Thursday, November 19, 2009
பெருமாள் செய்யும் சிரார்த்தம்
விட்டல் விட்டல் பாண்டுரங்க விட்டல்
சந்த் துக்காராம் பாட்டுரங்க விட்டல் மீது உயிரையே வைத்திருந்தார்,அவருடையபக்தியைக்குறிப்பிடும் ஒரு சம்பவம் ஒரு மராட்டியர் என்னிடம் தெரிவித்தார் ,சந்த் துக்கராமின் பெண்ணிற்கு ஒருமகன் இருந்தார். அவர் பெயர் ஸ்ரீ வாசுதேவபாவா.துக்காராமுக்குப்பின் இந்தப்பேரன் அவரைபற்றி சொற்பொழிவாற்றுவார் . பக்தவிஜயம் என்றபுத்த்கத்தைப்படிப்பார் கூட பாடல்களும் பாடுவார் . அப்போது அங்கு ஒருமுஸ்லிம் பாதுஷா அரசு செய்து வந்தார் அவர் இந்தச்சொற்பொழிவுக்கு நாள் தவறாமல் வந்து மன மகிழ்ந்துப்போவார். இந்த வாசுதேவ பாவாவும் பல சிறப்பான"அபங்க்" என்று சொல்லப்படும் மராட்டிப்பக்திப்பாடல்களைப் பாடி எல்லோரையும் அசர வைப்பார் கதை முடிக்கும் நாள் வந்தது ,வாசுதேவ பாவாவும்" "இப்படியாக என் தாத்தாவான ஸ்ரீதுக்காராம் தன் பூத உடலுடன் விண்ணகம் சென்றார் " என்று முடித்தார் ,பாதுஷா இதை நம்பவில்லை ."ஹாஹா ஹா யாராவது உடலுடன் வானீல் போக முடியுமா?இதை யாராவது பார்த்தீர்களா? இந்தசபையில் பார்த்தவர்இருக்கிறார்களா? "
இரு வயதானவர்கள் எழுந்தனர் ."அரசே நாங்கள் அப்போது சிறுவர்களாக இருந்தோம். நாங்கள்அந்தக்காட்சியைக்கண்டோம் ""என்ன இது கதை? நான் இதை நம்பவில்லை "என்றார் அரசர்பேரன் எழுந்தார் .. பின் பேசினார்
"அரசே இதைப்பற்றி என் தாய்க்கு நன்கு தெரியும் இருங்கள் நான் உள்ளே போய்கேட்டுவருகிறேன் "உள்ளே போனவர் வழியில் ஒருவரைக்கண்டார் ,அவர் தான் தினமும் பிரவசனம் கேட்க வருவதாகவும் தானேதுக்காராம் என்றும் கூறி தன் சுய உருவத்தைக்காட்டினார் .உடனே தன் தாயை அழைத்துவந்து"அம்மா இங்கே நின்றுகொண்டிருக்கும் இவர்தான் உங்கள் தந்தையா?''அப்ப்டியே மகள் தந்தையின் காலில் விழுந்து வணங்கி"ஆம் வாசுதேவா இவர்தான் உன் பாட்டனார் ஸ்ரீதுக்காராம் அவர்கள்"என்றாள் பின் அந்தபேரன் "நான் இதை அரசரிடம் எப்படிச்சொல்லி நம்பவைப்பேன் .ஒரு வழிசொல்லுங்கள் " என்று கேட்க துகாராம் "அப்பா வாசுதேவா நான் என் தம்பூராவைத்தருகிறேன்,இதைச்சபையில் காட்டி " என் தாத்தா இந்த பூத உடலோடு விண்ண்கம் சென்றது உண்மையானால் இந்தத்தம்பூராவும் அந்தரத்தில் பறந்து செல்லட்டும் என்றுச் சொல்லி வீசி எறிந்துப்பார் " என்று கூறி மறைந்துவிட்டார் ,அதேபோல் அரச சபைக்கு வந்தார்
"அரசே உங்கள் கேள்விக்கு இந்தத்தம்பூரா பதில் சொல்லும் ,தம்பூராவே! இறைவா, விட்டலா என் தாத்தா உடலுடன் விண்ணுலகம் சென்றது உண்மையானால் இந்தத்தம்பூராவும் பறந்து செல்லட்டும் "என்று கூறியபடி ஆகாயத்தை நோக்கி வீசினார் தம்பூராவில் ஓங்கார நாதம் எழு கூடவே துகாராம் அவர்களின்குரலும் விட்டல விட்டல என்று ஒலித்தது . அந்தக்குரலைஅரசரும் கேட்டார் , அப்படியே கீழே விழுந்து வணங்கினார்
விட்டல விட்டல பாண்டுரங்க விட்டல் பணடரிநாத விட்டலா,,,,,,
சிறுவர் தினம்
அன்பர்கள் எல்லா வீட்டுச்சுட்டிகளுக்கும் என் இனியகுழந்தைத்தின வாழ்த்துகள் ".குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்"இல்லையா ? அன்பு என்ற ஒரு இனிப்புக்குஅவர்கள் கட்டுபடுவார்கள் .சில பெற்றோர்கள் மிகவும் கறாராக இருந்து அந்தக்குழந்தையை வளர்ப்பார்கள் ,அந்தக்குழந்தையும் எல்லா வேலையும் சரியாகத்தான் செய்யும் ஆனால் அந்த வேலை பயத்தினால் செய்யப்படுகிறது ,இந்த நிலை உருவாக்காமல் அன்பாலேயே ஒழுங்கு முறைகளைக்கற்றுக்கொடுக்க பெற்றோர்கள் முயல வேண்டும் உங்கள் சுட்டிகளுக்கு ஒருபடைப்பு என் ஆசிகளுடன்....
ரகு நாலு வயது சிறுவன் தன் தாயுடன் பேசிக்கொண்டிருக்கிறான் தாய் சமையல் செய்வதில் பிசியாக இருக்கிறாள்"அம்மா இன்னிக்கு எனக்கு லீவும்மா மஜாதான் ,,""எதுக்கு லீவுன்னு தெரிமா ரகு ?""ஓ தெரியுமே ,இன்னிக்கு குழந்தைகள் தினம்""குழந்தைகள் பிறந்த தினம் அம்மா"" எந்தக்குழந்தைப்பிறந்தது ? தெரியுமா உனக்கு ?"" அத ஒத்தரும் எங்கிட்ட சொல்லவேயில்லையே!""அதுவா நான் சொல்றேன் தெரிஞ்சுக்கோ . இந்தத்தினம் முன்னாள்பிரதமர் சாச்சா நேருவோட பர்த்டே ,, அதான் பிறந்த தினம் "" அம்மா எனக்கு ஒரு சந்தேகம் ! ஸ்ரீராமர் பிறந்த தினத்தைஸ்ரீர்ரமநவமின்னு சொல்றா ,கண்ணன் பிறந்த தினத்தை கோகுலாஷ்டமின்னு சொல்றாஆனா இந்த சாச்சாநேருஜி பிறந்த தினத்தை நேரு தினம்னுனா சொல்லணும் எதுக்குகுழந்தைகள் தினம் னு சொல்றா?ஆமாம் சாச்சான்னா என்ன்?"சாச்சான்னா சித்தப்பான்னு அர்த்தம்""அப்ப சித்தப்பா தினம்னு சொல்லாமே ஏன் குழந்தைகள் தினம் ?
'"அடராமா இது பார் உன்னோடு பேசிண்டே சாம்பாருக்கு போடும் உப்பைப் பாலில்போட்டுட்டேன் 'போ போ உன் அப்பா சும்மா தான்பேபருக்குள் மூழகி இருக்கிறார் .அங்குப்போய் எல்லாம் கேளு
""போம்மா சந்தேகம் கேட்டா சொல்லாம என்னைத்திட்டறயே!சரி நன் அப்பாட்ட எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கிறேன் "
"வாடா ரகு செல்லமே வா நான் எல்லாம் உனக்குச்சொல்றேன் இந்த நேருமுன்னாள் பிரதமர் , பெரிய பங்களாவில் பிறந்து வளர்ந்தாலும் எளிமையை விரும்பினார் .சுதந்திர போராட்டத்திலும்பங்கு பெற்றார் , அவருக்குக்குழந்தைகள்னா உயிர் , அவர் பிறந்தநாளின் போது பல குழந்தைகள் மத்தியில் இவர் நட்னமாடுவார் பலூன் ஊதுவர் குழந்தைகளுடன் அளவளாவுவார் , குழந்தைகளும் சாச்சா என்று அவரிடம் ஒட்டிக்கொள்ளும் ஹிந்தியில் சாச்சா என்றால்சித்தப்பா ,,,,,,,குழந்தைகள் மேலிருக்கும் அன்பினால் தான்அவரது பிறந்தநாளை குழந்தகைகள் தினமாகச்செய்துவிட்டார்,அவருக்கு சிவப்பு ரோஜா ரொம்பப்பிடிக்கும் அதை தன் நீள அங்கியில் சொருகிவைத்திருப்பார் ,பார்த்தால் ராஜகுமாரன் போல் நல்ல களையுடன் இருப்பார் இன்று உனக்கு அவரது சரித்திரத்தின்சிடி போட்டுக்காட்டறேன் சரியா?"சரி அப்பா நானும் இன்று அவர் மாதிரியே டிரெஸ் செய்துக்கொண்டு ரோஜாப்பூசொருகி கொள்ளுவேன் சரியா ?" சரிடா செல்லம் "அப்பா அவனது உடையில் மூவர்ணக்கொடியை குண்டூசியால் குத்திகையில் பலூன்களும் கொடுக்கிறார் ,அந்தப்பிஞ்சுமுகம் மலர்ந்தது
கங்கையும் கவேரியில் குளித்தாள்
கங்காதேவியின் முகம் வாடி இருந்தது ,மனதுக்குள் ஒரு வருத்தம் தன்னை மறந்து தியானம் செய்தபடி பிரும்மாவை நினைத்தாள் பிரும்மாவும் அங்கு தோன்றினார்"கங்கா தேவி, உன் முகத்தில் ஏன் இந்த வாட்டம் ? பரமேஸ்வரனின் சிரசில் இருக்கும் பாக்கியம் அல்லவா உனக்குக்கிடைத்திருக்கிறது .உன் சரணமடைந்து ஸ்னானம் செய்ய எல்லா பாபங்களும் விலகுகின்றனவே,அத்தனைப்புனிதமாளவள் ஆயிற்றே ! ஏன் இந்த வருத்தமான முகம்
""ஸ்வாமி என் கவலையும் அது தான் என்னை அடைந்து பாபங்களைப்போக்க பல மக்கள் ஸ்னானம் செய்து போகின்றனர் ,அந்தப்பாப மூட்டைகளை நான் சுமக்கிறேன் என் இந்தப்பாப மூட்டைகளை எங்கேகொண்டு அழிப்பது ? நானும் இந்தப்பாபச்சுமைகளைக் களைய எதேனும் வழிசொல்லுங்கள்"
"பிரும்மா தன் கண்களை மூடியபடியே யோசித்து பின்"கங்கா தேவியே உன் பாபங்களைக்க்ழிக்க ஒரு வழி இருக்கிறது ஒவ்வொரு வருடமும் துலாமாதம் கடைசி நாளன்று மயிலாடுதுறை சென்று அங்குஇருக்கும் காவேரியில் முழுகி ஸ்னானம் செய்ய உன் பாபங்கள் கறைந்து விடும் உன்னைப்போல் இருக்கும் மற்ற புண்ணிய நதிகளான யமனை நர்மதா சிந்து போன்ற நதிகளும் இந்தத்தினத்தில் அங்கு வந்து முழுக்கு போடும் ,மக்களும் இன்று இங்குக்குளிக்க பாபங்கள் நீங்கப்பெறுவார்கள் இப்போது மகிழ்ச்சிதானே !
"" நன்றி சிருஷ்டிகர்த்தாவே இதோ இப்போதே அங்குப்போகிறேன் என் பாபங்களைப்போக்கிக் கொள்கிறேன் "
கங்கையும் மற்ற புண்ணிய நதிகளுடன் வந்து காவேரியில் கலந்தாள் ,"ஆஹா நான் என்ன தவம் செய்தேன் இன்று எல்லா புண்ணிய நதிகளும் என்னிடன்வந்துசேர்ந்தனவே .இன்று என்னிடம் வந்துஸ்னானம் செய்ய எல்லாப்புண்ணிய நதிகளில் ஸ்னானம் செய்த பலன் கிடைக்கும்பாப விமோசனம் கிடைக்கும் "என்று எண்ணி மனமகிழ்ந்து காவேரி பொங்கிக்குதித்தபடி சலசல வென்று ஓடத்தொடங்கினாள் ,ஐப்பசிமாதம் கடைசி நாள் காவேரியில் போடும் முழுக்கு ஆதலால் "கடைமுழுக்கு" என் பெயர் வந்தது இதக்கடைமுழுக்குடன் இன்னொரு முழுக்குவும் சமபந்தப்பட்டிருக்கிறது அதுதான் "முடவன் முழுக்கு "பெயரிலேயே தெரிகிறது ஒரு முடவன் காவேரியில் வந்துமுழுக்கு போட்டிருப்பான என்று ,,,,,,ஆம் ஒரு முடவன் எல்லா வருடங்களும் ஐபபசி மாதம் கடைசி நாள் மாயவரம் வந்து காவேரியில் குளித்து அருள்மிகு மயூர்நாதரைப்பூஜிப்பான் .,வயதாக அவனது தெம்பும் திடமும் குறைந்து வர அவனால் வேகமாக நடக்க முடியாத நிலை வந்தது தவிர முடவனாக இருந்ததால் வேகமாக நடக்கவும் முடியவில்லை ஒரு சமயம் அவன் ஐப்பசி மாதம் கடை முழுக்குவிற்குக் கிளம்பினான் ,ஆனால் வழியில் நடைத்தளர்ந்து அவனால் அந்தச்சமயத்திற்கு அங்குப்போகமுடியவில்லை,உடல் சோர்ந்து உள்ளமும் சோர்ந்து மனம் வருந்தி அழ ஆரம்பித்தான் பின் மயூர நாதரிடம் " என் தெய்வமே நான் இன்று அங்கு வர நினைத்தும் வேகமாக நடக்கமுடியாமல் போய் என்னால் கடைமுழுக்கு செய்யமுடியவில்லையே ,பாபச்சுமை சேர்ந்துவிடுமே ! எனக்கு நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்"அவன் இதைச்சொல்லி முடித்தவுடன் ஒரு அசரீரி கேட்டது"பகதா கண்கலங்காதே நாளை கர்த்திகை முதல் தேதி அன்றும் நீ வந்து காவிரியில் நீராடு உனக்கு ,முழுமாதம் ஸ்னானம் செய்தபலன் அளிக்கிறேன் , உனக்கு பாபவிமோசனம் கிட்டும் "
,அந்த மயூர நாதரே பேசியதைக்கண்ட முடவன் மகிழ்ச்சியுடன் மாயவரம் போய் முழுக்குப்போட்டான் இதுவே முடவன் முழுக்கு என்று .ஆயிற்று .கார்த்திகை முதல் தேதியில் இங்குவரும் பக்தர்களின் எண்ணிக்கை சொல்ல இயலாது முன்பெல்லாம் காவேரி ஆற்றில் நீர் நிரம்பி இருக்கும் இப்போது மழை வாராமல் போனால் நிலைமையே வேறு , ,இந்த முழுக்கு போட்டப்பின் மயூரநாதரின் தரிசனம்செய்ய மனதிற்குள் அப்படி ஒரு அமைதி ,,நிம்மதி கிடைக்கும் . எல்லா புண்ணிய நதிகள் சேர்ந்து இருந்து அதில் குளிக்கவும் கொடுத்து வைக்கவேண்டும் ,,,,,,
மொழி ஒன்றுதான் பேசுவதோ பலவிதம்
தஞ்சாவூர் குமகோணம் வந்தால் அங்கும் பேச்சில் வித்தியாசம் .மனைவி கணவரை அழைக்கிறாள் ."ஏன்னா இங்க சித்த வாங்கோன்னா""ஏண்டி கூப்படறே எனக்கு ஏகப்பட்ட வேலை கிடக்கு 'இல்லன்னா எப்போ சாப்பிட வரேள் ?கணவர் ஒரு சாஸ்திரிகளுடன் பேசுகிறார்
" என்ன ஓய் கணபதி சாஸ்திர்கள்வாள் நீர் எந்தப்பக்கம் இங்கே ?'பொண்டாட்டி புள்ளைகள் சௌக்கியந்தானே ?உங்க தம்பி கிச்சாவை வரசொல்லப்டாதோ ,,,பாத்து ரொம்ப நாளாச்சே"
அவர்கள் பேசுவதில் சொற்களுடன் "காணும்" என்ற சொல்லும் சேர்ந்து வருகிறது" நீர் சும்மா இருங்காணும் ""என்னங்காணும் நான் இப்போ என்னத்தச்சொல்லிட்டேன் மூஞ்சியைத்தூக்கிண்டிருக்கேள்
"ஐயங்கார் தமிழில் கூப்பிடும் போது பெரியவர்களை "ஸ்வாமி " என்றேஅழைப்பதைப்பார்த்திருக்கிறேன் அவர்கள் பெருமாளுக்குப்படைப்பதை "திரு "என்ற அடைமொழியுடன்அழைக்கிறார்கள் கேட்கவே நன்றாக இருக்கிறது,ஒரு கோயிலில் கேட்டது ,,,,,,"ஏழ் ஏழ,,,,,,, சேவிச்சுக்கிறேன் ஸ்வாமி "ஸ்வாமி ஏன் தாமதம்""எம்பெருமான் கிருபை அடியேன் நன்றாக இருக்கேன்
"இங்கேயே சாட்டுட்டு போலாமே "திருக்கண்ணமுது , சாத்துமது தத்யோன்னம் புளியோதரை எல்லாம் பெருமாளுக்கு தயார்செஞ்சிருக்கோம்"அப்பொ அடியேன் உத்தரவு வாங்கிக்கிறேன் ஸ்வாமிகளே உத்தரவு தாரும் தண்டனிட்டு சேவிக்கறேன் "இது போன்ற பல கேட்க முடிந்தது,,,, பெருமாள் கோயிலில் பல சொற்கள் எனக்குப்புதிதாக இருந்தன ,அவர்கள் நெற்றியில் நாமம் என்று சொல்வதில்லை அழகாக்திருமண் காப்பு என்கின்றனர் குளிப்பதை" தீர்த்தமாடி வருவது என்கின்றனர் ஸ்வாமியின் பாதத்தைத் திருவடி என்கின்றனர் பல சம்ஸ்கிருத மொழிச்சொற்களும் உபயோகிக்கின்றனர் தமிழ் நாட்டில் மற்ற பல இடங்கள் நான் போயிருந்தாலும் தங்கி ஒரு மாதம்போல் இருக்க வாய்ப்பு கிடைக்கவில்லை ,கன்யாகுமரி வரைச்சென்று விட்டேன் இந்த தமிழ்மொழி மாறுவதைவைத்து ரிசர்ச் கூட செய்யலாம் அத்தனை விதங்கள்கிடைக்கின்றன , இதை வைத்து ரிசர்ச் செய்யலாமோ என்று நானேயோசிக்கிறேன் , எல்லாம் அதனதன் இடத்தில் இனிமையாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது , எல்லாம் தெரிந்திருக்க மனம் விழைகிறதுஆனால் சரீரம் ஒத்துழைப்பதில்லையே
,அன்புடன் விசாலம்