Saturday, January 8, 2011

ஆஞ்சநேயர் பிறந்த நாள்

மார்கழி மாதம் வரும் அமாவாசையில் மூல நக்ஷத்திரத்தில் ஸ்ரீஆஞ்சநேய ஜயந்தி சிறப்பாக
பல கோயில்களில் நடைப்பெறும் ,ஆஞ்சனேயரின் பிறந்த நாள் அல்லவா இது !.அஞ்சனா தேவி பெற்றெடுத்த ஒரு மாணிக்கம் அல்லவா இவர்.! ஆஞ்சனேயர் மனோபலத்திற்கும் புத்தி பலத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கியவர். பிரும்மசார்யத்தைக்கடைப்பிடித்தவர் .சிறந்த அறிவாளி.
ஸ்ரீராமரைத்தவிர வேறு ஒன்றும் அவர் நினைத்ததில்லை அவர் மேல் அத்தனை அளவு கடந்த பக்தி .

நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தைப் பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல் பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போதுஆஞ்சனேயருக்கு நெய் விள்க்கு வைத்தால் படிப்படியாகதீரும் .அவருக்குச்செய்யும் ப்ரீதிகளில் சிலவற்றைப்பார்க்கலாம் ,

வடைமாலை சாத்துதல்
செந்தூரக்காப்பு அணிவித்தல்
வெண்ணெய் காப்பு சாத்துதல்
ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
இந்தப் பரிகாரங்களை நான் பலருக்குச் சொல்லி நன்மை நடந்ததைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்

வடைமாலை,,,,,அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும்
இருக்க உளுந்து வடைசெய்துக் கொடுத்ததாக ஐதீகம் .உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு .

வெற்றிலைமாலை ,,,,,,,சீதையைத்தேடிதேடி பல இடங்களில் காணாது பின் அசோகவனத்தில்
அவரைச் சந்த்தித்தார், அப்போது சீதை அவருக்கு வெற்றிலைக் கொடி அணிவித்து அவரை
வாழ்த்தினார். என்றும் சிரஞ்ஜீவியாய் இருக்க வாழ்த்தினார். வெற்றிலை வயிறு சம்பந்தமான எல்லா தோஷங்களையும் போக்கும் . பண்டைக் காலத்தில் சின்ன குழந்தைக்கும் வெற்றிலை சுரசம் வாயு தொல்லை இல்லாமல் இருக்கக் கொடுப்பார்கள்

வெண்ணெய் சாத்துதல்,,,,,,,ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டுச் சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்புகள் தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார்,அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை ,அதனால் வெண்ணெய்
சார்த்தும் பழக்கம் உள்ளது,

சிந்தூரக் காப்பு ,,,,,,சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை கேட்கிறாள்."என் அவர் நலமா?
என்று அதற்கு அனுமான் "எப்போதும் உங்களைத்தான் நினத்துக் கொண்டிருக்கிறார் என்றதும் மகிழ்ச்சித் தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக்கொண்டாள் இதைப் பார்த்த அனுமனுக்குச் சந்தோஷம் .தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம்

ராம் ராம் எழுதி மாலையாக அணிவித்தல் அனுமன் தன்இதயத்திலேயே ராமாவை
வைத்திருக்கிறார். சில படங்களில்அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம்.
ராமர் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்குவார்.ராம நாமத்திற்கு அவ்வளவு மகிமை

வாலில் பொட்டு வைப்பது ,,,,,,அனுமனுக்கு சக்தி
முழவதும் தன் வாலில் தான் .இராவணன் முன் தன் வாலையே
சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவனனுக்கும் மேல் உயரமாக அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும் அந்த வாலில் வைத்த
நெருப்பினால்தான் அந்தத்தீ அவருக்குச் சூடு கொடுக்கவில்லை ஆனால் இலங்கையே எரிந்தது
ஆகையால் வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது என்ற ந்ம்பிக்கை ...நம்புகிறவர்களுக்கு பலிக்கிறது

வடநாட்டில் 'ஜய் போலோ பஜரங்க பலி கி 'என்ற கோஷம் ஒவ்வொரு மாருதி மந்திரிலும்
காணலாம்.
அவர்கள் அனுமனுக்கு ஜிலேபி மாலையும் சார்த்துவதைக்கண்டிருக்கிறேன் கபாஸ் என்ற சர்க்கரை மிட்டாய்யும் குஞ்சாலாடுவின் உதிர்ந்த தூளும் பிரசாதமாகக்கொடுக்கிறார்கள்.
தவிர வாயில் வெண்ணெயும் வைக்கிறார்கள் .வடநாட்டில் செவ்வாய்க்கிழமை சனிக்கிழமை இரண்டும் தான் ஹனுமானுக்கு மிக விசேஷம் அன்று கூட்டம் அலை மோதுகிறது எல்லோரும் ஹனுமன் சாலீசா "
என்ற நாற்பது குறள்களைக்கொண்ட அனுமானைப்பற்றிய சிற்ப்புகளை ஸ்லோகமாகப் படிக்கிறார்கள்.

"ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா
ஹோய் ஸித்தி ஸாகி கௌரீஸா"

jo yah padai hanuman chaleesa { சரியான உச்சரிப்புக்காக
hoy siddhi saakhi gaureesa

இந்த ஹனுமான் சாலீஸவைப் படிப்பவனுக்கு
சிவபெருமான் அருள் புரிகிறார் அவன் பரிபூர்ண
நிலையை அடைகிறான்

No comments: