Thursday, January 21, 2010

ஏழுசை வள்ளல்

அந்த மாணவன் தன் வீட்டிலிருந்து கபில நதி வழியாகச்சென்றுகொண்டிருந்தான் நடுவில் நின்று தன் காபிநோட்டை எடுத்துப்பார்த்தான்,அந்த நேரம் அவனது ஆசிரியர் அங்கு வந்தார் ," என்ன இங்கு நின்று என்ன செய்கிறாய் ? உனக்குத்தான் படிப்பு வரவில்லையே! கொண்டா அதை ,"என்றபடி அவனது நோட்டைகிழித்து நதியில் வீசி எறிந்தார்"போ உன் வீடு திரும்பிப்போ உனக்குத்தான் சங்கீதம் நன்னா வரதேஅதைப்பிடிச்சுக்கோ இன்மேல் பள்ளிக்கு வராதே "ஸ்கூலுக்குக்போனமகன் உம்மென்ற முகத்துடன் திரும்பி வந்தான் ,அவன் அம்மாவிஷயம் அறிந்தாள் ,அவரே பெரியஇசை மேதை தான் ,அவனை பக்கண்ணா என்ற ஒன்றுவிட்ட சகோதரரிடம் இசைப்பயிலஅனுப்பிவைத்தார் ,குறுகிய காலத்துக்குள்ளேயே அந்த மாண்வன் எங்கேயோ போய்விட்டான் ,,,எங்கேதன்னையும் மிஞ்சிவிடப்போறானே என்ற எண்ணத்தினால் குறுகிய மனப்பான்மையுடன்ஒரு ஜோசியரை வரவழைத்தார் ,அந்த ஜோசியர் அஹோபிலமட பண்டித் ,,,அவரும் வந்தார் சினிமாவில் வருவதுப்போல் கையைப்பார்த்துவிட்டு "இந்தப்பையனுக்கு இசையே வராது வந்தாலும் முன்னுக்கு வரமுடியாதபடிகிரகங்கள் இருக்கே" என்றார்இதுதான் இந்த மாண்வனின் வெற்றிக்கு முதல் படி ,எப்படியும்உச்சியை எட்டிவிடவேண்டும் என்று மனதிலே வீம்பு கொண்டார்தன் மாமாவின் உதவியால் பிடாரம் கிருஷ்ணப்பாவிடம் இசைப்பயிலகுருகுலமாகச்சேர்ந்தார் , அவரது 16 வயத்லிருந்து ஆரம்பித்து சுமார் 21வருடங்கள் வெற்றிபடிகளிலேயேஏறினார் பட்டங்கள் குவிந்தன ,,முதன் முறையாக ஏழு தந்திகள் கொண்டவயலினைக்கண்டுப்பிடித்து தன் லட்சியத்தை அடைந்தார்,இப்போது தெரிந்திருக்கும் இவர் யாரென்று ?.........வயலின் மேதை மைசூர் திரு சௌடையா தான் இவர் ,இவர் சாதகத்தைச்சொல்லிமுடியாது ஒரு நாளைக்கு 14 மணி நேரம் அசுர சாதகம்செய்வாராம் தவிர பிராணயாமம் யோகாதியானம் உடற்பயிற்சி குருசேவை என்று பலவற்றில் ஈடுபடுவார் ,இவர் தினமும் அதிக பயிற்சி செய்வது சரளிவரசை சண்டவரிசை அலங்காரம்,,,,,,,,அதனால் அஸ்திவாரம் மிகவும்பலமாக இருந்தது ஆரம்பத்தில் ஒரு கச்சேரியில் இவரது கைப்பிசற கொஞ்சம்
அபஸ்வரம் கேடக குரு அந்த இடத்திலேயேகன்னத்தில் அறைந்துவிட்டாராம் ,இவரது வயலினில் சுருதி பிசகாமல் இருக்க ஏழு தந்திகள் கொண்டவயலினைக்கண்டுப்பிடிக்கும் எண்ணம் கொண்டார்தன் குருவின் ஆசிகளுடன் சப்தஸ்வர தேவதைகள் ஆசிகளுடன் மைசூர் ரங்கப்பாஉதவியுடன் ஏழு தந்திகள் கொண்ட வயலின் இவர் கைகளில் ஏறி தோளைஅலங்கரித்தது ,இந்த வயலின் மேதையைபெற்ற தம்பதிகள் திரு அகஸ்தியகௌடா திருமதி சுந்தரம்மாஇவர் எல்லா பிரபல வித்வான்களுக்கும் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்மதுரை மணிஅய்யர் , மகராஜபுரம் அவர்கள்ஆலத்தூர் பிரதர்ஸ் செம்மங்குடி ,அரியக்குடி செம்பை ,,என்ற பலர் இதில் இடம் பெறுவர்தவிர இவர் சொந்த சாஹித்யமும் இயற்றிருக்கிறார் ,இவர் வாங்கிய அவார்டுகள் பட்டங்கள் பலசங்கீத மணி , வாத்ய ரத்னாகரா ,, ஏழிசை வள்ளல்தந்திரி விலாஸ் இன்னிசை நாதமணி நாத சுதார்ணாசங்கீத சூடாமணி கலைமாமணி நாதயோகீஸ்வராசுஸ்வர் சுகலய சங்கீதா நாதக்கனல் வயலின் கலாநிதி சங்கீத சுதா பிரவாஹா மதுரை கலாபிரவீண்சங்கீத கலாநிதி ,,,,,,

இவர் பெயரில் சௌடையா மெமோரியல் ஹால் என்று 1980ல் வயலின் உருவத்தில் ஒரு பெரிய கட்டடம் கட்டப்பட்டதுசுமார் ஆயிரம் பேர் அமரலாம் இன்றும் அங்குப்பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன்அங்கு ஒரு தெருவின் பெயர் சௌடையா தெரு எனச்சூட்டப்படிருக்கிறதுசங்கீத ரதன சௌடையா ம்யூசிக் அவார்டு கொடுக்கப்டுகிறதுஇவர்து பிரதமசிஷ்யர் வி சேதுரமய்யா அவர்கள் இவரது மற்றொரு சிஷ்யர் ராமரத்னம் சங்கீத கலாரத்னா மைசூர் இசைக்கல்லூரியில்முதல்வர்.

இவர் திருமகூடலூவில் 1895ல் பிறந்தார் 19 ஜனவரி 1967ல்மறைந்தார்இந்தக்கட்டுரை எழுத மூலகாரணம் ரேடியோவில் அவர்து இசைக் கேட்டது தான் தோடியில் ஏராநாபை வர்ணம் ,,,எனக்கு,,,,,அவரது ஞாபகங்கள்:வரிசையாக வந்தன ,,,,,,,அந்த இசைஞானிக்கு என் வந்தனம்

No comments: