Saturday, January 8, 2011

ஆனந்த நட்ராஜர்

கோனேரிராஜபுரத்திலுள்ள நடராஜர் மிக பிரம்மாண்டமானவர் ,இங்கு ஸ்தல
விருக்ஷங்கள் இரண்டு . அரசமரம் வில்வமரம் இந்த நடராஜர் திருவீதி உலாவுக்குப் போகமாட்டார் இவரைப்போலவே மதுரையில் இருக்கும் நடராஜரும் உத்திரகோச மங்கையில் இருக்கும் நடராஜரும் திருவீதிஉலாவுக்குச்செல்லமாட்டார் .கோனேரிராஜபுரத்தில் இருக்கும் நடராஜரும் சிவகாமியும் சுயம்புவாகத் தோன்றி அருள் புரிகிறார்கள் ,ஒரு சமயம் வரகுணபாண்டிய மன்னன் நடராஜர் சிவகாமி இருவரையும் அங்கேயே தங்கி அருள் புரியுமாறு கேட்டுக்கொண்டார் அவர் மிகுந்த சிவபக்தர் ,த்ன் பக்தரின் வேண்டுகோளின்படி நடராஜரும் சிவகாமியும் பஞ்சலோகத்தால் ஆன குழம்பைக்குடித்துப் பின்னர் சுயம்பு மூர்த்தியாக ஆனார்
அதே நேரத்தில் சிவகாமி அம்மையும் அவர் அருகில் அமர்ந்து வரகுணபாண்டியனுக்குக் காட்சியளித்தாராம் .

இந்த நடராஜரின் விசேஷம்என்னவென்றால் சாதாரண மனிதனைப்போல் இவருக்கும் ரோமம நகம் மச்சம் கைரேகை எல்லாம் இருக்கின்றனவாம் .சிலையில் இருக்கும் ரேகைகள் ந்னகு கண்களுக்குத் தெரிகின்றனவாம் .

இந்தகோயிலை "நடராஜா ஆலயம் "என்றுதான் பலர் அழைக்கின்றனர்
இந்தக்கோயிலில் இருக்கும் சனிபகவானும் வித்தியாசமாக இருக்கிறார்
எல்லாக்கோயில்களும் சனிபகவான் கருப்பாக இருந்து கருப்புத்துணியைத்தரித்திருப்பார் ஆனால் இங்கு இவர் வெண்மை ஆடையுடன் அருள் புரிகிறார் சனிக்கிழமைகளில் எல்லோரும் வெள்ளை எள்ளும் அதனால் ஆனா எண்ணெயில் தீபமும் ஏற்றுகின்றனர் இவர் ஏன் வெண்மை உடையை விரும்பினார் என்று தெரியவில்லை ,நிச்சியமாக ஏதாவது புராணக்கதை இருக்கும்.

இதே போல் நடராஜரும் எப்போதும் சந்தனத்தால் மூடப்பட்டு இருப்பது உத்திரகோசமங்கையில்தான் ஏன் என்றால் இந்த நடராஜ சிலை மரகதக்கல்லினால் ஆனது இந்த நடராஜர் சிலையிலும் பச்சை நரம்புகள் தெரிகின்றன .என்கிறார்கள் மக்கள்,
வருடத்தில் ஒருநாள் திருவாதிரை திருநாள் மட்டும் அந்தச்சிலையிலிருக்கும்
சந்தனக்காப்பை முழுவதும் விலக்கி பகதர்களுக்காக மரகத நட்ராஜர் தரிசனம்
கிடைக்கும்படி செய்யப்பட்டிருக்கிறது . ஆனால் மாலை ஆனவுடன் திரும்பவும்
இரவில் சந்தனக்காப்புக்குள் நுழைந்துவிடுகிறார் மரகத நடராஜர் .
மரகதக்கல் சேதமாகமல் இருக்க மேளச்சத்தம் ,நாதஸ்வர ஒலி என்பது போல்
பல ஒலிகளைத் தவிர்க்கின்றனர் இதேபோல் மரகதலிங்கம் இருக்கும் இடங்களிலும் கோயிலைப்பரமரிக்கும் அங்கத்தினர்கள் அவைகளைப்பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்

ஓம் நமச்சிவாய .ஆனந்த தாண்டவ நடராஜா

No comments: