Monday, November 8, 2010

"அன்ன கூட்"

தீபாவளி முடிந்த மறு நாள் "கோவர்த்தன பூஜை " மிகவும் உற்சாகமாக பீஹார் உத்தர்பிரதேசம் ஹரியானா ராஜஸ்தான் போன்ற மாகாணங்களில் நடக்கும் .விழாவன்று எல்லோரும் இரவு முழுவதும் தூங்காமல் ஆட்டத்திலும் பஜன்களிலும் பங்கு ஏற்று தங்களையே மறப்பார்கள். கோ என்றால் பசு வர்தனா என்றால் ஊட்டம் தருவது என இருக்கலாம் . ,ஆடுமாடுகளுக்கு வேண்டிய சக்தியைக்கொடுக்கும் புற்கள் நிறைந்த நிலங்கள் சூழ்ந்த இடம் தான் இது .

கிருஷணர் பால பருவத்தில் ஓடிவிளையாடிய இடம் தான் இந்த விரஜபூமி .இந்த இடத்தில் தான் கோவர்தன மலை வந்து அமர்ந்தது ,இந்தக்கோவர்தன மலை வந்து அமர்ந்ததற்கு வடநாட்டில் சொல்லும் புராணக்கதை என்னவென்று தெரியுமா?

துரோணாசலம் என்ற அரசன் சத்யயுகத்தில் ஆண்டு வந்தான் இவன் மலைகளின் அரசன் . அவனது மகனின் பெயர் கிரிராஜன் .ஒருநாள் புலஸ்தியமுனிவர் அரசனிடம் வந்தார்
"அரசே நான் காசிக்குப்போகிறேன் .என்னுடன் தங்கள் மகன் கிரிராஜனையும் அனுப்பி வைக்க அனுமதி தாருங்கள் " என்றார் .

"இது என் பாக்கியம் அழைத்துச்செல்லுங்கள் கிரிராஜா கிரிராஜா இங்கே வா ."

"என்ன தந்தையே நான் என்ன செய்யவேண்டும் ?'

"கிரிராஜா நீ இந்தப்புலஸ்திய ரிஷியுடன் காசிக்குச்சென்று வரவேண்டும் இது அவர் வேண்டுகோள்"

"அப்படியே செய்கிறேன் தந்தையே ஆனால் ......

"ஆனால் என்ன?

"முனிவர் என்னைத்தூக்கிச்செல்ல வேண்டும் கீழே இறக்கினால் நான் அங்கேயே அமர்ந்துவிடுவேன் இதற்கு சம்மதம் என்றால் நான் அவருடன் போகிறேன் "

புலஸ்திய ரிஷி யோசித்தப்பின் ஒப்புத்துக்கொண்டார் .

இருவரும் மதுராபுரி வந்தவுடன் கிரிராஜன் வேண்டுமென்று தன் உடலைப் பெருக்கிக்கொண்டான்,
ரிஷிக்கும் இவனைத்தூக்க முடியாமல் சிரமம் ஏற்பட கீழே இறக்கிவிட்டார்.
ஆனால் த்ன்னை இப்படி ஏமாற்றியதற்கு சாபம் கொடுத்தார்.

"உன் உருவம் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையட்டும் " ஆனால் அவசரத்தில் அவர் சாபமிட்டது தவறு என்று அவர் மனதில் தோன்ற " அன்பு கிரிராஜா துவாபரயுகத்தில் உனனை எல்லோரும் பூஜை செய்வார்கள் புகழுவார்கள் போற்றி வணங்குவார்கள் ." என்று மனதார வாழ்த்தினார்.


த்ரேதாயுகம் வந்தது ராமரின் அவதாரம் ....ராமர் வனவாசம் பின் சீதாஹரணம் என்று போய் ஸ்ரீராமர் இலங்கைக்குப்போக, கடலைக்கடக்க ,பாலம் அமைக்க ,கற்கள் சேகரிக்க கிரிராஜனை அழைத்து அனுமன் இந்த வேலையை அவனிடம் ஒப்புவித்தார் .ஆனால் அந்தப்பணியை நள்ன் முடித்துவிட கிரிராஜன் வருத்தமுற்றான்
ஸ்ரீராமர் அவன் வருத்த்தைப்போக்க " கிரிராஜனே வருந்தாதே . நான் துவாபரயுகத்தில் கிருஷணனாக அவதாரம் எடுப்பேன் அப்போது நானே உன்னை வழிபடுவேன் " என்றார்

கண்ண்ன் பிறந்தான் வளர்ந்தான் விரஜபூமிக்கு வந்து இராஸலீலையில் ஈடுபட்டான் ஒவ்வொரு வருடமும் அங்கு இந்திரபூஜை நடக்கும் ஆனால் இந்த மாயக்கண்ணன் அதை மாற்றினான் கோமாதாவுக்கும் கால்ந்டைகளுக்கும் உணவைக்கொடுக்கும் கிரிராஜனை வணங்க வைத்தான் கண்ணன் சொல்லே மந்திரமாக ஏற்றுக்கொண்டு அவன் வார்த்தையில் கட்டுண்ட விரஜவாசிகள் இந்திரனை மறந்து அந்தமலையைப்பூஜிக்கத் தொடங்கினார்கள் அவ்வளவுதான் இந்திரனுக்கு வந்தது கோபம் .திடீரென்று இடி இடித்து கனமழையை உண்டாக்கினான் .பசுக்கள் விரஜவாசிகள் ,கோபியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர் .

புன்னகையுடன் வந்தான் மாதவன் .தன் சுண்டுவிரலால் அந்த மலையைத்தூக்கி அதனடியில் தன் மக்களுக்குப்புகலிடம் கொடுத்து காத்தான் . இந்திரனும் பின்னால் கண்ணனிடம் மன்னிப்புக்கோரினான் ,

"கோவர்த்தன மலையைக்குடைப்பிடித்த கண்ணனாம் "என்ற பாடலும் உண்டு
இந்த ஞாபகமாக ஒரு சின்ன மலையைச் சாணத்தினால் உண்டாக்கி அதற்கு மலர்மாலைச் சார்த்திப்பின் அழகான ரங்கோலி என்ற வண்ணக்கோலம் இட்டு அதை கோவர்த்தனகிரியாக வழிபடுவார்கள் அந்த ஊர் மக்கள்.பின் கண்ணனுக்குப்பிடித்த பலவகை இனிப்புக்கள் முக்கியமாக பால் தயிர் சேர்த்த பலகாரங்கள் அன்னம் .பருப்பு,என்று 56 வகைகள் நைவேத்தியம் செய்ய எடுத்துவந்து அதையும் மலைப்போல் குவிப்பார்கள் .
இதை "அன்னகூட்" என்கிறார்கள் ,

சில மக்கள் சாதம் வடித்து அதையே மலைப்போல் ஆக்கி நைவேத்தியம் செய்கிறார்கள்

அண்ணாமலை கிரிவலம் வருவது போல் இந்த மலையையும் கிரிவலம் வருகிறார்கள் பகீரதன் பூமிக்குக்கொண்டு வந்த கங்கையைப்போல் இங்கும் ஒரு கங்கை இருக்கிறது இதன் பெயர் "மானஸ கங்கை"
கண்ணன் தன் மனதினால் உற்பத்திச்செய்த கங்கை இது .அதனால் "மானஸ கங்கை"என்று பெயர் வந்தது ,
இந்த மலை ஆரம்பத்தில் 30 கிமீ உயரம் இருந்ததாம் இப்போது 80 அடி உயரம்தான் இருக்கிறது என்று சொல்லிக்கொள்கிறார்கள் ,
இந்த மலையில் அங்கப்பிரதக்ஷிணமும் செய்கிறார்கள் ,இந்த கோவர்த்தனபூஜை செய்ய பாபங்கள் நீங்கி வாழ்க்கை வளமுறும்,

No comments: