Sunday, March 14, 2010

காமாட்சி அம்மன் விரதம்

மாசி மாதம் முடிவு பங்குனி மாதம் தொடக்கத்தில் காரடை நோம்பு வருகிறது
பெண்மணிகள் தங்கள் கணவர் சுக
க்ஷேமத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்தித்து விரதம் நோற்பது
வழக்கம் இதன் பிண்ணனியில் சாவித்திரி
சத்தியவானின் கதை வருகிறது தன் மன உறுதியினாலும் கற்பினாலும்
யமனிடமிருந்து தன் புருஷன் சத்தியவானை இறந்தப்பின்னும்
உயிர்பிழைக்கச்செய்யும் உத்தமியின் கதை இந்த விரதம் ஏற்று இந்தக்கதையும்
படிக்க பெண்களுக்கு "சர்வமங்கள மாங்கல்யே "என்றஸ்லோகத்திற்கேற்ப
வாழ்க்கை அமைகிறது
இந்த விரதம் சாவித்திரி செய்தது இதன் ஆரமபம் பார்வதி தேவியினால் ஏற்பட்டது

கயிலைமலையில் பரமேஸ்வரன் தியானத்தில் இருக்க பார்வதி விளையாட்டிற்காக
தன் பஞ்சுக்கரத்தினால்
மென்மையாக சிவனாரின் கண்களைப்பொத்தினாள். இந்த விளையாட்டு எததனை விபரீதமானது !
ஈஸ்வரனின் கண்கள் மறைய உலகமே இருண்டது எல்லா சீவராசிகளும் த்வித்தன ,
கோபம் வராமல் இருக்குமா? முக்கண்ணனாருக்குக் கோபம் வந்துவிட்டது ,
"பார்வதி என்ன காரியம் செய்தாய் ?உன்னால் உலகமே இருண்டுப்போய் விட்டதே !
இதன் பிராயச்சித்தமாக
நீ பூலோகத்தில் பிறந்து தவம் இருக்கக் கட்டளை இட்டார்

பார்வதி தேவியும் மாங்காட்டில் காமட்சியாக ஒரு ஊசிமேல் நின்று தவமிருந்து
பின் காஞ்சிபுரத்திற்குச்செல்கிறார். பின் கம்பா நதியின் கரையில் அந்த
மணலைக்கொண்டு சிவலிங்கம் செய்து பூஜை செய்து வருகிறாள் ஒரு நாள் கமபா
நதியில் வெள்ளம் பெருகெடுத்து ஓடிவர தன் மண்ல் லிங்கம்
சேதமாகாமல் இருக்க தன் இரு கைகளாலும் அதை மறைத்து சிவபெருமானிடம் மனமுருக
வேண்டுகிறாள்
உடனே வெள்ளம் இரு பிரிவுகளாகப்பிரிந்துச்செல்ல பரமேஸ்வரனும் காட்சி
அளித்து அவளைத்தன்னுடன்
சேர்த்துக்கொள்கிறார் ,இதுவே தான் காமாட்சி விரதம் இந்தவிரதத்தைதான்
சாவித்திரி கடைப்பிடித்து
யமனையும் வென்றாள் ,பிரசாதமாக காரடையும் வெண்ணையும் வைத்ததால் அதுவே தொடர்ந்து
இன்றும் செய்யப்படுகிறது ,இன்று சிவராத்திரியில் அதுவும் சனிப்பிரதோஷமும்
சேர அம்மனின் இந்த விரதம்
அனுஷ்டிக்க மிகவும் விசேஷமான பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கைத்தான்
இன்று சாவித்திரி சத்திய்வான கதைப்படித்தாலும் நல்ல பலன் ,,
ஸ்ரீ அரவிந்தர் தன் சாவித்திரி காவ்யத்தில் இந்தக்கதையை நம் உடலுடனும்
ஆன்மாவுடனும் ஒப்பிட்டு
சைத்தனய சக்தியின் வெளிப்பாடே எமனுடன் போராடிபெற்ற வெற்றி என்கிறார் ,பல
போராட்டங்கள்
உலகில் இருக்கும் மாயை ஆசாபாசங்கள் என்று கருதப்படுகிறது அவர் அதை
ஆங்கிலத்தில் எழுதியிருக்கிரார்
புரியாமலே படித்தாலும் அதன் பலன் உண்டு என்றும் கருதப்படுகிறது
ஒருவருக்குப்பக்கவாதம் வந்து
பல வைத்தியங்கள் பார்த்தப்பின்னர் மனமொடிந்து பின் சாவித்திரி காவ்யம்
படித்தார் இரவில்
அவர் காலருகில் அன்னை வெள்ளைப்புடவையுடன் வந்து அவரது கட்டிலில் அமர்ந்து
அவரது காலை
வருடினார் பின் மறைந்துப்போனார் மறுநாள் அவர் நடந்ததைப்பார்த்து
டாக்டர்கள் எல்லாருமே வியந்தனர்
இதை நான் நேரில் பாதிக்கப்பட்டவ்ர் பேசியத்தைக்கேட்டேன் ,,அந்தக்கூட்டம்
"சாவித்திரி" யின் மகிமை
பற்றியது ஸ்ரீகர்மயோகியின் மகன் திரு அசோகன் வந்திருந்தார் ,
நேரம் கிடைக்க ஒரு பக்கமாவது சாவித்திரியப்படிக்கலாமே ! பெண்மணிகளுக்கு
காரடை நோம்பின்
நல்வாழ்த்துகள்
அன்புடன்விசாலம்

No comments: