Wednesday, August 20, 2008

என் தோழியின் ஷஷ்டிப்தபூர்த்திக்கு என்னை அழைத்திருந்தாள் அந்த வைபவம் நடக்கும் இடம் திருக்கடையூர் என்றும் குறிப்பிட்டிருந்ததால் கண்டிப்பாக போய் அந்தக் கோயிலின் சிறப்பை நேரில் காண வேண்டும் என்று
தீர்மானித்தேன் ,பலர் தன் அறுபது வயதில் சாந்தி அல்லது பரிகாரம் செய்துக்
கொள்வது வழக்கம் ,அதுதான் சஷ்டிஅப்தபூர்த்தி ,,,70 வயதில் செய்துக் கொள்வது பீமரத சாந்தி என்றும் 80 வயதில் சதாபிஷேகம் என்றும் பின் 100 வயதில் கனகாபிஷேகம் என்றும் சொல்கின்றனர் ,இந்த மகிழ்ச்சிகரமான நாளை அவர்கள்
பிள்ளைகள் பேரன்கள் நடத்தி மகிழ்கின்றனர். பேரன் கொள்ளுபேரன் பேத்தி
என்று மூன்று தலைமுறையும் ஒருமிக்க சேர்ந்து கொண்டாடும் இந்தத் திருநாள்
நடப்பது ஒரு கண்கொளாக் காட்சிதான் ,

இதைத் திருக்கடையூரில் செய்துக் கொள்வது ஒரு தனி சிறப்புத்தான் ஏன் என்றால் அங்குதான் ஸ்ரீ மார்க்கண்டேயர்"என்றும் பதினாறு " என்ற சிரஞ்சீவி வரம் சிவனிடமிருந்துப் பெற்றார் .நான் அங்குப் போனது ஒரு சிறந்த
அனுபவம் தான் ,,அங்கு பலதரப்பட்ட தம்பதிகளைக் கண்டேன் .சுமார் பத்து
திருமணங்கள் ஒரே சமயத்தில் அங்கு நடக்கின்றன ,ஒவ்வொரு குழுவும்
தனித்தனி இடங்களைப் பெறுகின்றனர் கோயில் மிகப் பெரியதாக இருப்பதால்
இது போல் செய்ய முடிகிறது இதில் ரேட்டுக்குத் த்குந்தாற்போல் இடமும்
நேரமும் மந்திரங்களும் சொல்லப்படுகின்றன ,சிலவு ஐம்பதிலிருந்து ஆரம்பித்து சுமார் 50000 க்கு மேல் கூடப் போகிறது ,சமீபத்தில் முன்னாள்
முக்கிய மந்திரி சௌ ஜயலலிதா அவர்களும் அங்குப் போய் சாந்தி
செய்துக் கொண்டார் யானையும் பரிசாகக் கொடுத்தார்கள் ,,,
இப்போது நான் அன்று பார்த்த வயதான கலயாண தமபதிகளைப் பற்றியும்
சொல்லப் போகிறேன் ,ஒரு தமபதியுடன் ஒரு கூட்டமே நுழைந்தது ,எழுபது
வயது மாப்பிள்ளை மாலையும் கழுத்துமாக உள்ளே நடக்க அவர் வேகத்திற்கு
ஈடு கொடுக்க முடியாமல் அவர் மனனவி முணுமுணுத்தபடி பல அடிகள் பின்னே நடக்க அவர்களது பிள்ளைகள் அவர்களது மனைவிகளுடன் ஜோடிப் போட்டுக்கொண்டு தன் அப்பாவுக்கு நாம் இந்தக்கலயாணத்தை நடத்துகிறோம் என்ற பெருமிதத்துடன் நடக்க இப்படி ஒரு காட்சி ,,,,,,

இன்னொரு மாப்பிள்ளை தலையில் அழகாக சரிகைத் தலைப்பாகையுடன்
நெற்றியில் நாமத்துடன் காட்சித் தந்தார் அவரது மாலையோ அத்தனைப் பாரம்.அவரது மனைவியின் கழுத்து சும்மா தங்கத்தாலேயே இழைக்கப்படிருந்தன அத்தனை நகைகள் .அவரது கழுத்தே தெரியவில்லை .
நல்ல பசையான குடும்பம் எனத் தெரிந்தது .அவரது குடும்பத்தில் பலர்
வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தனர் அவர்கள் தமிழர்கள்: ஆனாலும் அவர்களது உடை கோயிலுக்கு மிகவும் பொருத்தமில்லாததாக இருந்தது .
வயதான மாப்பிள்ளை பெண்ணின் மனம் நிறைந்திருந்தது அவரது பேத்திகள்
கொள்ளுப்பேத்திகள் அவர்களைச்ச் சுற்றி கொஞ்சம் ஆங்கிலம் கொஞ்சம் தடுமாறி தமிழ் பேசினர் அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை அவர்களது பெற்றோர்கள் பெருமையாகப் பார்த்து ரசித்தது எனக்கு ஒரு மதிரி இருந்தது ,

மூன்றாவது காட்சியில் நுழைந்த தம்பதிகள் சேர்ந்து மாலையும் கழுத்துமாகப்
போனார்கள் ஆனால் அவர்களைச் சுற்றி ஒருவரும் இல்லை கொஞ்சம்
தூரத்தில் அவர்களது மகன் மகள் குழந்தைகளுடன் வந்துக் கொண்டிருந்தனர்
ஒரு பிடிப்பில்லாதக் குடும்பம் போல் தென்பட்டது அந்த மாமி தன் மருமகளைப்
பற்றி பொரிந்து தள்ளினார் '
"சாதிவிட்டு சாதியில் கல்யாணம் செஞ்சிண்டு இதெல்லாம் யார் செய்யணும்,,னு
அழுதா,,வந்துட்டான் பெரிசா பஞ்சாபிக்காரியைக் கூட்டிண்டு "
"சும்மா இரேண்டி இங்கேயும் ஆரம்பிச்சுட்ட்யே ,,ஆசையா நம்ம அம்மா
அப்பாவுக்கு சஷ்டிப்தபூர்த்தி செஞ்சு பாக்கணும்னு எல்லாம் அரேஞ்சு செய்திருக்கான் அவனைப் போயி ,,,,,,"

அந்தப்பஞ்சாபி மருமகளுக்கு ஒன்றும் புரியவில்லை எதோ தன்னைத்
திட்டுகிறார் என்று மட்டும் புரிந்தது மொழி பிரச்சனை ,,,,அன்பு மொழி இருந்தால்
எதையும் சாதித்து விடலாமே ,,,,,

No comments: