அன்னை ராஜராஜேஸ்வரி கொலுவிருந்தாள்
ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்து கொலுவிருந்தாள்
முத்துமண்டபத்தில் அமர்ந்திருந்தாள்
என் உள்ளத்திலே வந்து கலந்திருந்தாள் .
அலைமகள் கலைமகள் அங்கு இருக்க
சப்த கன்னிகள் அங்கு கீதம் பாட
நந்திகேஸ்வரர் மேளம் கொட்ட
தேவி பரமேஸ்வரி கொலுவிருந்தாள்
சிவமனோகரியாய் அருள்புரிந்து நின்றாள்
என் சிந்தையிலே வந்து மிதந்து நின்றாள்.
வெள்ளைத்தாமரையில் வீற்றிருந்தாள்
வீணையில் நாதத்தைக்காற்றினில் கலந்தாள் ,
அன்னவாஹன தேவியானாள்
வித்தைகளுக்கெல்லாம் தலைவி அவள்.
மரகதக்கரங்கள் வீணையை மீட்ட
கல்யாணி வந்து கொலுவிருந்தாள்
சிம்மவாகனத்தில் அமர்ந்து வந்தாள்
கையில் சூலம் ஏந்தி நினறாள்
மகிஷனை வதம் செய்தவள்
மகிஷாசுரமர்த்தனி ஆனவள்
அருள் புரியும் துர்க்கையானாள்,
முப்பத்து முக்கோடிதேவர்கள் மலர் தூவ
ரத்னஹாரங்கள் அங்குமிங்கும் அசைய
நவரத்னசிம்மாசனத்தில் கொலுவிருந்தாள்
என் இதயத்தில் வந்து கலந்து நின்றாள் .
Monday, November 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment