வீர பஜ்ரங்கபலி என்றாலே வடநாட்டில் அருள் புரியும் அனுமானைக்குறிக்கும்.
மராட்டியர்கள் கன்னடிகர்கள் அனுமாரைப் பூஜிக்கும் போது ஜெய் பஜரங்கபலி" என்று கோஷம் இடுவார்கள் அவர்கள் "மாருதி "ஹனுமானை அழைப்பதுண்டு.
பெங்களூரில் கெம்பகௌடா என்ற அரசர் பல கோயில்களைக்கட்டியிருக்கிறார்
பசவங்குடி நந்திகேஸ்வரர் கோயில் என்றால் தெரியாதவரே கிடையாது ,கோரமங்களா லட்சுமி , தொட்டா கணபதி என்ற கோயில்களும் இவர் கட்டியதுதான்
இவரது " கரெஞ்சி ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது மிகவும் புராதனமானது இந்த அனுமார் இங்கு வந்ததே அரசர் கெம்பகௌடாவுக்கு ஏற்பட்ட
ஒரு வியப்பூட்டும் சம்பவத்தினால் தான்
சிறு வயதிலேயே அரசருக்கு ஹம்பி போன்ற பெரிய நகரை உண்டாக்கவேண்டும் என அளவுகடந்த ஆசை ஏற்பபட்டது. இதற்காக மன்னர் திரு கிருஷ்ணதேவராயரையும் சந்தித்து
சமமதம் பெற்று பன்னிரண்டு கிரமங்களையும் பெற்றார்
பின்னர் ஒரு காட்டுப்பகுதியைத் தேர்ந்தெடுத்தார் .
ஒருநாள்.... கெம்பகௌடா ஒரு அருமையான கனவு கண்டார். தாமரை மலருடன்
இலட்சுமி தேவி புன்னைகையுடன்அவர் முன்
தோன்றிஅருள் புரிந்தாள்.பின்னர் சாதுக்கே பெயர் பெற்ற ஒரு முயல் வந்தது அப்போது அநதப்பக்கம் ஒரு வேட்டை நாயும் வந்தது அதன் நாக்கில் நீர் கசிந்தது. முயலைக்குறி வைத்தது
ஆனால் முயலோ அதை எதிர்த்து மனோதிடத்துடன் துரத்தியது .
கனவு கலைந்தது " ஆஹா என்ன அருமையான கனவு ! இந்தக்காட்டுபகுதியில் ஒரு நல்ல கோயில் எழுப்பவேண்டும் " என்று எண்ணி ஒரு நல்ல நாளில்
அந்தஇடத்தைச்சரி செய்து நாலு காளைகளைக்கொண்டு உழ ஆரம்பித்தார் .
பின் மலைப்பகுதியைக்குடைய சிறு குன்றின் அடிவாரத்தில் "ஆஞ்சநேயர்"
சுயம்பு வடிவாக பூமிக்குள்ளிலிருந்து எடுக்கப்பட்டார்
அரசர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை உடனேயே அந்த உருவத்திற்கு
மந்திரங்கள் மூலம் உயிர் கொடுத்தார் அந்த இடத்திலேயே சின்ன கர்ப்பகிரஹம்
கட்டினார் .தினமும் பூஜையும் தொடர்ந்தது
பின் இங்கு ஒரு கோயிலும் எழுந்தது
இந்த அனுமாரின் உயரம் எத்தனைத் தெரியுமா?
இந்த மாருதி சிலையின் உயரம் சுமார் 22 அடி மிகவும் உக்ரமாகவும் வீரமாகவும்
காணப்படுகிறார் .இலங்காபுரியை ஒரு கலக்கு கலக்கிவிட்டு வாலில் தீ யுடன்
இலங்கையை எரித்து பல பாகங்களைச்சேதம் செய்து இந்திரஜித்துடனும் மோதிவிட்டு பின் வந்து அமர்ந்த இடம் இது தானாம். காதில் விழுந்த செய்தி இது இவர் சீதா தேவி ஸ்ரீராமருக்குக்காட்டச்சொல்லிக் கொடுத்த சூடாமணியைக் கையில் பொத்தியவாறு முகத்தின் அருகே வைத்திருக்கிறார்
சன்னதிக்கு முன் புறம் இருக்கும் கொடி மரத்திலும் மூலவர் ஆஞ்சநேயரின்
உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது.
அனுமன் அருள்புரிய அவ்ர் எதிரே இருப்பவர் ஸ்ரீராமர் . இவர் த்னியாக இல்லை
சீதா இலக்ஷ்மணருடன் சேர்ந்து மந்தஹாஸ்வதனத்துடன் அருள் புரிகிறார்
மேலே விமானத்தில் விஷ்ணுவின் தசாவதாரம் சித்தரிக்கப்ப்ட்டிருக்கிறது. இங்கு
அனுமன் ஜயந்தி மிக விமரிசையாகக்கொண்டாடப்படுகிறது கூட்டம்
அலைமோத எல்லோரும் அனுமனின் அருள் பார்வையில் தங்களை மறந்து
பிரார்த்தனை செய்கின்றனர் ஏழரைச் சனி பிடித்தவர்கள் பலர் இங்கு செவ்வாய்,
சனியன்று எள்ளு விளக்கேற்றுகின்றனர்
"ஆஞ்சநேய வீரா அனுமநத சூரா
வாயு குமாரா வானர வீரா "
உனக்குக்கோடி நமஸ்காரங்கள்
Saturday, January 8, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment