிறது
அவன் எய்த மலர் அம்புகளால்
உன்னைத் தழுவத் தோன்றுகிறது
மயக்கும் இளமை கவர்ந்து
உடலும் புல்லரிக்கிறது
"என்னவளே " என்று சொல்லிவிட்டேன்
அதை உண்மை ஆக்கிவிடு
நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டேன்
என் உடலிலும் அது தெரிய
எங்கும் மங்கலம் நிறையட்டும்
""பீம் பீம்" என்ற சத்தம் அருகில் அலர
வண்டி ஓட்டுனர் என்னைத்திட்ட
அவள் மறைந்துப் போய்விட்டாள்
Sunday, April 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment