Saturday, November 2, 2013

கோமந்தக் நாராயணி

ஒரு தேவி தான் அருள் புரியும் கோயிலில்  காலையில் சிறு பெண்ணாக அலங்கரித்தபடி காட்சி தருகிறாள். பாலா திருபுரசுந்தரியைப்போல்.. பால்வடியும் முகம் போல் முகம் இருக்க முகத்தில் புன்னகை .உச்சி பூஜையின் போது அந்தச்சிறுமி இளம் பெண்ணாக காட்சி அளித்து அருள் புரிகிறாள்.மாலை நேரம்  வீட்டுப்பெண்மணிப்போல் தரிசனம் தருகிறாள்.இவள் பூணலும் தரித்திருக்கிறாள்.  நான்கு திருக்கரங்கள்.திருசூலினி என்ற பெயருக்கு ஏற்ப வலது கையில் சூலம் ஏந்தியிருக்கிறாள். கீழ்க் கையில் கத்தியுடன் முண்டாசுரனின் தலையும் இருக்கிறது  அதன் கீழே முண்டாசுரனின் இரத்தத்தைக்குடிக்கும்  ஒரு . ஓநாய்.   இடது கையில் அமிருதகலசம் ஏந்தியபடி இருக்கிறாள்.இவளைப்பற்றி விசாரித்தேன் .  இவள் தான்      "மஹாலாச நாராயணி" என்று தெரிய வந்தது ,பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட அமிருத கலசம் வெளி வர தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அமிருதம் பெற்றுக்கொள்ள சண்டை வந்துவிட்டது . இதைச்சரி செய்ய மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார் .இந்த மோகினியைத்தான் 'மகாலாச நாராயணி' என்ற பெயரில் மஹாராஷ்டிராவில் பூஜிக்கிறார்கள். சிலருக்கு இவள் குலதெய்வமாக விளங்குகிறாள். கொங்கன் சாரஸ்வத் பிராம்மின் .தேசாயி கத்ரி  போன்றவர்கள் இவளைப் பூஜிக்கின்றனர்.. மகாலாச நாராயணி என்பவள் இரு உருவம் கொண்ட ஒரு தேவி ,அவள் மோகினியாகவும் ,பார்வதியாகவும் இருக்கிறாள் என்கின்றனர் சிலர்.தவிர அவள் "கண்டோபா " என்பவரின் மனைவி என்றும் சிலர் நம்புகின்றனர்.கண்டோபா   சிவனின் மறு அவதாரம் என்றும் படைத்தலைவன் என்றும்  அவர்கள் சொல்கின்றனர் .நாம் துதிக்கும் வீரபத்திரராக இருக்குமோ என்று எனக்குத்தோன்றியது அஹமத்நகரில் நிரஸா என்ற இடத்தில் மோகினிராஜ் என்ற கோயிலில் இவள் அருள் புரிகிறாள்.இந்தகோயில் முதலில் சிறிதாக இருந்தது ஆனால் பின் வந்த  ஒருபக்தர்,ஶ்ரீ  கங்காதர் யஷ்வந்த சந்திரசூட் என்பவர்  75 அடி உயரத்திற்கு கோயிலை எழுப்பி பலவிதமான வேலைப்பாடுகளையும் செய்வித்து மிக அழகாக ஆக்கினார் . இந்தகோயில் சிலை முதலில் நேபாலில் இருந்ததாம் .பின் அந்தச்சிலை ஔரங்காபாத்திற்கு வந்து சேர்ந்ததாம்  பின்னர் முஸ்லிம் ஆட்சியில் இந்தச்சிலைக்கு ஏதாவது பங்கம் வந்துவிடுமோ என்று  அது கோவாவிற்கு எடுத்துச்செல்லப்பட்டதாம் .கோவாவில்  கோமந்தக் என்ற இடத்தில் இந்த நாராயணி வந்தமர்ந்தாள்.
போர்ச்சுகீசியர்கள் படையெடுப்பு ஆரம்பிக்க  இந்த  அம்பாளை பத்திரமாக வடகர்நாடகாவிற்கு எடுத்து வந்தனர் . பின் அவளை ஒரு குடத்தில் வைத்து "கும்தா "என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்தனர் .
மராட்டி மும்பாதேவி போல் மரவேலைப்பாடு செய்த கதவுகள் கொண்ட கோயில்.கதவுகள் வெள்ளி தகட்டால மூடப்பட்டுள்ளன.
கும்தாவின் மகாலாச நாராயணிக்கு நவராத்திரி உத்சவம் பிரமாதமாக நடைப்பெறுகிறது ..கோவாவிலும் மிகச்சிறப்பாக நடைப்பெறுகிறது  தேர்த்திருவிழாவின் போது தேர் வாழை மரத்தண்டினால் அலங்கரிக்கப்படுகிறது  தவிர மக்களுக்குப்பிரச்சனை இருந்தால் இங்கிருக்கும் மரத்தின் இலைகளை  இந்தச்சிலையில் முப்பத்திரண்டு இடத்தில் பக்தர்  ஒட்ட வைப்பார் . பின் அவரவர் பிரச்சனைக்கு  இலை அசைய  அதைக்கொண்டு விடை பெற்றுக்கொள்வது வழக்கமாம் .

No comments: