Sunday, March 14, 2010

ஆண்டவன் வாசல் திற்க்கட்டும்

அன்பெனும் வாசலை மூடாதே .
பின் ஆண்டவன் வாசலும் மூடிவிடும்
உலகெக்கெல்லாம் அது ஆதாரம்
அதில்லாமல் வாழ்க்கை சேதாரம் ,
அன்பெனும் இலக்கில் கப்பல் விடு
வாழ்க்கைக்கடல் கடக்கும், கவலைவிடு.
அன்பு என்ற எழுது கோல் பிடி
படைப்புக்கள் அதைக்கொண்டு வடி .
இன்பக்கேணி சுரக்கட்டும்
பகை ஓடி மறையட்டும்
மனித நேயம் வளரட்டும்
சாதிமதபேதம் ஒழியட்டும்

இன்றைய காலம் ,
தவிக்கும் காலம்
பல மாற்றங்கள் காணும் காலம்
அன்பு மறைந்துப்போன காலம்
சத்தியம் ஒளிந்துக்கொண்ட காலம்
சுயநலமே தங்கும் காலம்
அன்பு நெறியை மறந்தக் காலம்
பிழைகள் பல மலிந்தக்காலம்
ஆனாலும் மனம் கலங்காதே
என்று மாறுமோ என்று வருந்தாதே
அன்பெனும் மாத்திரை சிறந்த மருந்து.
மன்னிப்போம் தவறை மனம் திறந்து
இறைவன் தாளைப்பணிவோம் என்றும்,
அவனருளில் தஞ்சமடைவோம் ,,,,,,.

No comments: