Sunday, October 3, 2010

பித்ருகர்மா

தருமபுத்திரரை யக்ஷன் ஒரு கேள்வி கேட்டான்

"உலகத்தோரால் கொண்டாடப்பட்டாலும் எவன் உயிரற்றவன் போலாவான்?"
தருமபுத்திரர் நிதானமாக யோசித்தார் ,பின் கூறினார்

"தெய்வம் , அதிதி பணியாட்கள் பித்ருக்கள் ஆகியோருக்கும் ஆத்மாவுக்கும்
எவன் திருப்தி செய்யவில்லையோ அவன் மூச்சு விட்டாலும் உயிரற்றவன் போலவான்
"

இந்தப்பதில் சரியானதாக இருக்க யக்ஷன் திருப்தி அடைந்தான்

ஆடி மாத அமாவாசை தை மாத அமாவாசை மாஹாளய பக்ஷம்
அமாவாசை போன்ற நாட்களில் பித்ருக்களைத்திருப்தி படுத்துவது
அவசியம் .இதை தர்மசாஸ்திரமும் தெளிவாக கூறுகிறது
இறந்த முன்னோர்களை நினைத்து அவருக்கு நன்றி தெரிவிப்பது நமக்கு
விதிக்கப்பட்ட கடமைகளில் மிக முக்கியமான ஒன்று

கோயிலுக்குச்செல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் ஒவ்வொருவரும்
இறந்த தமது பெற்றோர்களுக்குச்சிரார்தம் செய்வது மிகமிக அவசியம்
இவைகளைக்கைவிட்டால்தான் பித்ருதோஷம் என்று ஒன்று ஏற்பட்டு
வம்சத்தையே பாடுபடுத்துகிறது அவர்களைத்திருப்தி செய்யாவிட்டால்
பித்ரு சாபம் "என்று ஒன்று வந்து சேர்கிறது

இந்து மதத்தில் குடும்பத்திற்கு மிக முக்கியத்வம்
கொடுக்கப்பட்டிருக்கிறது.
பெற்றோர்கள் தங்கள் உயிரையும் கொடுத்து தாங்கள் பெற்ற செல்வங்களுக்கு
கல்வி ,நற்பண்புகள் சொல்லிக்கொடுத்து வளர்த்து ஆளாக்குகிறார்கள்
இதைச்செய்யும் போது பல தியாகங்களையும் செய்கிறார்கள் அப்படிப்பட்ட
அவர்களைக் கடைசிக்காலத்தில் நன்கு கவனிப்பதோடுமல்லாமல் இறந்தப்பின்னும்
சாஸ்திரப்பிரகாரம் , சிரார்த்தம் தவறாமல் செய்ய வேண்டும் செய்வதில் ஒரு
சிரத்தையும் இருக்க வேண்டும் அப்படி செய்தால
பித்ருக்கள் மகிழ்ந்து போக பித்ரு தேவதைகள் நமக்கு நற்பலனை
அளிப்பார்கள் .ஒவ்வொருவரும் விடாமல் செய்ய வேண்டிய கர்மா இது

No comments: