மலரே! பூக்கிறாய் ஒரு புன்னகை ,
அகமலர்ந்து மலருகிறாய் ,
வண்ணங்களை உதிர்க்கிறாய்,
மனம் விரிய மகிழ்விக்கிறாய்,
எட்டிப்பார்க்கும் வசந்தம்1
பூத்துக்குலுங்கும் ஆனந்தம்
நீ இல்லாமல் ஒரு கோயிலுமில்லை
உன் துணையில்லாமல் மண்ப்பெண்ணுமில்லை ,
பிறக்கும் போதும் வருகிறாய்
இறக்கும் போதும் அமருகிறாய்
நீ சொல்லாமல் சொல்வதை நான் உணர்ந்தேன்,
அதன் பொருளையும் நான் கண்டுக்கொண்டேன்
" போகும் வரை நீ மலர்ந்திரு
கள்ளமிலா மனம் திறந்திரு
தன்னலமற்ற சேவை
கடைசி வரை தேவை "
நீ கற்பிக்கும் பாடமிது
உன்னிடமுள்ள சிறப்புமிது,
Saturday, March 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment