Monday, November 8, 2010

கட்டுவோம் நம் இதயத்தில் ஓர் ஆலயம்

ஷீரடி பாபாவின் தலையணை ஒரு செங்கல். அந்த்ச்செங்கல் தான், ஷீரடிபாபா அந்தக்கிராமத்தில் கால் வைத்த தினத்திலிருந்து அதை உபயோகித்தார் ,
அவர் மறைவுக்குக்கொஞ்சம் நாள் முன் அந்தச்செங்கல் உடைந்துப்போய் அவரது
சித்தியடையும் வேளையைக்குறிப்பிட்டது போலும் ,

துவாரகாமாயிக்குள் நுழைந்த ஒரு சிறுவன் மிகவும் சாக்கிரதையாக அந்த இடத்தைச்சுத்தம் செய்துக்கொண்டிருந்தான் மேலே தூசியைத்தட்ட கீழே தூசிகள்
விழுந்தன .பாபாவின் தலையணையான அந்தச்செங்கல் அங்கு இருந்தது .அதில்
தூசி குப்பைகள் விழாதிருக்க அதை வேறு இடத்தில் வைக்க அதைத்தூக்கினான்.
ஆனால் நடந்தது என்ன! கைத்தவறி அது கீழே விழுந்து பாதியாக உடைந்துவிட்டது

பாபா வெளியிலிருந்து துவாரகாமாயி திரும்ப நடந்ததை அறிந்தார் .அந்தப்பையன்
மாதவ் போஸ்லே மனம் வருந்தி அழுதான் ,பாபா அந்தச்செங்கல் உடைந்ததும்
தானும் ஒரு சாதாரண மனிதன் தான் என்று காட்டவோ என்னவோ மிகுந்த
கோபம் வந்தாற்போல் கண்கள் சிவந்தன .

"உடைந்தது என் இதயம் உடைந்தது போல் ஆகிவிட்டது , உடைந்தது செங்கல் இல்லை .உடைந்தது என் கர்மாவே" என்றார்.

அவர் முடிவு நெருங்கி விட்டது என்பதைச் சூசகமாகச்சொன்னாரோ?

பல தடவைகள் அவர் முடிவுக்காலம் நெருங்குவதை உணர்த்தினார் .

"இந்த உடம்பு சாஸ்வதமில்லை இது அழிவு பெறக்கூடியது ,ஆன்மாவே நிலைத்து
நிற்பது " என்றும் அவர் கூறி தன் முடிவைத் தெரிவித்தார் ,

1916ல் விஜயதசமி தினம் வழக்கம் போல் வீதியில் ஊர்வலம் வந்துக்கொண்டிருந்தது .
அதற்கு மராட்டியில் சீமோலங்கன் என்று பெயர் சீமா என்றால் எல்லை உல்லங்கன்
என்றால் தாண்டுவது என்று இங்கு அர்த்தம் அதாவது எல்லையைத் தாண்டுவது ,
அழகாக் வந்துக்கொண்டிருந்த பாபா அவர்கள் திடீரென்று கோபத்தால் கண்கள் சிவக்க
தன் உடைகளைக்கிழித்துக்கொள்ள ஆரம்பித்தார் .அங்கு எரிந்துக்கொண்டிருந்த
துனி என்ற நெருப்பில் உடைகளைப்போட்டார் தன்னுடைய கைக்கம்பினால்
அந்த மசூதியின் தரையை "டபார் டபார்" என்று அடித்தார் பின் கத்த ஆரம்பித்தார்.

"நான் இந்த எல்லையைத்தாண்டிப்போகப்போகிறேன் "

ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை ஏதோ நடக்கப்போகும் ஒன்றைச்சொல்கிறார்
என்று மட்டும் ஒரு சிலருக்குப்புரிந்தது .பின் சில் நிமிடங்களுக்க்பிற்கு சாயிபாபா தன் நிலைக்கு வந்தார் பின் பக்தர்கள் அளித்த உடைகளையும் தலையில் கிரீடத்தையும்
அணிந்துக்கொண்டு சாவடிக்குத்தயாரானார்
இவர் சொன்னது போல்வே 1918 சரியாக இரண்டு வருடங்கள் கழித்து அதே விஜயதசமி
அன்று 2 -30 க்கு அவரது கடைசி மூச்சாக இருந்தது .


அவருக்கு இலேசாக சுரம் கண்டது அப்போது கூட ஒருவரும் அவர் அவர்களை
விட்டுப்போய்விடுவார் என்று எண்ணவில்லை .

அந்த்ச்செவ்வாய்க்கிழமையை மற்க்க முடியுமா?

துவாரகாமாயி யில் அவர் உடன் இருக்கும் இருவரை அவர் சூசகமாக வெளியில் ஒரு
காரியமாக அனுப்பிவிட்டார் அவருடன் நிழல் போல் இருந்த ஸ்ரீலட்சுமி பாயிக்கு
கொடுக்க வேண்டிய ஒன்பது ரூபாய்க்களை முதலில் ஐந்தும் பின் நாலுமாகக்கொடுத்தார். பாசத்தின் காரணமாக இதைக்கொடுத்ததாக பலர் நினைத்தனர் ,
பின் ஒவ்வொருவராக எல்லோரையும் அனுப்பிவிட்டார் பின் தன்னிடம் பயாஜி கோதே
என்பரை மட்டும் வைத்துக்கொண்டார்
பின் அவர் காதில் "என்னைத் "தகடி வாடா" என்னும் இடத்திற்கு அழைத்துச்செல் "
என்றார்
அங்கு அழைத்துச்சென்றபின் அவர் மடியில் சாய்ந்தார் உட்க்கார்ந்த நிலையிலேயே
அவர் சித்தியடைந்து விட்டார்

முப்பத்தாறு மணி நேரம் அவரது உடல் வைக்க்ப்படிருந்தாலும் அந்த உடல் விரைத்துப்போகவில்லை .அவரது கப்fனி உடை மிகவும் எளிதாகக்கழட்டப்பட்டது துணியைக்கிழிக்கும் நிலைமை
ஏற்படவில்லை உடல் நன்கு வளைந்துகொடுத்ததாம்

பாபாவின்ஸ்தூல உருவம் நம்க்கு இப்போது தெரியாவிட்டாலும் அவர் பூத உடலில் இருக்கும் போது எப்படி பக்தர்களுக்கு அருள் வழங்கினாரோ
அதேபோல் இன்றும் வழங்கி வருகிறார் ,பாபாவின்
படத்தைப்பார்த்தாலே நம் மனதில் ஒரு அமைதி
கிடைக்கிறது
நம் இதயங்களில் {பக்தர்கள்} அவரது ஆலயம் இருக்கிறது அந்த ஆலயத்தில் அருள் என்ற
பிரசாதம் நம்க்குக்கிடைத்த வண்ணம் இருக்கிறது

இந்த விஜயதசமி தினத்தில் பாபாவின் சாவடி ஊர்வலமும் படித்து அவரை நினைவுக்கொண்டு
அவர் அருளைப்பெறுவோமாகுக் .

No comments: