உன்னைக்காண ஓடி வந்தேன்
,நீ கண்டுக்கொள்ளாதது ஏன் ?
உன் முகத்தில் ஒரு புன்னகை,
எப்போதுமே அது இயற்கை,
உன் அழகில் மயங்கி நின்றேன்
நீயோ க்வனிக்காமல் இருப்பதேன்?
ஒரு கை திரையை மூடுகிறது
அது என்னை வாட்டுகிறது ,
அசையாமல் நிற்கிறேன்
,உன் திசையைப்பார்த்து நிற்கிறேன்,
என்னை ஏன் இப்படிப் படுத்துகிறாய்,?
மனக்கஷ்டம் கொடுக்கிறாய்?
என்றும் நீ என் மனதில் தானே!
நான் வருவதும் உன்னைக்காணத்தானே !
பல நிமிடங்கள் போனது
திரையும் விலகியது ,
ஆஹா என்ன அழகு அவள்!
என் மீனாட்சித்தாய் அவள்.
அலங்காரத்தில் மின்னுகிறாள்.
அருள் பார்வை வீசுகிறாள்
மந்திரங்களின் முழக்கம்
நம் கலாச்சாரப்பழக்கம்
கற்பூர ஒளியில் அவள் முகம்
காணக்கிடைக்காதத்திருமுகம்
என்கண்களால் அவளைக்காண்கிறேன்.
அணுஅணுவாய் அவளை ரசிக்கிறேன் ,
என் கண்கள் திறந்து என்ன பயன் ?
என் அகக்கண்கள் அல்லவா திறக்கவேண்டும் !
Friday, January 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment