Tuesday, April 8, 2008

வாடகை இல்லா வீடு

இல்லறக் கூடலில்
கிடைப்பது ஒரு வீடு
பத்து மாதத்திற்கு .
அதுவும் ஒரு குழந்தைக்கு
காலந்தொட்டு வரும் இதற்கு
சொந்தக்காரி ஒரு தாயே ,
உணவு அளிபதும் அவளே
கட்ட்டிக்காப்பதும் அவளே
உயிர்ப் பணயம் வைக்கிறாள்,
கண் இமைப்போல் காக்கிறாள்
பட்டம் கிடைப்பது தாயமை ,
உயர் பதவிதான் "பெண்மை "

Sunday, April 6, 2008

வாடகை இலா வீடு

இல்லறக் கூடலில்
கிடைப்பது ஒரு வீடு
பத்து மாதத்திற்கு .
அதுவும் ஒரு குழந்தைக்கு
காலந்தொட்டு வரும் இதற்கு
சொந்தக்காரி ஒரு தாயே ,
உணவு அளிபதும் அவளே
கட்ட்டிக்காப்பதும் அவளே
உயிர்ப் பணயம் வைக்கிறாள்,
கண் இமைப்போல் காக்கிறாள்
பட்டம் கிடைப்பது தாயமை ,
உயர் பதவிதான் "பெண்மை "

அன்புடன் விசாலம்

ஒன்றும் மாறவில்லை

முப்பது வருடங்களுக்குப் பின்
திரும்ப கிராமம் வந்தேன் ,
என் பாட்டி வளர்ந்த இடம் ,
என் அத்தை பிறந்த இடம் ,
கும்பகோணம் அருகில் "கச்சனம் "
குதி போட்டது என் மனம் ,
நுழைய நுழைய இனம் புரியாத மகிழ்ச்சி
பார்க்க பார்க்க ஒரு இன்பக் கிளர்ச்சி ,

அதே கிராமம் அதே சூழல் ,ஒன்றும் மாறவில்லை ,,,,,

மாறாத பஸ் ஸ்டாப்
கல்லும் மண்ணுடன் ,
வெளியே வந்தேன்
கசக்கிய கண்களுடன்.
முறுக்கு விற்ற அந்தச் சிறுவன் ,
ஆத்தா இட்டப் பெயரோ முருகன்
இன்று அவர் தொந்திப் போட்ட முதலாளி ,
ஆனால் இன்றும் வறுமைக்குக் காவலாளி
பெரிய ஆலமரத்தடி மேடை ,
அடிக்கும் சாராய வாடை ,
கத்தியைத் தீட்டுகிறான் ஒருவன்
முகம் காட்டுகிறான் ஒருவன்
சவரம் நடக்கும் காட்சி இங்கே ,
கிராமத்தின் சலூனும் இங்கே !

அதே கிராமம் அதே சூழல் ஒன்றும் மாறவில்லை ,

சரித்திரப்புகழ் பெற்ற கோயில் .
கேட்பாறற்று இருந்த வாயில் ,
பாசிப் படர்ந்த அல்லிக்குளம்
சேற்றிலும் மலரும் அல்லி தளம்
கோயிலுள் நுழைந்தேன் ,,,,,
குருக்களின் கடைக்குட்டிப் பையன்
சுப்பிரமண்ய குருக்கள் ஆனான்,
கற்பூரம் ஒளிர்ந்தது
பத்து ரூபாய் விழுந்தது
அவன் மனம் வியந்தது

அதே கிராமம் அதே சூழல் ,ஒன்றும் மாறவில்லை

அழுக்கு சினிமாக் கொட்டகை முன்
சூப்பர்ஸ்டாரின் விசிறிகள்
வெற்றிலைத் துப்பிய சிவப்பு கறைகள்
மூத்திர வாடை அடிக்கும் சுவறுகள்
கோடியில் கட்சித்தொண்டர்கள்
எதிரில் கொடி பிடிக்கும் எதிரிகள்
தெருக்கோடியில் சில மாமிகள்
அலசும் வீட்டுப் பிரச்சனைகள் ,
நடுத்தெருவில் ஒரு கிரிக்கெட் மாட்ச்,
அதிலும் ஒரு குட்டிச் சண்டை
கம்பத்தில் தொங்கிய தபால் பெட்டி ,
அதனருகே குழந்தைகளின் லூட்டி
பகலிலும் சாலை ஓரம்
போதையில் தூங்கும் கோரம்

அதே கிராமம் அதே சூழல் ஒன்றும் மாறவில்லை


ஆனாலும் அங்கு ஒரு நிம்மதி
கிடைத்தது எனக்கொரு அமைதி ,
சாணம் பூசிய சதுரங்கள்,
அதில் அழகிய கோலங்கள் ,
அனுபவித்தேன் இயற்கையின் சூழல்
கொடுத்தது எனக்கு இன்ப நிழல்
திண்ணையில் அமரும் பெரியவர் ,
சத்சங்கம் நடத்தும் தலைவர் ,
மரங்களில் கொஞ்சும் பறவைகள்,
சல சல வென்று ஓடும் ஆறுகள்
முன்நேரம் ஒலிக்கும் கோயில் மணி
காலை நாலுக்கே தொடங்கும் பணி
இதைத் தவிர வேறு என்ன வேண்டும் ?
இயறகை ரசிக்கும் மனம் வேண்டும்

அதே கிராமம் அதே சூழல் ஒன்றும் மாறவில்லை


அன்புடன் விசாலம்

எமது பாரதம்

அன்புள்ள குழந்தைகளே நாம் வாழுவது மிகப் பெருமை மிக்க இந்திய நாட்டில் ,,,,,,எத்தனை யோகிகள் ,அறிஞர்கள், மஹா கவிஞர்கள் , கணித மேதைகள்
சித்தர்கள் தேசபக்த தலைவர்கள் வாழ்ந்திருக்கின்றனர் எத்தனை மகிமை நிறைந்த
கோயில்கள் ,,,,நாம் நம் நாட்டின் பெருமையை நிலை நாட்ட வேண்டும் குழந்தைளும்
பல வீரதீரச் செயல்களைச்செய்து அன்புடனும் மரியதையுடனும் ப்ண்புடனும்
பழகவேண்டும் நம் பாரதத்தின் சிறப்பைப் பாருங்கள் பாடி மகிழுங்கள் கோலாட்டம்
கும்மி என்று இதற்கு ராகம் அமைத்து ஆடலாம்

எமது பாரதம்

இமயம் முதல் குமரி வரை எங்கள் பாரதம்
எங்கும் புகழ் தங்கும் வளம் பொங்கும் பாரதம்
அறிஞர்களும் அவனியிலே பிறந்த பாரதம்
அருந்துணைவர் காந்திதனை அளித்த பாரதம்

முப்புறமும் கடல் சூழ விளங்கும் பாரதம்
முடியெனவே மலையணிந்த வடிவம் பாரதம்,
அங்கும் இங்கும் ஆன்மீகஒளி வீசும் பாரதம்
ஸ்ரீராமகிருஷ்ணர் ,விவேகானந்தர் உதித்த பாரதம்

வள்ளுவரும் இளங்கோவும் ஒளிர்ந்த பாரதம்
சித்தர் பல அவனியில் வந்தருளும் பாரதம் ,
மூவேந்தர்கள் சிறப்பித்த பழைய பாரதம் ,
கண்ணனுடன் கலந்த மீரா வாழ்ந்த பாரதம் ,

உலகம் போற்றும் "திருக்குறள்" உதித்த பாரதம்
தமிழுக்கு ஒரு ஔவைப்பாட்டி வந்த பாரதம்
கட்டப்பொம்மன் ,வ.உ சியின் .வீரம் பார்த்த பாரதம்
"பகத்சிங்" நாட்டிற்கே உயிரைக்கொடுத்த பாரதம் .

"புரட்சிக்கவி பாரதி" வீர முழக்கமிட்ட பாரதம் ,
பூஜ்ஜியத்தின் தத்துவத்தைக் கண்டுபிடித்த பாரதம்
நான்மறைகள் தோன்றி வளமுற வைக்கும் பாரதம்
அர்சுனனுக்கு உபதேசித்த, கீதைப்பிறந்த பாரதம்

வீரத்தின் பிறப்பிடம் ராணி ஜான்சி தோன்றிய பாரதம்
சிலம்புடன் நியாயம் கேட்ட கண்ணகி பிறந்த பாரதம்
சிம்மகர்ஜனையாம் வீரசிவாஜி பிறந்த பாரதம்
இராமயண மஹாபாரத காப்பியம் தோன்றிய பாரதம்

மூவிசை மன்னர்கள் இசையால் முக்தி அடைந்த பாரதம்
திருப்பாவை திருவாசகம் நம்மிடம் மலர்ந்த பாரதம்
பார் புகழும் பாரதம் எங்கள் பாரதம்
பாடிப்பாடி போற்றுவோம் எங்கள் பாரதம் ,,

அன்புடன் விசாலம்

பொங்கல் திருநாள்

மகர சங்கரந்தியில் ஆதவன்
ஒளியுடன் பவனி வருகிறான்
அவனில்லாமல் உலகில்லை,
ஒருச்செடியில்லை ,கொடியில்லை
தைப்பிறந்தால் வழிப் பிறக்கும்
பொங்கல் திருநாள் மிகச் சிறக்கும்,
பொங்கலோ பொங்கல் என்றச் சத்தம்
மகிழ்ச்சியில் மலரும் நம் சித்தம் ,
விவசாயிகள் மகிழும் இத் திருநாள்
ஆதவனுக்கு நன்றிச் சொல்லும் நாள்
உழுவும் காளைகளுக்கும் பூசை
வீர "ஜல்லிக்கட்டில் ஆசை ,
காணும் பொங்கலில் உறவினர் கூட்டம் ,
பாசமும் அன்பும் பெருக்கும் வட்டம்
பொங்கல் வாழ்த்துத் தந்து மகிழ்வோம்
ஏழையின் வாழ்வில் ஏற்றம் தருவோம்

அன்புடன் விசாலம்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்

பக்தன் சிறையில் அனுமார்

ஹம்பி என்ற இடத்தில் ஆஞ்சநேயர் வந்து அமர்ந்தது மிக வியப்பான சம்பவம் தான் ,
மாத்வர்களின் ஆசார்யரான திரு வியாசராயர் மிகப் பெரிய ஆஞ்சநேயபக்தர் மிக அழகாக் வரைபவர் ,எங்கு போனாலும் ஸ்ரீ ஆஞ்சநேயரை வரைய ஆரம்பித்து விடுவார் அவர் கை
ஆஞ்சநேயமூர்த்தியை வரைந்தபடியே இருக்கும் ஒரு நாள் ஒரு இடத்தில் வந்து அமர்ந்து
வழக்கம் போல் மாருதியின் உருவத்தை வரைந்தார் ,மறு நாள் அந்த இடம் சுத்தமாக
அழிக்கப்பட்டிருந்தது அவருக்கு வியப்பும் சந்தேகமும் ஏற்பட்டது மறு நாளும் அதே இடத்தில் ஆஞ்சநேயரின் படம் வரைந்தார் ,அதுவும் மறுநாள் அழிந்திருந்தது இப்படியே பலநாட்கள் நடக்க அவர் ஒரு நாள் அந்த அழைப்பவனைக் கையும் களவுமாய் பிடிக்க
வேண்டும் என்று எண்ணி இரவு தூங்காமல் அங்கேயே நின்று காவல் காத்தார் , அப்போது
ஹனுமானே அங்கு வந்து அவர் படத்தை அழிப்பதைக் கண்டார் ஓடிப்போய் அவரைக்
கட்டிப்பிடித்தார் அவர் கைவிட்டுப்போகும் நிலையில் ராமநாமம் ஜபித்தார் அவர் அதில் மெய்மறந்து கட்டுண்ட போது அவரை ராமநாம ஜப இயந்திரத்திற்குள் அடைத்துவைத்து
விட்டார் ஆஞ்சநேயர் ஓடிப் போகாதபடி அங்கே ஒரு கோயிலும் கட்டிவிட்டாராம் ,
இந்தக் கோயில் கர்ப்பக்கிரஹத்தில் மூல உருவமே யந்திர உருவில் உள்ளது பத்மதளம் ஒன்று இருக்கிறது பின் ஒரு வட்டம் நடுவே ஆறுகோணங்கள் கொண்ட ஒரு யந்திரம் அதன் மத்தியில் ஆஞ்சநேயர் பீஜாட்சமந்திரம் உள்ளன ஒரு தியான ஸ்லோகம் கிரந்தத்தில் ,,வட்டத்தின் உட்புறம் எழுதப்பட்டுள்ளது ,,,, ஸ்ரீஆஞ்சநேயர்
ஜயந்தி அன்று பெங்களூர் அருகில் இருப்பவர்கள் எல்லோரும் இந்தக் கோயிலைத்
தரிசிக்கலாமே ,,,ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பல கோடி நம்ஸ்காரங்கள் அன்புடன் விசால்ம்

பகுள பஞ்சமி

பகுள பஞ்சமி அன்று ஸ்ரீ தியாகபிரம்மம் ,சித்தி அடைந்தார் ,
ஸ்ரீ தியாக ராஜ ஸ்வாமிகளை வால்மீகி முனிவரின் அவதாரம் என்கின்றனர் ஸ்ரீவால்மீகியும் இராமாயணத்தில் 24000 ஸ்லோகங்களைப் படைத்துள்ளார் ஸ்ரீ தியாகராஜரும் 2400 கீர்த்தனைகள் இயற்றி பாடி இருக்கிறார் இதில் இராமயணம் கதை
முழுவதும் வந்து விடுகின்றன ,,,எல்லாம் நவரத்த்னங்கள் போல் ஜுவலிக்கின்றன
1845 தமிழ் புத்தாண்டில் அவர் மனனவி காலமானார் ஒருவருடம் கழித்து அவர் கனவில்
ஸ்ரீராமசந்திர மூர்த்தி தோன்றினார் அதாவது 22-12-1846ல் ,.......அவர் தன் பக்தனை
ஆசையுடன் அழைத்து"தியாகராசா,,, இன்னும் பத்து மாதங்களில் நீ இறந்து விடுவாய்
உனக்கு இன்னொரு ஜன்மம் உண்டு என்றார் ,,அப்பப்பா,, எனக்கு இன்னொரு ஜன்மமா? வேண்டாம் ராமா என்று கதறி முகாரியில் "க்ஷீணமை திருக "என்ற பாட்டைப் பாடினார் அத்துடன் "மோக்ஷமு கலதா புவிலோ,ஸாதிஞ்சனே ஒ மனஸா " என்று ஒன்பது மாதமும் இடைவிடாமல் பாட திரும ராமர் வந்து "இன்னும் பத்து நாட்களில் , உனக்கு முக்தி கிடைத்துவிடும் நீ என்னிடம் வந்துவிடுவாய் நீ சன்யாசம் வாங்கிக் கொள் ' என்றார்
. இதைக்கேட்டு அவர் ஒரு பாட்டு பாடினார் அது சஹானா ராகத்தில் அமைந்தது ஒரு கீர்த்தனை "கிரிபை....நெல" என்று ஆரம்பிக்கும்,,5 1-1847 ல் சன்யாசம் வாங்கிக்
கொண்டார் புஷ்ய பகுள பஞ்சமி அன்று சித்தி அடைந்தார் அவரிடமிருந்து
வந்த ஒளி உடலிலிருந்து ஆகாய மார்க்கமாக அத்புத ஜோதியாக போனதை ச்கல
மக்களும் தரிசித்தனராம் அவரது உடல் சீடர்களால் அவரது குரு திருவெங்கடரமணய்யர் சமாதி அருகே தகனம் செய்யப்பட்டது அவருக்கு எண்ணற்ற
சீடர்கள் உண்டு உம்,, உமையாள்புரம் கிருஷ்ணபாகவதர் திருசுந்தர பாகவதர்
வீணை குப்பய்யர்,,,,, தஞ்சாவூர் ராமராம் ,,,,ஸ்ரீதியாகராஜர் நௌகாசரித்தரம் கனராக
பஞ்சரத்னம்,, நாரத பஞ்சரத்னம் திருவொற்றியூர் பஞ்சரத்னம் கோவூர்பஞ்சரத்னம்
ஸ்ரீரங்க பஞ்சரத்னம் லால்குடி ப்ஞ்சரத்னம் பிரஹ்லாத பக்தவிஜயம் முதலியவைகள்
இயற்றி பாடி இருக்கிறார்
1802ல் முதன் முதலாக குருவின் முன் பல வித்வான்கன்கள் அமர்ந்து "தொரகுனா இடிவண்டி சேவா" என்றபாடல் மேடை ஏறியது தற்போது இவர் பாடல்கள் இல்லாத
கச்சேரியே இல்லை ,

ஸ்ரீதியாகராஜர் இசையைப் பற்றி பாடிய ஒருபாடல் ,

ராகஸுதா ரஸ பானமு ஜேஸிரஞ்சில்லவே ஓ மனஸா,,,

ராகமென்னும் சுவையுள்ள பானத்தை அருந்தி மகிழ்வாய் மனமே ,,,

அ.ப்ல்லவி
யாக யோக தியாகபோக பல மொஸங்கே
யாகங்களாலும் யோகங்களாலும் தியாகங்களாலும்கிடைக்கும் ஆனந்தத்தை
அளிக்க வல்லது இசை ஏனெனில் இவ்வுலகம் தோன்ற காரணமானது தூய ஒலி ...

சரணம் ,,ஸததசிவ மயம்கு நாதோங்காரஸ்வர
விதுலு ஜீவன முக்துலனி தியாகராஜ தெலிய

நித்ய சைத்தன்யமான சதாசிவமான் ஓம் என்ற ஒலியிலும் நாதங்களிலும்
தன்னை மறந்து திளைப்பவர்கள் ஜீவன்முக்தர்கள் ஆவார் என்று நான் அறிவேன் ,,,,,,,

எத்தனை அழகான பாடல் ..கீதையிலும் ஜீவன்முக்தர்களைப் பற்றிச
சொல்லப்பட்டிருக்கிறது .இவர்களுக்கு சுகம் துக்கம் எல்லாம் ஒன்றுதான் உடலில் நோய
வந்தால் அதனால் இவருக்கு ஒரு துன்பமும் இல்லை அதைக்கண்டுக்கொள்ள
மாட்டார்கள்,,,,
பகுளபஞ்சமி அன்று இன்றும் திருவையாறில் தியாகராஜர் சன்னிதானத்தில் எல்லா வித்வான்களும்
அவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்த்னைகள் பாடுவார்கள்,கூடவே
அபிஷேகம் பூஜையும் நடக்கும்,,கேட்டு மகிழுங்கள்
அன்புடன் விசாலம்
.

ந்யூ இயர் ரிசல்யூஷன்

எல்லோரும் புத்தாண்டு சங்கல்பம் எடுத்துக்கொள்கின்ன்றனர் ஆனால் அது மூன்று மாதம்
வந்தாலே அதிகம் ,பின் குறைந்து அது விட்டுப் போய்விடுகிறது ஏன்?அதற்கு நாம் அவ்வளவு மதிப்பும் ,முக்கியத்துவமும் கொடுப்பதில்லை ,அன்பு ஷைலஜாவின் வலையில் விழுந்த மீன்களில் நானும் ஒருவள்.வங்கக்கடலில் அழுத்தம் இருந்து மழையும் புயலும் இருந்தும் கடலுக்கு வந்து வலையும் வீசி இருக்கும் வீர ஷைலஜா,
சரி நான் என்ன சங்கல்பம் எடுப்பது ,,எளிதான ஒன்றாக எடுபோம் என்று எண்ணி
யோசித்தேன்.,,ஒ,,கிடைத்துவிட்டது ஐடியா மாதம் ஒரு நாலு முறையாவது என்
வலைப்பதிவில் ஏதாவது ஆக்கப்பூர்வமான படைப்புகளை இடவேண்டும் ,,,,,,
இது என்னால் முடியும் .கடவுள் அருளுடன் ,,,,,,,

2 பலர் தன் மகன்களை விட்டு பிரிந்து தூரம் வாழ்ந்து வருகிறார்கள்,சிலர் முதியவர்
இல்லத்திலும் இருக்கிறார்கள் அவர்களுக்கு பணத்தைவிட அன்பும் ஆதரவும் தேவை
ஆகையால் தனியாக இருக்கும் வயதானவர்களிடம் சென்று அன்புடன் பேசி அவர்களுக்கு
இசை அல்லது வேறு அவர்களுக்கு பிடித்த் விஷயத்தில் பேசி ஒரு ஆரோக்கிய
சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் இதில் வம்பு..மற்ற வீட்டு விஷயங்களில் தூபம்
போடாமல் இருக்க வேண்டும் அவர்களுடன் பல்லாங்குழி ,,போன்ற விளையாட்டுக்கள்
விளையாடலாம் ,நாட்டின் நடப்பு பற்றியும் ஆன்மீக விஷ்யமும் அலசலாம் .
அவர்களைப் பாடவும் வைக்கலாம் ,இதற்கு முதியவர் இல்லம்தான் போக வேண்டும் என்பதில்லை எத்தனையோ பேர்கள் நம் வீட்டில் அருகிலேயே இருப்பார்கள்,,,,,,,,
இதைச்செய்ய நானும் சங்கல்பம் எடுத்துள்ளேன் ,

3,என் வீட்டுக் குழந்தைகளுக்கு {பேரன் பேத்தி] தமிழ் பேச கற்ற்க்கொடுக்க வேண்டும்
எப்போது அவர்களிடம் பேசினாலும் அவர்களுக்கு புரிந்தாலும் ஆங்கிலம் அல்லது ஹிந்தியே பதிலாக வருகிறது இல்லாவிட்டால் "what do u mean?" என்று அவர்கள்
கேட்கும் போது எனக்கு மிக வருத்தம் ஏற்பதுகிறது ஆகையால் என் மகனிடமும் இந்தச்
சங்கல்பத்தை எடுக்கச் சொல்லி இருக்கிறேன் நானும் எடுத்திருக்கிறேன் இந்த
வருடத்திற்குள் அவர்கள் சரளமாக தமிழ் பேச வேண்டும் ,,,,,,,,,,

அப்பா,,,,,,இந்த மூன்று போதும் ,,,,,,,என்னால் முடியும்,,,,தம்பி.......,

அன்புடன் விசாலம்

ஆனந்த நடனம்

பாற்கடலில் மகாவிஷ்ணு சயனித்திருக்கிறார்.மகாலட்சுமி அவர் காலடியில் அமர்ந்து
இருக்கிறார் ஆதிசேஷன் ஆனந்தமாக மகாவிஷ்ணுவின் சயனதிற்கு மஞ்சம் கொடுத்து மகிழ்கிறார்
அப்போது திடீரென்று பரந்தாமன் "அத்புதம் அதி அத்புதம் "என்று குரல் ஓங்க சொல்லி
மகிழ்கிறார் ,கூட இருந்த தேவிக்கும் ஆதிசேஷனுக்கும் இது புதிராக இருந்தது ,இதைப்
பற்றி அவர்கள் கேடக மஹாவிஷ்ணு "கண்டேன் ஆனந்தத் தாண்டவம் ,,அந்த ஈசன்
நடேசனாக மாறி நடனம் ஆடுகிறார் ,அதுவும் இன்று மார்கழிமாதம் திருவாதிரை
நட்சத்திரத்தில் ,,,,,என்னே அழகு ,,,"
ஆதிசேஷன் மனதில் தான் அதைப் பார்க்கவில்லையே என்று ஏக்கம் வர அதைக்
கண்ணாடிப்போல் படம் பிடித்து விட்டார் பரந்தாமன் ,"என்ன ஆதிசேஷா உனக்கும் இந்தக்
காட்சி காணவேண்டுமா ? அதற்கு நீ பூலோகம் போக வேண்டும் அநதப் பாக்கியம் உனக்கு
நான் தருகிறேன் என்று அவரைஅனுப்பிவத்தார் ஆதிசேஷன் பதஞ்சலி முனிவராக அவதாரம்
எடுத்தார் இடுப்பிற்குக் கீழ் பாம்புபோல் உடலும் மேலே முனிவராகவும் தோற்றம் இருந்தது
அவர் பல கோயில்களுக்குச் செல்ல அங்கு வியாக்கிர பாதர் என்ற சித்தரிடம் அவருக்கு
மிகுந்த நட்பு ஏற்பட்டது ,வியாக்கிரபாதருக்கு பாதம் புலியைப் போன்றது இருவரும் சேர்ந்து
பல கோயில் தரிசனம் செய்து பின் சிதமபரம் வந்தார்கள்,அன்று திருவாதிரை ,சிவபெருமானிடம்
அவரது ஆனந்த நடனத்தை[ பார்க்கும் ஆவலைத் தெரிவித்தார்கள்.அவரும் அவர்களுக்கு
மட்டும் நடனம் ஆடிக் காட்டினார் " இந்தக் காட்சியைப் பார்க்க மிகவும் பாக்கியம்
செய்திருக்கிறோம் என்று பக்தியினால் கண்ணீர் மல்க நடேசனை வணங்கினர்

களியும் கூட்டும் பிரசாதமாகக் கொண்ட திருவாதிரைத் திருநாளில் ஒம் நமச்சிவாய என்று
சொல்லி வணங்க மன அமைதி கிட்டும்
களிவந்தக் கதை ,,,,,,,சேந்தன் சிவபக்தன் தினமும் சிவனடியாருக்கு படைத்துவிட்டுப்
பின் தான் தான் உணவு உட்கொள்வான் அவன் விற்கு வெட்டி சீவனம் செய்து வந்தான் ஒருநாள் விடாது பலத்தமழைக் கொட்ட அவனால் விற்குகள் விற்க முடியவில்லை
விறகுகள் ஈரமாகி போய்விட்டன அந்தநேரம் பார்த்து ஒரு சிவனடியார் வந்தார்
அவன் மனைவி கொஞ்சம் மாவில் இருக்கும் வெல்லம் போட்டு கிளறி தந்து விடலாம் என்றாள், அந்தக் கிண்டினப் பதார்த்தத்தை அதாவது களியைத் திருப்தியாக சாப்பிட்டுவிட்டுப்
போய்விட்டார் பின் சேந்தனும் அவர் மனனவியும் சிதம்பரத்திற்கு தல்லையமபல
நடராஜனைத் தரிசிக்கப் போனார்கள் அங்கு அவர்கள் கண்ட காட்சி,,,,சிவ சன்னிதியில்
களி சிதறிக்கிடக்க சிவனது வாயிலும் களி இருந்தது ,,,,,,அன்றையதினத்திலிருந்து
தான் திருவாதிரை அன்று வெல்லம் போட்டு களி பிரசாதமாக ஆனது ,,,,,,,,,

அன்புடன் விசாலம்

பகற்கனவு

உன்னைக் கண்டவுடன்
பல இன்பக் கவிதைகள்
ஊற்றாகப் பிறக்கிறது
நீ பின்னல் அசைய நடக்கும் நடையோ
அனைத்தையும் கிறங்க வைக்கிறது
காய்கறிகளுடன் உன் ஊர்வலம்
தெருவையே அசர வைக்கிறது
அடிக்கடி கூந்தலைக் கோதும் அழகோ
என்னையே மறக்க வைக்கிறது
கன்னம் குழிய ஒரு புன்னகை
முத்தம் இட விழைகிறது
மன்மதனின் அழைப்பும்
என் காதில் வந்து விழுகிறது
அவன் எய்த மலர் அம்புகளால்
உன்னைத் தழுவத் தோன்றுகிறது
மயக்கும் இளமை கவர்ந்து
உடலும் புல்லரிக்கிறது
"என்னவளே " என்று சொல்லிவிட்டேன்
அதை உண்மை ஆக்கிவிடு
நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டேன்
என் உடலிலும் அது தெரிய
எங்கும் மங்கலம் நிறையட்டும்
""பீம் பீம்" என்ற சத்தம் அருகில் அலர
வண்டி ஓட்டுனர் என்னைத்திட்ட
அவள் மறைந்துப் போய்விட்டாள்

உலகம் நம் கையில்

இன்பம்,துன்பம் மனதுள்ளே
இதை எண்ணத் துன்பமில்லே
காசுக்கு உண்டு இரணடு பக்கம்
இன்பம் துன்பம் வாழ்க்கையின் பக்கம்
வளர்வதும் தேய்வதும் நம் எண்ணத்திலே
முதுமையும் இளமையும் நம் உள்ளத்திலே
அன்பு ,பாசம் வேணும் நம் நெஞ்சத்திலே
வேறு கோயில் இல்லை உலகத்திலே
பகைவரும் நண்பராவர் நம் இதய்த்திலே
எங்கும் கடவுளைக் காண் ஆழத்திலே
அனபைத் தட்டிவிடுவோம் உலகத்திலே
உலகம் வந்துவிடும் நம் கைகளிலே

அன்புடன் விசாலம்

கைக்குட்டை

"கைக்குட்டை காதல் கடிதம் இது ஒரு கனவா" இந்தப்பாட்டு யாருக்குத்தான் தெரியாது?
ஆம் ,,கைக்குட்டை ,மிகச் சின்னப் பொருள் தான் ஆனால் அதன் மஹத்துவமோ சொல்லி
முடியாது ,இதை வாங்க அதிகச் சிலவுமில்லை ,இதை வைத்துக்கொள்ள அதிக இடம் தேவையும் இல்லை,அது இல்லாமல் நாமும் இல்லை ,முகம் துடைக்க வேண்டுமா?
உடனே கையில் கைக்குட்டை ,சாப்பிட்டு முடித்தவுடன் எடுப்பது கைக்குட்டை
தும்மல் வந்ததா?கேட்கவே வேண்டாம் கையில் தயாராக வருவது இது ,கொல் கொல்லென்று இருமலா உடனே வாயைப்பொத்திக்கொள்ள வரும் ,சிலர் சேர்ந்தாற்போல் ஐந்து தும்மல் தும்மி விட்டு கிருமிகளைத் தாராளாமாகப் பரவவிட்டு பின் மெதுவாக கைகுட்டையைத் தேடுவார்கள் ,அப்படி ஒரு ரகம் ,,,,கண்வலியா ,அழுகையா ,,,,உடனே
நாம் அடைக்கல்ம் புகுவது இதில்தான் ,
பெண்களுக்கு காரியம் சாதித்துக்கொள்ள உதவும் அஸ்திரம் கண்ணீர் அந்தக் கண்ணீரைக்
கேவிக் கேவி துடைக்க ,பின் ஓரக்கண்ணால் எதிராளியின் முகத்தைப் பார்த்து பின் முகத்தை மூட உதவுகிறது இந்தக்கைகுட்டை சில பெண்மணிகளுக்கு புடவைத்தலைப்பே கைக்குட்டையாகிவிடும் ஒரு சிலர் பிரயாணம் போது ரூபாய்களைக்
கைகுட்டையில் சுருட்டிப் பின் தன் சட்டைக்குள் பத்திரப்படுத்துவார்கள், மிக பத்திரமான
பாதுக்காப்பு. அம்மாக்கள் தன் குழந்தைகளை வெளியில் அழைத்துப்போகும் போது அங்கு மூக்குச்சளியைத் துடைக்க உதவுவது இந்தக்கைக்குட்டை ,

முன காலத்தில் பலர் மூக்குப்பொடி போடுவார்கள் அவர்களுக்கு மிக உதவியாய் இருந்தது இது ,அதன் கலர் வெண்மை இல்லாமல் மூக்குப்பொடி கலரில் இருக்கும்
தனியாகத் துணி வாங்கி தைத்துக் கொள்வார்கள் அந்தக்கைக்குட்டையைத் தோய்ப்பது
ஒரு சவால் தான் ,கைக்குட்டை காதலையும் வளர்க்கிறது,ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும் போது வேண்டுமென்றே கைக்குட்டையை காதலன் வைத்து
விட்டுச் செல்ல காதலி அதை எடுத்து .அந்த வாசனையய அனுபவித்து பின் அதில் அவன் பெயரை அழகாக வர்ண நூலால் அலங்கரித்து அதை அவன் ஞாபகமாக வைத்துக்
கொள்வாள் சில சமயம் அதை அவனுக்குத் திருப்பிகொடுக்கும் சாக்கில் அவனைப்
பார்க்கச் செல்வதும் உண்டு இந்தக் கைகுட்டையால் பல சந்திப்பு ,,பின் காதல் மலரும்
சில சமயம் கைக்குட்டை காற்றில் பறந்து வந்து தூது விடும் ,சினிமாவில் இதை வைத்து
சில கதைகள் ஓடும்
கிரிமினலிலும் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது ,கிட்நேப் செய்யவேண்டுமா கைக்குட்டையில் குலோரோபார்ம் வைத்து குறிப்பிட்ட நபரின் முகத்தில் வைக்க
அவ்வளவுதான் ,,,மயங்க வைத்து குண்டுகட்டாய் காரின் உள்ளே அள்ளிபோட்டுக்
கொண்டு ஓடுலாம் கைக்குட்டையால் கழுத்தை நெரிக்கலாம் பெரியகைக்குட்டையால் கை கால்கள் கட்டலாம்
திருட்டுப்பொருட்களை அவசரத்தில் கைக்குட்டையில் முடிந்து
தலைத்தொப்பிக்குள் மறைக்கலாம் ,,கைத்தடயங்களையும் இதைக்கொண்டு அழிக்கலாம்


விபத்தின் போதும் இது மிக உதவும் இரத்தத்தைதுடைக்க ,எலும்பு முறிநதால்
அந்த நேரத்திற்கு சேர்த்துக்கட்ட ,,பாம்பு கடித்தால் உடனே இரத்தம் மேலே பரவாமல் இருக்க ஒரு கட்டு போட இந்தக்கைக்குட்டை உதவுகிறது
இந்தக்கைக்குட்டையின் பூர்வீகம் என்ன?
இது முதலில் ஆங்கிலத்தில் கோர்டேfப் என்று இருந்தது பிரன்சு மொழியில் குவ்ரேசீப்f
என்று இருந்தது ,இதைத் தலையில் முடியாகாக் கட்டிக்கொண்டார்கள் ஆங்கிலேயர்கள்
முதலில் ரோமன் நோபிள் ஒரு பெரிய லினன் துணியில் சதுர வடிவமாக செய்து
வியர்வைத் துடைக்க உபயோகித்தனர் கிரேக்கர்கள் அதில் ப்லவகையான் வாசனைத்
திரவியமும் தடவி கம்கம்க்க வருவார்கள் இவர்கள் பெரிய செல்வந்தராக இருப்பார்கள்
இதன் பிறகுதான் சிறியக் கைக்குட்டை உபயோகத்திற்கு வந்தது
உடல் தூய்மையைப் பேணி பாதுகாக்க இங்கலாந்தில் இரண்டாம் ரிசர்ர்ட் மன்னர்
இதைக்கண்டுபிடித்தார் .முன்பு போரில் சரண் அடையவும் போர் நிறுத்தவும் வெள்ளைக்கொடிக்குப் பதிலாக இதை
உபயோகித்தனர் ,வட அமெரிக்காவில் டிஷ்யூ பேப்பரைக்
கைக்குட்டைக்குப் பதிலாக உபயோகித்தனர் ,சுகாதாரத்திற்கு இதுதான் சிறந்தது
என்றனர் ஜப்பான் சிலோனில் இது மிக நாகரீகமாகக் கருத்தப்படுகிறது

முதன் முதலில் கிளீனெக்ஸ் என்ற கம்பனி முதலில் மேக்கப் சாயங்களைத் துடைத்துப்போட டிஷ்யூ தயாரித்தது பின் மூக்கு சிந்த துணியே சரியாகுமென்று எண்ணி இதுப் போல் ஹேன்கி என்று தயாரித்தனர் "பண்டானா என்ற பெரிய கர்சீப்
தயாரித்தனர் அதில் பளீரென்ற அழுத்தமான வர்ணங்கள் சிவப்பு நீல்ம் பச்சை போன்றது
இருந்தன . இதைத் தலையில் அழகுக்காகவும் மோட்டர்சைகளில் போகும் போதும்
தலை முடி பறக்காமல் இருக்கவும் கட்டிக்கொண்டனர்
சிலர் தங்கள் குழுவின் அடையாளச்சின்னமாக வைத்துக் கொண்டனர் அமெரிக்காவில்
"கிரிப்ஸ்குழு" நீல வர்ணத்த்தில் இதை உபயோகித்தனர்
இதை மடித்து வைத்துக் கொள்ளும் ஸ்டைலும் பலவிதம் ,சதுரத்திலும் முக்கோண்த்திலும் ஒருபக்கம் மட்டும் தெரிவது போலவௌம் அவரவ்ர் விருப்பப்படி
உபயோகிக்கலாம்
கடற்கரையில் தலையில் முண்டாசு போல் கட்டி சூரிய வெளிச்சம் வாங்கும் பலர்,,,,,,,
கிரிக்கெட்மேட்சில் கைக்குட்டையால் ஊக்கமூட்டும் பல்ர் ,,, கவ்வாலி பாடும் போது
கைகளில் கட்டி கொண்டு பாடுவர் பலர் ,,என்று
கைக்குட்டையின் உபயோகம் எண்ணில் அடங்காது ,
கைக்குட்டையை ஆட்டி பை பை ,,,,,,,,,சொல்வது

அன்புடன் விசாலம்