Friday, January 22, 2010

என்னைக்கவர்ந்த ஜி என் பி

பம்பாய் ஷண்முகானந்தசபாவில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன் .அன்றுநடக்கப்போகும் கச்சேரி திரு ஜி.என் பிஎன்ற பாலசுப்பிரமண்யம் அவர்கள். அதோ வந்து மேடைமீது அமருகிறார் எப்போதுமே சரியான நேரத்திற்கு ஆஜராகிவிடுவார் வெள்ளை வெளேரென்ற ஜிப்பா , வேஷ்டியுடன் காதிலும் பளீரென்ற கடுக்கன் மின்ன முகத்தில் ஒரு தேஜஸ் நெற்றியில் அழகான பொட்டு ,ஆங்கிலத்தில்ஹேண்ட்ஸம் என்று சொல்வார்களே அது இவருக்கு மிகப்பொருந்தும் .தீர்க்கமானஎடுப்பான நாசி , நல்ல அகலமான நெற்றி . .சுருதியுடன் "ஸா,,,"என்றுசேர்த்துக்கொள்ள சபை களைக்கட்டுகிறது ஒரு சரிகைஅங்கவஸ்தரம் இருந்தாற்போல் ஞாபகம் ,சுருதியைப்பலதடவைச்சரிப்பார்க்கிறார் ,பின் ஆரம்பமாகிறது கச்சேரி"வலசி வாச்சி யு னா ,,,என்ற நவாவர்ணம் கேதாரத்தில் ஆரம்பித்து,"பின்பேகடா கலயாணி என்று பலராகங்கள் தொடர மிக அருமையான வர்ணம் ,,,, பின் யோசனாஎன்ற தர்பார் ராகக்கீர்த்தனை தொடர்ந்தது ,பின் காம்போஜி விஸ்தாரமாகப்பாடதொடர்ந்து வந்தது நளினகாந்தி ,,பல வருடங்கள் ஆனாலும் அந்தக்கச்சேரி என்மனதில் பதிந்து இருக்கிறது கடைசியில் பாடிய "சொன்னதைச்செய்திட"என்றபாடலும் சிந்தை அறிந்து வாடி ",பிருகுமுகுந்தேகி ரஸனே "சிந்துபைரவியில்ஹிந்துஸ்தானி பஜன் போல் ஒரு பாடலும் மிக அருமையாக இருந்தன"திக்குத்தெரியாதகாட்டில்"பாடலைத்தான் மற்க்கமுடியுமா? ,அவரது கம்பீரமான தோற்றம் அவரது அருமையான குரல் பிருகாக்கள் கொண்ட ராகங்கள்தன்க்கென்று தனி பாணியை வகுத்துக்கொண்ட விதம் எல்லாம்என் மனதில் இன்றும் அப்படியே பசுமையாக நிற்கிறதுஅவருக்குப்பிடித்த ராகங்கள் தோடி, கலயாணி , பஹுதாரிஆந்தோளிகா ,ஆனந்தபைரவி பெஹாக் போன்ற ராகங்கள்என நினைக்கிறேன் ,படிப்பிலும் இவர் BA{Hons} தவிர கலைகளில் இயல் இசை நாடகம் என்றுமூன்றிலும் ஈடுபட்டு சாதனைப்புரிந்தார்இவர் இயற்றிய புதிய ராகங்கள் பாடலகள் இன்றும் பாடப்படுகின்றன. உம்சிவசக்தி அம்ருதபெஹாக் சோமகாதம்பரி ,இவர் பாடல்கள் பல அம்பாளை ஆராதிப்பதாக இருந்தன ஸ்ரீராஜராஜேஸ்வரியே இஷ்ட தெய்வம் என கேள்விப்பட்டேன் ,.தவிரஇவர் தமிழ் ,சம்ஸ்கிருதம் தெலுங்கு போன்ற மொழிகளில் இயற்றிருக்கிறார் இவர் இயற்றிய பாடல்களைக்கச்சேரியில் பாடினதில்லையாம் எல்லாம் இவரதுசிஷ்யர்கள் தான் பாடிப்பரப்பினார்கள். இத்தனைச்சிறப்புப்பெற்றிருந்தாலும்துளிக்கூட கர்வமில்லாமல் எல்லோரிடமும் அன்புட்ன் பழகி பலருக்கு பலஉதவிகளைச்செய்வார் என்று அவரை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர் ,தவிரசினிமாவிலும்{பாமாவிஜயம் சகுந்தலை சதிஅனுசுயா ,உதயணன் வாசவதத்தை} நடித்திருக்கிறார்இவர் வடநாட்டிலும் பல ஹிந்துஸ்தானி பாடகர்களுடன் நட்புகொண்டு அவர்களின் ஹிந்துஸ்தானி ஸ்டைலையும் சில ராகத்தில் சேர்த்துபாடுவார் ,ப்டேகுலாம் அலி அவர்கள் இவருடைய பரம நண்பர் இவரது ரசிகர் இவரதுஹிந்தோளம்ஸாமஜவரகமனா" என்பதைக்கேட்டு தனது மால்கோசுடன்ஜுகல் பந்திப்போல் பாடுவாராம் இருவ்ரும் மூன்றுகாலங்களிலும்ஸ்வரங்கள் ராகாஅலாபனைப்போன்றவைகள் பாட கேட்டவர்கள்ஆனந்தத்தை அனுபவித்தனராம்இதேபோல் திரு பாலகந்தர்வா திரு பியாரிலால சாஹேப் போன்றவர்களும் இவரின்நண்பர்கள் ஆனார்கள் ,,ஒருதடவை இவர் டிஆர் மாலியின் புல்லாங்குழலைக்கேட்டப்பின்"என் பாட்டு இதன் முன் ஒன்றுமே இல்லை ,நல்லவேளையாக படிப்பு என் வசம்இருப்பதால் எதாவது வேலைத்தேடிக்கொள்வேன் என்று விளையாட்டாகச்சொல்லசெம்மங்குடி திரு ஸ்ரீனீன்வாசய்யர் அவர்களும்" ஆமாம் என்ன வாசிப்பு !நானும் என் நிலத்தைப்பார்த்துக்கொள்ளப்போய்விடுவேன் "என்றாராம்திரு ஜி என் பி எல்லோரையும் வாய்விட்டுப்புகழுவார் அவருக்குகொஞ்சம் கூட பொறாமையோ பேரசையோ இருந்ததில்லை ,இவர் முதல் கச்சேரி மைலாப்பூர் கோயிலில் நட்நதது ஒரு பெரிய பாட்கர்கச்சேரி பாட வரமுடியாத நிலையில் இருந்ததால் இவரைப்பாடச்சொன்னார்களாம்அன்றையக்கச்சேரியிலிருந்துஅவர் மேலே உயர்ந்துக்கொண்டே போனார் ,இவரது பாடும் விதம்,,,,,,,, தன்க்கென்று ஒரு பாணி அமைத்துக்கொண்டுபிருக்காக்களுடன் டெம்போ குன்றாமல்அப்படியே கடைசிவரை நீடிக்கும் ,,,,,குரலும் கணீரென்று இருக்கும்கீழ்ப்பஞ்சமும் மேல்பஞ்மும் மிகவும் எளிதாகத்தோட்டு நிற்கும்ஒரு தட்டிலிலேயே 16 ஸ்வரங்கள் மேலேயே பிருகாவுடன் போகமுடியும்,இவரது கல்பனா ஸ்வரம் மிகவும் அருமைசண்டவரிசையின் பிரயோகங்கள் வரும் ,சிலகீர்த்தனைகளுக்குசிட்டஸ்வரங்கள் இய்ற்றியிருக்கிறார் ,இவரது வாசுதேவயனி பாடலும் அந்த கலயாணி ராகமும்மறக்கமுடியாது அதேபோல் ரஞ்சனி நிரஞ்சனி என்ற ரஞ்சனி ராகக் கீர்த்தனையும்வசந்தபைரவி யில் நீதயராதாவும் இன்றும் என் மனதில் பதிந்திருக்கிறது,இவரது செல்வங்கள் இந்த இசைக்கலையில் முன்னுக்கு வரவில்லை .எனநினைக்கிறேன் ஆனால் இவரது சிஷ்யர்கள்புகழ்பெற்ற எம் எல்வி என்ற வசந்தகுமாரிதிரு திருச்சூர் ராமசந்திரன் திருமதி ராதா திருமதி ஜெயலட்சுமிதஞ்சாவூர் திரு கல்யாணராமன் திருமதி பூஷணி கல்யாண்ராமன்திரு டிஎஸ்பாலசுப்பிரமண்யன் மிகவும் உன்னதநிலையைஅடைந்திருப்பது மிகப்பெருமையாக இருக்கிறது ,இவர்பெற்ற உயர்ந்த பதவிகள் ஆஸ்தான வித்துவான் திருவனந்தபுரம்ஆஸ்தான வித்துவான் எட்டயப்புரம்சங்கீதகலாநிதி , பிரசிடண்ட் அவார்டு {டாக்டர் எஸ் ராதாகிருஷணன்அவர்களால் வழங்கப்பட்டது }ஆல் இந்தியா ரேடியோவில் deputy chief producer , principalof swathithirunal collegeஇவரைப்பெற்ற புண்ணிய தம்பதிகள் திரு ஜிவி நாராயணஸ்வாமிதிருமதி விசாலாக்ஷிஇவரது குரு திரு குருஸ்வாமி பாகவதர் மதுரை சுப்பிரமண்யர்எத்தனைக்காலம் ஆனாலும் இவரது இசை எல்லோர் மனதிலும்ஒரு பரவ்சத்தை அளிக்கும் என்பது உண்மை இந்த இசை மகானைத்தலை வணங்குகிறேன்

No comments: