Wednesday, August 20, 2008

கசப்பு சாக்லேட்

சாக்கலேட் கசந்தது ,,இது என்ன ? "பாலும் கசந்ததடி சகியே படுக்கையும் நொந்தத்டி"
என்ற பாட்டைப் போல் ஏதாவது காதல் கதையா ?இல்லை இல்லை ,எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் தான்
முதல் தடவையாக நான் பாரிஸ் சுவிட்சர்லாந்த் போயிருந்தேன் சில மாதங்கள் அங்குத்
தங்கியப் பின் திரும்பி இந்தியா வரும் நேரம் நெருங்கியது நான் என் பள்ளி ஆசிரியர்களுக்கு
சாக்கலேட் டப்பாக்கள் வாங்கிக் கொடுக்க முடிவு செய்தேன் பின் என் மகன் என்னை ஒரு பெரிய கடையில் இறக்கி விட்டு "நீ செலக்க்ட் செய்து வை நான் சில வெளி காரியங்களை
முடித்துவிட்டு வருகிறேன் " என்று சொல்லி விட்டுப் போனான் நான் பார்க்க அழகாக பெரிய
விதவிதமான சாக்கலேட் பாக்கட்டுக்கள் எடுத்துக் கொண்டேன் மேலே எல்லாம் பிரஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்தது ,மிகச் சந்தோஷமாக வாங்கி விட்டேன் ,பின் தில்லி வந்தாயிற்று ,ஆசையுடன் வாங்கிய சில டப்பாக்களை சிலருக்குக் கொடுத்தேன் ,அவர்களும்
நன்றி தெரிவித்து எடுத்துக் கொண்டார்கள்
நான் வீட்டிற்கு வந்து ஆசை ஆசையாக ஒரு பெரிய சாக்கலெட் எடுத்து அதன் அழகான மேல்
மூடி இருந்தப் பேபரை பொறுமையாக எடுத்தேன் வாயில் போட்டுக் கொண்டேன் முதல் சில நிமிடங்களில் தித்திப்பாக வெனிலா வாசனையுடன் ஆரம்பித்து பின் இலேசாக கசக்க ஆரம்பித்தது பின் ஒருவிதமான ஸ்பிரிட் நாற்றம் ,,அப்படியே வயிறு குமட்டிக்கொண்டு வர
லஞ்சில் சாப்பிட்டதும் சேர்ந்துக் கொண்டு வெளியே வந்தது ,ஐயோ இது என்ன்? food poison
ஆகி விட்டதோ ,foreign பொருட்கள் அப்படி ஆகி இருக்க முடியாதே என்று பரபரப்புடன் என் மகனுக்கு போன் செய்தேன் "ராஜா எனக்கு என்னவோ செய்கிறது சாக்கலேட் ஆசையுடன்
சாப்பிட்டேன் ,இது எதனால் ?
"அம்மா கவலைபடாதே அந்தச் சாகலேட்க்குள் விஸ்கி, ரம் வோட்கா போன்றவை
உள்ளே இருந்திருக்கலாம் ,நீ பார்த்து வாங்கலையா ?
"இல்லை ராஜா பிரான்ஸ் மொழியில் எழுதப்பட்டிருந்தது அதன் அழகும் பேக் செய்த விதமும் என்னைக் கவர்ந்தது அதனால் வாங்கி விட்டேன் '
"எல்லாம் சரியாகிவிடும் ,இஞ்சி அல்லது எலுமிசம்பழம் ஜூஸ் குடித்து விடு "

மறுநாள் பள்ளிக்குப் போனேன் சில ஆசிரியர்கள் என்னிடம் ஓடி வந்து "ரொம்ப தேங்ஸ்
மேடம் மறக்க முடியாத சாக்கலேட் எங்கள் வாழ்க்கையில் இது போல் இதுவரையிலும்
சாப்பிட்டதே இல்லை"என்று நன்றி தெரிவித்தார்கள் ஒரு சிலர் "இன்னும் இருந்தால் கொடுக்க முடியுமா?என்று கேட்டனர் ,ஒரே பொருள் ஒருவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது
ஒருவருக்கு வாந்தியே வருகிறது ,இது போல் தான் வாழ்க்கையிலும் ஒருவருக்குப்
பிடித்தது மற்றவருக்கு பிடிக்க வேண்டும் என்பதில்லை ,விட்டுக்கொடுக்கும் பண்பு இருந்தால் இதை எளிதாகச் சமாளிக்கலாம் என்று என் மனதில் படுகிறது
இந்தச் சாக்கலேட் என்னை headmistress ஆக ஆக்கிவிட்டது ,எல்லோரும் அந்தப்போஸ்டுக்கு
என்னையே தேர்ந்தெடுத்தார்கள் எல்லாம் எனக்குத் தெரியாமலே

அந்தக் கசப்பு சாக்லேட் வாழ்க

No comments: