Monday, November 8, 2010

நமக்குள் ஒரு ராவணன்

வட இந்தியாவில் நவராத்திரியை "தசேரா" என்று கொண்டாடுகிறர்கள் .இங்கு ஒரு
பெரிய மைதானத்தில் {தில்லியில் ராமலீலா மைதானம்} இராமயணத்தை நாடகமாகப்போடுவார்கள் அதில் துளசிராமாயணம் பெரிய பங்கு வகிக்கும்
தஸ் ஹரா என்பது தசேராவாக மாறி இருக்கலாம் .அதாவது பத்து தலைகளை
மாய்ப்பது " என்று பொருள் வரும் அந்தப்பத்து தலைகள் என்பது நம்மிடமே
இருக்கின்றன .அதாவது பொறாமை, .கோபம் ,பேராசை பற்று ,வரட்டுகௌரவம்
தன்னலம் , குயுக்தி புத்தி .வெறுப்பு .வரம்பைத்தாண்டும் காமம் ,ஈகோ .

ஸ்ரீராமரும் இராவணனைக்கொல்ல தேவியை ஆயிரம் தாமரையால் பூஜித்தார் ,
பூஜை முடியும் கட்டத்தில் தேவி விளையாட கடைசி தாமரையை ஒளித்து
வைத்துக்கொண்டாள், ஸ்ரீராமார் கடைசிப்பூவைப்போட கண்களைத்திறந்து
பார்த்தார் .அது அங்கு இல்லாததால் மனம் மிகவும் வருத்தமுற்று
"தேவி இது என்ன சோதனை? பூஜை முடியும் தருவாயில் இப்படி ஆக வேண்டுமா?
பரவாயில்லை என் தாய் என் கண்களைத்தாமரை மலருக்கு ஒப்பிடுவாள்.ஆகையால்
என் கண்ணைப்பிடுங்கி உனக்கு மலராகச்சம்ர்ப்பிக்கிறேன் "
என்று சொல்லியபடியே தன் கண்களைப்பிடுங்க , ஒரு கை வந்து தடுத்து நிறுத்தியது
பாராசக்திதான் அவள் , இதை மிக அழகாக "சூர்யகாந்த் திரிபாடி நிராலா "என்பவர்
ஸ்ரீராம் கி சக்தி பூஜா "என்ற கவிதையில் சொல்லியிருக்கிறார்.

இதில் இராவணின் அழிவு என்பது மனதில் இருக்கும் ஆசாபாசங்களை அழித்து
மனதை வெற்றிக்கொளவது இதை மகிஷாசுரனின் அழிவிலும் பண்டாசுரனின்
அழிவிலும் எடுத்துக்கொள்ளலாம் பஞ்சேந்திரியங்களைக்கட்டுப்படுத்தி ஞானத்தை
வரவழைக்கும் செயல் மனதைக்கட்டுப்படித்தினால் தான் இயலும் ,மனம் ஒரு குரங்கு.
தாவிக்கொண்டே இருக்கும்
அந்தக்குரங்கைக்கட்டிப்போடுவது அவ்வளவு எளிதல்ல அதற்கு அம்பாளின் அருளும்
நாமஸ்மரணையும் வேண்டும் ,இடைவிடாநாமஜபத்தால் மெஸ்மரிசம் போல் இந்த
மனக்குரங்கு கட்டப்பட்டுவிடும்

பாண்டிசேரி அன்னையை ஸ்ரீ அரவிந்தார் முத்தேவியின் ரூபமாகக் காண்கின்றார்,
மஹாலட்சுமி ,மஹாசரஸ்வதி , மஹாகாளியின் ஸ்வரூபமாக சேர்ந்து மஹேச்வரியாக
காட்சி அளித்தார் ,அந்த மஹேச்வரியின் படம் வீட்டில் இருநதால் மிகவும் நல்லது
என்கிறார்கள் அன்னையின் பக்தர்கள் ,

"ஆனந்தமயீ சைத்தன்யமையீ சத்யமயீ " என்று அன்னையை அழைப்பபர்கள் . இதைப்பார்க்க பேரானந்தம் கிடைப்பது என்பது மனதிற்குள்
இருக்கும் ஒளியை க்கண்டுப்பிடித்து சத்தியத்தின் பாதியில் நடப்பதும் அதனால் வரும் இன்பமென்று தோன்றுகிறது .

No comments: