Tuesday, August 12, 2008

யார் நரி யார் புலி

மிருகங்களைக் காண
காடு சென்றேன்.
என் செல்ல மகளின்
அன்புக் கட்டளையால்
"அதோ பார் நரி"என்றேன்
கைத்தட்டிச் சிரித்தாள.
வெகு தூரத்தில் புலி என்றேன்
பயமில்லாமல் பார்த்தாள்.
"ஆஹா இதோ வந்து விட்டது கரடி"என்றேன்
கன்னம் குழியச் சிரித்தாள்,
பின் ஒரு கேள்விக் கேட்டாள்,
"அப்பா மனிதர்களில்
யார் புலி ? யார் நரி ?
எப்படிக் கண்டுப்பிடிப்பது?

No comments: