Friday, January 22, 2010
பீஷ்மாஷ்டமி
நாட்டு நலனுக்காகவே வாழ்ந்து தன் வாழ்க்கையில்பிரும்மசாரி விரதம் கடைப்பிடித்து தன் தந்தைக்காக திருமண எண்ணமே இல்லாமல் அரசையும் துறந்தபெரிய மகான் , ..உலகத்தில் சாதரணமாக எல்லோருமே இறக்கும் போது மகன்அருகில் இருக்க அவன் கையால் தகனம் கிடைக்கும்பாக்கியம் வேண்டும் என்று எண்ணுவர் ,தவிர அந்தப்பிள்ளை வழியாகச்செய்யும்கர்மாவும் போகும் வழிக்குப்புண்ணியம் சேர்க்கும் என்ற கொள்கையுடன்இருப்பது நமது ஹிந்து மதம்,இதனால் தானோ ஆண் மகன் பிறக்க பலர் வேண்டுகிறார்கள்.சர்தார்ஜி குடும்பத்தில் ஆண் மகன் பிறக்க லோஹ்ரி என்றபண்டிகையை மிக விமரிசையாகக் கொண்டாடுவார்கள் ,அதாவது நமதுபோகிப்பண்டிகையின் போது அவர்களது லோஹ்ரி சிலர் இதை லோடி என்பார்கள் இதுவே பெண்குழந்தையாக இருந்தால் அத்தனைவிமரிசையாக நடத்தமாட்டார்கள்.சர்தார்ஜிகுடும்பத்துடன் மிகவும் நெருக்கமான தொடர்ப்பு இருந்ததால்நான் இதை அறிவேன் ,பீஷ்மர் இறைவனடி சேர்ந்த நாள் ரதசப்தமி அந்த மகானின் நினைவாக அர்க்கியம்விடுவது வழக்கம் மாக மாதம் என்றுசொல்லும் தை 12லிருந்து மாசி பத்து வரை மாக ஸ்னானம்செய்வது வழக்கம் ,பீஷ்ம நிர்யாணம் அஷ்டமி நாளாகக்கொண்டுபீஷ்மாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறதுமகாபாரத யுத்தம் மார்கழியில் அமாவாசையில் தொடங்கியதுபீஷ்மர் கௌரவப்படைக்குத்தலைமையேற்றார் அர்சுனன் அம்புகள்அவர் உடல் முழுவதும் துளைத்தன ஆனாலும் தனக்கு அப்போதுமரணம் வேண்டுமோ அப்போதுதான் மரணம் சம்பவிக்கும் என்றவரம் அவர் தந்தை சந்தனு கொடுத்ததால் அவர் உயிரைப்பிடித்தபடி 58 நாட்கள்உயிரோடு கிடந்தார் அவருக்கென்றுஅம்புகளால் படுக்கை அமைத்துக்கொடுத்தான் அர்சுனன் ,அவரது தாய் கங்கா தேவி அவருக்குத்தாக சாந்தி செய்யபூமியின் அடியில் போய் பாதாள கங்கையாக மேலே பீய்ச்சடித்துஅவர் தாக்த்தைத் தீர்த்தாள் தாயல்லவா ,,,,மகன் இந்த நிலையில் இருக்கஎப்படிச்சகிப்பாள்?தட்சியாயணம் என்பது தேவர்களுக்கு இரவு ,பீஷ்மர் இந்தக்கால்த்தில்மரணத்தைத் தழுவ விரும்பவில்லை தேவர்கள்விழித்து வரும் நாளான உத்த்ராயணக்காலம் வரை அம்புபடுக்கையில் இருந்தார் அந்த நேரத்தில் தான் தருமருக்குஅறங்கள் பற்றி உபதேசித்தார் , இந்தச்சந்தர்ப்பத்தில் தான் பிறந்ததுஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் "இவர் இந்த மாதிரி பிறந்து பிரும்மசாரியாக வாழ்ந்த காரணம்என்ன ?பிரும்மலோகத்திற்கு ஒரு முறை கங்கை சென்றாள் ,அந்த நேரத்தில் மன்னன்மஹாபிஷக் கங்கையின் அழகில் மயங்கி மோகம் கொண்டான் ,பிரும்மா இதைக்கண்டுஇருவரையும் பூமியில் பிறக்க சபித்தார் இந்த மஹாபிஷக் தான்சந்தனுவாகப்பிறந்தார்வ்சிஷ்ட முனிவரிடம் காமதேனு பசு இருந்தது கேட்டதெல்லாம்கொடுக்கும் பசு ,,,, அனலன் அணிலன்ஆபத்சலன் சோமன் தரன், த்ருவன், பித்யூஷன், பிரபாசன்,என்பவர்கள் அஷ்ட வசுக்கள் என வழங்கப்பட்டனர் அதில்பிரபாசனின் மனைவி தன் தோழிக்காக காமதேனுவின்பாலைக்கேட்க அஷ்ட வசுக்கள் அதைத்திருட முற்பட்டனர் ,ஆனால் வசிஷ்டர் இதை அறிந்து பூமியில் பிறக்கஇவர்களுக்குச்சாபம் கொடுத்தார் ,பிரகாசனால்தான் இந்த ஏற்பாடு நடந்ததால் அவன் மனைவி சொல் கேட்டு குற்றம்புரிய நினைத்தால் அவனுக்கு திருமணஇன்பம் என்பதே இல்லாமல் போக வேண்டும் என்று சபித்தார்அஷ்ட வசுக்கள் கங்கையிடம் வந்து தாங்கள் அவளுக்கு மகன்களாகப்பிறக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர் ,இதை நிறைவேற்ற கங்கை அஸ்தினாபுரத்து மன்னன் பிரதீபனைக்கண்டு மயங்கி தன்னை அவர்து வலது தொடையில் அமர்த்திமனைவிஸ்தான்ம் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டாள் ,ஆனால் பிரதிபனோ வலது தொடைமகளுக்கு உரியது ஆதலால் அவளை ஏற்ற்க்கொள்ள இயலாது என்றார் பின்னர் தன்மகன் சந்தனுவுக்குமனைவியாகும்படி அனுப்பி வைத்தார் ,கங்கையும் ஒரு நிபந்தனை போட்டது எல்லோருக்கும் தெரியும்தான் செய்யும் எந்தச்செயலைப்பற்றியும் கேட்கவோ கோபித்துக்கொள்ளவோகண்டுக்கொள்ளவோ கூடாது என்பதேநிபந்தனைவரிசையாக ஆண்குழந்தைகள் ஏழையும் பிறந்த் உடனேயே கங்கை ஆற்றில் வீசினாள்இவர்கள் தான் அந்த ஏழு வசுக்கள்எட்டாவது பிறந்தது ,சந்தனுவுக்கு மனது கேட்கவில்லைஅவள் ஆற்றில் போட வந்த போது சந்தனு தடுத்தார் அவ்வளவுதான் கங்கை இனிசந்தனுவுடன் இருக்க முடியாது என்றும் குழந்தையைத்தான் வளர்த்து சரியானநேரத்தில் கொண்டு தருவதாகவும் சொல்லிச்சென்றுவிட்டாள் இந்த எட்டாவது மகன் தான் அஷ்ட வசுக்களில் பிரபாசன் என்பவன் ,கங்கைமகனானதால் காங்கேயன் ,தேவவிரதன் என்ற பெயரில் அஸ்தினாபுரத்தில் பின் வந்தார்மனைவியைப்பிரிந்ததால் சந்தனு செம்படவன் மகள்சத்தியவதியைக் கண்டு மோகித்து அவளது தந்தையிடம் பெண் கேட்டார் ,அவரோசத்தியவதியின் பிள்ளைகளே அரசபதவி அடைய வேண்டும் என்று கட்டளை இட்டார்இதனால் மனம் கலங்கி சந்தனு வரவே தன் தந்தையின் கலக்கத்தை தேவவிரதன்அறிந்து தான் நைஷ்டிகபிரும்மசாரியாக இருக்கப்போவதாக்வும் தனக்குராஜ்யபதவி வேண்டாம் என்றும் எந்தப்பெண்ணையும்மனதால் கூட நினைக்க மாட்டேன் என்றும் சத்தியம் செய்து கொடுத்தார் ,அஸ்தினாபுர வாரிசு ஒரே மகன் அரசகுமாரன் தன் தந்தையின்சந்தோஷத்திற்காக மணவாழ்க்கை அரசபதவி இரணடையும்துறந்ததைப்பார்த்து தேவர்கள் மலர்கள் சொரிந்தனர் "பீஷ்ம "என்று வாழ்த்தினர்இதைக்கண்டு மனம் நெகிழ்ந்து சந்தனு இரண்டு வரம் அளித்தார்எப்போது தேவவிரதன் மரணத்தை விரும்புகிறானோ அப்போதுதான் மரணம் சம்பவிக்கும்பீஷ்மர் மகாவீரர் உத்தமர் சத்தியசீலர் எல்லாகலைகளையும்கற்றவர் ,தாய் தந்தையை தெய்வமாகப்போற்றி வணங்கியவர் ,கடைசிவரை பிரும்மசாரியாகவே இருந்தார் இத்தனைச்சிறப்பு பெற்ற அவருக்கு பீஷ்மாஷ்டமி அன்று அர்க்கியம் விடபாவங்கள் விலகும் என்ற நம்பிக்கை .அத்துடன் சந்ததியர்கள் சிறப்பாக வாழ்வார்களாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment