பாற்கடலில் மகாவிஷ்ணு சயனித்திருக்கிறார்.மகாலட்சுமி அவர் காலடியில் அமர்ந்து
இருக்கிறார் ஆதிசேஷன் ஆனந்தமாக மகாவிஷ்ணுவின் சயனதிற்கு மஞ்சம் கொடுத்து மகிழ்கிறார்
அப்போது திடீரென்று பரந்தாமன் "அத்புதம் அதி அத்புதம் "என்று குரல் ஓங்க சொல்லி
மகிழ்கிறார் ,கூட இருந்த தேவிக்கும் ஆதிசேஷனுக்கும் இது புதிராக இருந்தது ,இதைப்
பற்றி அவர்கள் கேடக மஹாவிஷ்ணு "கண்டேன் ஆனந்தத் தாண்டவம் ,,அந்த ஈசன்
நடேசனாக மாறி நடனம் ஆடுகிறார் ,அதுவும் இன்று மார்கழிமாதம் திருவாதிரை
நட்சத்திரத்தில் ,,,,,என்னே அழகு ,,,"
ஆதிசேஷன் மனதில் தான் அதைப் பார்க்கவில்லையே என்று ஏக்கம் வர அதைக்
கண்ணாடிப்போல் படம் பிடித்து விட்டார் பரந்தாமன் ,"என்ன ஆதிசேஷா உனக்கும் இந்தக்
காட்சி காணவேண்டுமா ? அதற்கு நீ பூலோகம் போக வேண்டும் அநதப் பாக்கியம் உனக்கு
நான் தருகிறேன் என்று அவரைஅனுப்பிவத்தார் ஆதிசேஷன் பதஞ்சலி முனிவராக அவதாரம்
எடுத்தார் இடுப்பிற்குக் கீழ் பாம்புபோல் உடலும் மேலே முனிவராகவும் தோற்றம் இருந்தது
அவர் பல கோயில்களுக்குச் செல்ல அங்கு வியாக்கிர பாதர் என்ற சித்தரிடம் அவருக்கு
மிகுந்த நட்பு ஏற்பட்டது ,வியாக்கிரபாதருக்கு பாதம் புலியைப் போன்றது இருவரும் சேர்ந்து
பல கோயில் தரிசனம் செய்து பின் சிதமபரம் வந்தார்கள்,அன்று திருவாதிரை ,சிவபெருமானிடம்
அவரது ஆனந்த நடனத்தை[ பார்க்கும் ஆவலைத் தெரிவித்தார்கள்.அவரும் அவர்களுக்கு
மட்டும் நடனம் ஆடிக் காட்டினார் " இந்தக் காட்சியைப் பார்க்க மிகவும் பாக்கியம்
செய்திருக்கிறோம் என்று பக்தியினால் கண்ணீர் மல்க நடேசனை வணங்கினர்
களியும் கூட்டும் பிரசாதமாகக் கொண்ட திருவாதிரைத் திருநாளில் ஒம் நமச்சிவாய என்று
சொல்லி வணங்க மன அமைதி கிட்டும்
களிவந்தக் கதை ,,,,,,,சேந்தன் சிவபக்தன் தினமும் சிவனடியாருக்கு படைத்துவிட்டுப்
பின் தான் தான் உணவு உட்கொள்வான் அவன் விற்கு வெட்டி சீவனம் செய்து வந்தான் ஒருநாள் விடாது பலத்தமழைக் கொட்ட அவனால் விற்குகள் விற்க முடியவில்லை
விறகுகள் ஈரமாகி போய்விட்டன அந்தநேரம் பார்த்து ஒரு சிவனடியார் வந்தார்
அவன் மனைவி கொஞ்சம் மாவில் இருக்கும் வெல்லம் போட்டு கிளறி தந்து விடலாம் என்றாள், அந்தக் கிண்டினப் பதார்த்தத்தை அதாவது களியைத் திருப்தியாக சாப்பிட்டுவிட்டுப்
போய்விட்டார் பின் சேந்தனும் அவர் மனனவியும் சிதம்பரத்திற்கு தல்லையமபல
நடராஜனைத் தரிசிக்கப் போனார்கள் அங்கு அவர்கள் கண்ட காட்சி,,,,சிவ சன்னிதியில்
களி சிதறிக்கிடக்க சிவனது வாயிலும் களி இருந்தது ,,,,,,அன்றையதினத்திலிருந்து
தான் திருவாதிரை அன்று வெல்லம் போட்டு களி பிரசாதமாக ஆனது ,,,,,,,,,
அன்புடன் விசாலம்
Sunday, April 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment