Tuesday, August 12, 2008

நிர்ப்பந்தம்

நிர்ப்பந்தம்

பகல் இரவானது
இரவு பகலானது
இரவும் கசந்தது
பகலும் சுமையானது
இயந்திரமானது உடல்
வெறுத்துவிட்டது கூடல்
எல்லாம் உயிருடனிருக்க
செத்து விட்டது உணர்ச்சிகள்
சுயநலமிக்க மனிதர்கள்
சுய இன்பத்திற்கு வந்தவர்கள்
விட்டில் பூச்சிப்போல் விழுந்தப்பின்
விளக்கு எரிய வழியுண்டோ ?

அன்புடன் விசாலம்

No comments: