Monday, November 8, 2010

முத்தேவியர்

அன்னை ராஜராஜேஸ்வரி கொலுவிருந்தாள்
ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்து கொலுவிருந்தாள்
முத்துமண்டபத்தில் அமர்ந்திருந்தாள்
என் உள்ளத்திலே வந்து கலந்திருந்தாள் .
அலைமகள் கலைமகள் அங்கு இருக்க
சப்த கன்னிகள் அங்கு கீதம் பாட
நந்திகேஸ்வரர் மேளம் கொட்ட
தேவி பரமேஸ்வரி கொலுவிருந்தாள்
சிவமனோகரியாய் அருள்புரிந்து நின்றாள்
என் சிந்தையிலே வந்து மிதந்து நின்றாள்.


வெள்ளைத்தாமரையில் வீற்றிருந்தாள்
வீணையில் நாதத்தைக்காற்றினில் கலந்தாள் ,
அன்னவாஹன தேவியானாள்
வித்தைகளுக்கெல்லாம் தலைவி அவள்.
மரகதக்கரங்கள் வீணையை மீட்ட
கல்யாணி வந்து கொலுவிருந்தாள்

சிம்மவாகனத்தில் அமர்ந்து வந்தாள்
கையில் சூலம் ஏந்தி நினறாள்
மகிஷனை வதம் செய்தவள்
மகிஷாசுரமர்த்தனி ஆனவள்
அருள் புரியும் துர்க்கையானாள்,
முப்பத்து முக்கோடிதேவர்கள் மலர் தூவ
ரத்னஹாரங்கள் அங்குமிங்கும் அசைய
நவரத்னசிம்மாசனத்தில் கொலுவிருந்தாள்
என் இதயத்தில் வந்து கலந்து நின்றாள் .

நமக்குள் ஒரு ராவணன்

வட இந்தியாவில் நவராத்திரியை "தசேரா" என்று கொண்டாடுகிறர்கள் .இங்கு ஒரு
பெரிய மைதானத்தில் {தில்லியில் ராமலீலா மைதானம்} இராமயணத்தை நாடகமாகப்போடுவார்கள் அதில் துளசிராமாயணம் பெரிய பங்கு வகிக்கும்
தஸ் ஹரா என்பது தசேராவாக மாறி இருக்கலாம் .அதாவது பத்து தலைகளை
மாய்ப்பது " என்று பொருள் வரும் அந்தப்பத்து தலைகள் என்பது நம்மிடமே
இருக்கின்றன .அதாவது பொறாமை, .கோபம் ,பேராசை பற்று ,வரட்டுகௌரவம்
தன்னலம் , குயுக்தி புத்தி .வெறுப்பு .வரம்பைத்தாண்டும் காமம் ,ஈகோ .

ஸ்ரீராமரும் இராவணனைக்கொல்ல தேவியை ஆயிரம் தாமரையால் பூஜித்தார் ,
பூஜை முடியும் கட்டத்தில் தேவி விளையாட கடைசி தாமரையை ஒளித்து
வைத்துக்கொண்டாள், ஸ்ரீராமார் கடைசிப்பூவைப்போட கண்களைத்திறந்து
பார்த்தார் .அது அங்கு இல்லாததால் மனம் மிகவும் வருத்தமுற்று
"தேவி இது என்ன சோதனை? பூஜை முடியும் தருவாயில் இப்படி ஆக வேண்டுமா?
பரவாயில்லை என் தாய் என் கண்களைத்தாமரை மலருக்கு ஒப்பிடுவாள்.ஆகையால்
என் கண்ணைப்பிடுங்கி உனக்கு மலராகச்சம்ர்ப்பிக்கிறேன் "
என்று சொல்லியபடியே தன் கண்களைப்பிடுங்க , ஒரு கை வந்து தடுத்து நிறுத்தியது
பாராசக்திதான் அவள் , இதை மிக அழகாக "சூர்யகாந்த் திரிபாடி நிராலா "என்பவர்
ஸ்ரீராம் கி சக்தி பூஜா "என்ற கவிதையில் சொல்லியிருக்கிறார்.

இதில் இராவணின் அழிவு என்பது மனதில் இருக்கும் ஆசாபாசங்களை அழித்து
மனதை வெற்றிக்கொளவது இதை மகிஷாசுரனின் அழிவிலும் பண்டாசுரனின்
அழிவிலும் எடுத்துக்கொள்ளலாம் பஞ்சேந்திரியங்களைக்கட்டுப்படுத்தி ஞானத்தை
வரவழைக்கும் செயல் மனதைக்கட்டுப்படித்தினால் தான் இயலும் ,மனம் ஒரு குரங்கு.
தாவிக்கொண்டே இருக்கும்
அந்தக்குரங்கைக்கட்டிப்போடுவது அவ்வளவு எளிதல்ல அதற்கு அம்பாளின் அருளும்
நாமஸ்மரணையும் வேண்டும் ,இடைவிடாநாமஜபத்தால் மெஸ்மரிசம் போல் இந்த
மனக்குரங்கு கட்டப்பட்டுவிடும்

பாண்டிசேரி அன்னையை ஸ்ரீ அரவிந்தார் முத்தேவியின் ரூபமாகக் காண்கின்றார்,
மஹாலட்சுமி ,மஹாசரஸ்வதி , மஹாகாளியின் ஸ்வரூபமாக சேர்ந்து மஹேச்வரியாக
காட்சி அளித்தார் ,அந்த மஹேச்வரியின் படம் வீட்டில் இருநதால் மிகவும் நல்லது
என்கிறார்கள் அன்னையின் பக்தர்கள் ,

"ஆனந்தமயீ சைத்தன்யமையீ சத்யமயீ " என்று அன்னையை அழைப்பபர்கள் . இதைப்பார்க்க பேரானந்தம் கிடைப்பது என்பது மனதிற்குள்
இருக்கும் ஒளியை க்கண்டுப்பிடித்து சத்தியத்தின் பாதியில் நடப்பதும் அதனால் வரும் இன்பமென்று தோன்றுகிறது .

கட்டுவோம் நம் இதயத்தில் ஓர் ஆலயம்

ஷீரடி பாபாவின் தலையணை ஒரு செங்கல். அந்த்ச்செங்கல் தான், ஷீரடிபாபா அந்தக்கிராமத்தில் கால் வைத்த தினத்திலிருந்து அதை உபயோகித்தார் ,
அவர் மறைவுக்குக்கொஞ்சம் நாள் முன் அந்தச்செங்கல் உடைந்துப்போய் அவரது
சித்தியடையும் வேளையைக்குறிப்பிட்டது போலும் ,

துவாரகாமாயிக்குள் நுழைந்த ஒரு சிறுவன் மிகவும் சாக்கிரதையாக அந்த இடத்தைச்சுத்தம் செய்துக்கொண்டிருந்தான் மேலே தூசியைத்தட்ட கீழே தூசிகள்
விழுந்தன .பாபாவின் தலையணையான அந்தச்செங்கல் அங்கு இருந்தது .அதில்
தூசி குப்பைகள் விழாதிருக்க அதை வேறு இடத்தில் வைக்க அதைத்தூக்கினான்.
ஆனால் நடந்தது என்ன! கைத்தவறி அது கீழே விழுந்து பாதியாக உடைந்துவிட்டது

பாபா வெளியிலிருந்து துவாரகாமாயி திரும்ப நடந்ததை அறிந்தார் .அந்தப்பையன்
மாதவ் போஸ்லே மனம் வருந்தி அழுதான் ,பாபா அந்தச்செங்கல் உடைந்ததும்
தானும் ஒரு சாதாரண மனிதன் தான் என்று காட்டவோ என்னவோ மிகுந்த
கோபம் வந்தாற்போல் கண்கள் சிவந்தன .

"உடைந்தது என் இதயம் உடைந்தது போல் ஆகிவிட்டது , உடைந்தது செங்கல் இல்லை .உடைந்தது என் கர்மாவே" என்றார்.

அவர் முடிவு நெருங்கி விட்டது என்பதைச் சூசகமாகச்சொன்னாரோ?

பல தடவைகள் அவர் முடிவுக்காலம் நெருங்குவதை உணர்த்தினார் .

"இந்த உடம்பு சாஸ்வதமில்லை இது அழிவு பெறக்கூடியது ,ஆன்மாவே நிலைத்து
நிற்பது " என்றும் அவர் கூறி தன் முடிவைத் தெரிவித்தார் ,

1916ல் விஜயதசமி தினம் வழக்கம் போல் வீதியில் ஊர்வலம் வந்துக்கொண்டிருந்தது .
அதற்கு மராட்டியில் சீமோலங்கன் என்று பெயர் சீமா என்றால் எல்லை உல்லங்கன்
என்றால் தாண்டுவது என்று இங்கு அர்த்தம் அதாவது எல்லையைத் தாண்டுவது ,
அழகாக் வந்துக்கொண்டிருந்த பாபா அவர்கள் திடீரென்று கோபத்தால் கண்கள் சிவக்க
தன் உடைகளைக்கிழித்துக்கொள்ள ஆரம்பித்தார் .அங்கு எரிந்துக்கொண்டிருந்த
துனி என்ற நெருப்பில் உடைகளைப்போட்டார் தன்னுடைய கைக்கம்பினால்
அந்த மசூதியின் தரையை "டபார் டபார்" என்று அடித்தார் பின் கத்த ஆரம்பித்தார்.

"நான் இந்த எல்லையைத்தாண்டிப்போகப்போகிறேன் "

ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை ஏதோ நடக்கப்போகும் ஒன்றைச்சொல்கிறார்
என்று மட்டும் ஒரு சிலருக்குப்புரிந்தது .பின் சில் நிமிடங்களுக்க்பிற்கு சாயிபாபா தன் நிலைக்கு வந்தார் பின் பக்தர்கள் அளித்த உடைகளையும் தலையில் கிரீடத்தையும்
அணிந்துக்கொண்டு சாவடிக்குத்தயாரானார்
இவர் சொன்னது போல்வே 1918 சரியாக இரண்டு வருடங்கள் கழித்து அதே விஜயதசமி
அன்று 2 -30 க்கு அவரது கடைசி மூச்சாக இருந்தது .


அவருக்கு இலேசாக சுரம் கண்டது அப்போது கூட ஒருவரும் அவர் அவர்களை
விட்டுப்போய்விடுவார் என்று எண்ணவில்லை .

அந்த்ச்செவ்வாய்க்கிழமையை மற்க்க முடியுமா?

துவாரகாமாயி யில் அவர் உடன் இருக்கும் இருவரை அவர் சூசகமாக வெளியில் ஒரு
காரியமாக அனுப்பிவிட்டார் அவருடன் நிழல் போல் இருந்த ஸ்ரீலட்சுமி பாயிக்கு
கொடுக்க வேண்டிய ஒன்பது ரூபாய்க்களை முதலில் ஐந்தும் பின் நாலுமாகக்கொடுத்தார். பாசத்தின் காரணமாக இதைக்கொடுத்ததாக பலர் நினைத்தனர் ,
பின் ஒவ்வொருவராக எல்லோரையும் அனுப்பிவிட்டார் பின் தன்னிடம் பயாஜி கோதே
என்பரை மட்டும் வைத்துக்கொண்டார்
பின் அவர் காதில் "என்னைத் "தகடி வாடா" என்னும் இடத்திற்கு அழைத்துச்செல் "
என்றார்
அங்கு அழைத்துச்சென்றபின் அவர் மடியில் சாய்ந்தார் உட்க்கார்ந்த நிலையிலேயே
அவர் சித்தியடைந்து விட்டார்

முப்பத்தாறு மணி நேரம் அவரது உடல் வைக்க்ப்படிருந்தாலும் அந்த உடல் விரைத்துப்போகவில்லை .அவரது கப்fனி உடை மிகவும் எளிதாகக்கழட்டப்பட்டது துணியைக்கிழிக்கும் நிலைமை
ஏற்படவில்லை உடல் நன்கு வளைந்துகொடுத்ததாம்

பாபாவின்ஸ்தூல உருவம் நம்க்கு இப்போது தெரியாவிட்டாலும் அவர் பூத உடலில் இருக்கும் போது எப்படி பக்தர்களுக்கு அருள் வழங்கினாரோ
அதேபோல் இன்றும் வழங்கி வருகிறார் ,பாபாவின்
படத்தைப்பார்த்தாலே நம் மனதில் ஒரு அமைதி
கிடைக்கிறது
நம் இதயங்களில் {பக்தர்கள்} அவரது ஆலயம் இருக்கிறது அந்த ஆலயத்தில் அருள் என்ற
பிரசாதம் நம்க்குக்கிடைத்த வண்ணம் இருக்கிறது

இந்த விஜயதசமி தினத்தில் பாபாவின் சாவடி ஊர்வலமும் படித்து அவரை நினைவுக்கொண்டு
அவர் அருளைப்பெறுவோமாகுக் .

புதிய கலாச்சாரங்கள் புகுவது ஏன்?

நமது கலாச்சாரம் தொன்றுத்தொட்டு வரும் ஒன்று . ஆனால் இன்றைய காலக்கடடத்தில் அவை பெருமளவு குறைநது வருவதைக்காண்கின்றேன்.
முன்பு மாஹாளய தினங்களிலும் மற்றபடி அமாவாசை கிரஹணம் போன்ற தினங்களில் மனமொப்ப சிரத்தையாக முன்னோர்களை நினைத்து அதற்குத்தகுந்தாற்போல் புரோகிதர்களை வரவழைத்து தர்ப்பணம் செய்து அவர்களது ஆசிகளைப்பெறுவார்கள். ஆனால் இப்போது இருக்கும் இயந்திர யுகத்தில் எல்லாம் "ஷார்ட்கட்"ஆகிவிட்டது .பலர் இந்த நாட்களை அனுசரிப்பதையே விட்டுவிட்டனர் ,ஒரு பெண் க்ல்லூரிக்குப்போகாமல் லீவு எடுத்திருந்தாள் .நான் அவளிடம் கேட்டேன்,

"என்ன கல்பனா காலேஜ் போகவில்லையா?வீட்டில் மஹாளய தர்ப்பண நாளா?
அவள் பதில் சொல்ல்த்தெரியாமல் திணறினாள்
பின் கேட்டாள் " அப்படின்னா என்ன ஆன் டி ?"
நான் இதைப்பற்றிச்சொன்னேன் அவள் தன் வீட்டில் இது போல் எதுவும் செய்து பார்த்ததில்லை என்றாள் .சடங்குகள் செய்வதும் செய்யாமல் இருப்பதும் தனிப்பட்டவரின் சுதந்திரம் தான் .

ஆனால் வேடிக்கை என்னவென்றால் வெளிநாட்டில் இதேபோல் செய்யும் ஒன்றை "காபி" செய்து மகிழ்கின்றனரே மக்கள் !

இதுதான்" ஹாலோவீன் ' என்ற திருநாள் ..எது வெளிநாடுகளிலிருந்து வந்தாலும் அது இந்தியர்களுக்கு "அல்வா" மாதிரிதான் . இசையுடன் யோகா செய்வது .
அவர்கள் செய்யும் மெடிடேஷன் என்ற தியானம் { பிராணாயாமம் .தியானம் எல்லாம நமதுதான்}
போன்ற்வைகள் அமெரிக்கா கானடா போன்ற தேசங்களிலிருந்து வந்தால் பலர்
பல ஆயிரங்கள் கொடுத்து கற்றுக்கொள்கின்றனர் ,இவை எல்லாம் நம்து இந்தியாவின் சரக்குகள் தான் ,

நாம் கண்திருஷ்டி ஏவல் தீயசக்திகள் அண்டாமல் இருக்க பூஷிணிக்காயில்
பெரிய மீசை வரைந்து ஒரு ராட்சசன் போன்ற உருவத்தை புது வீட்டின் முன் கட்டுகிறோம்

ஹாலோவீன் போதும் மக்கள் டர்னிப் என்ற காயிலும் பூஷிணி அல்லது பரங்கிக்காயிலும் பலவிதமான உருவங்கள் வரைந்து தேவைப்பட்டால் அழகாகக் செதுக்கி அதை சன்னல் அருகில் தொங்க விடுகின்றனர் ,

நாம் இறந்த மூதாதைர்களுக்காக சில சடங்குகள் செய்து அன்னதானமும் செய்கிறோம் இந்த ஹாலோவீன் நாளிலும் வெளிநாட்டவர்கள் இறந்தவர்களை நினைத்து அவர்களுக்கு மரியாதை செய்கிறார்கள்,இந்தத்தினத்தில் பலர் பலதரப்பட்ட பிசாசுகளின் உருவங்களை முகமூடிகளாகத் தயாரித்து அவைகளை அணிகின்றனர் .இதன் காரணம் என்னவென்றால் அன்றையதினத்தில் வரும் தீய சக்திகள் இந்த முகமூடி பிசாசுகளைப்பார்த்து மறைந்துவிடுமாம்

ஸ்காட்லாந்தில் ஆண்கள் வெள்ளை உடையுடன் இந்த அரக்கன் போன்ற முகமூடிகளை அணிந்தோ அல்லது முகம் முழுவதும் கறுப்பு வண்ணம் பூசியபடியே பயமுறுத்துவார்களாம்
நாம் ஹோமம் வளர்பது போல் இவர்களும் நெருப்பை முட்டி அதைச்சுற்றி அமர்ந்து நடனம் ஆடுகிறார்கள் ,
இந்த நாளை மனதில் கொண்டுதான் "டிராகுல்லா "தி மம்மி படங்கள் தயாரிக்கப்பட்டு மிகவும்"ஹிட்"டானது

இன்றைய தினத்தை மேலும் பயமாக்க செயற்கைப்பொருடகள் தயாரிக்கின்றன்
அதில் பெரிய எட்டுக்கால் பூச்சி எலும்புக்கூடு செயற்கை மயானபூமி
கறுப்புப்பூனை ரப்பரால் ஆன பிசாசு போன்றவைகள் தயாரித்து கம்பெனிகளும்
லாபம் பெறுகின்றனர்
பள்ளிசிறுவர்களும் பூதம் போல் வேஷம் போட்டுக்கொண்டு வீடுகளுக்குச்சென்று
விருந்து கேட்கின்றனர்

ஆப்பிளை ஒரு பெரிய தொட்டியில் மிதக்கவிட்டு பற்களால் கவ்வி எடுக்கும் விளையாட்டும் உண்டு

நம் கிராமங்களில் இருந்து வரும் மூடநம்பிக்கைகள் போல் அங்கும் இருக்கின்றன
ஸ்காட்லாந்தில் இந்த நாளில் திருமணமாகாதவர் ஆப்பிள் பழத்தின் தோலை மெல்லியதாகச்சீவி தோளில் போட அது எந்த உருவத்தின் எழுத்தில் அமைகிறதோ அந்த எழுத்தின் ஆரம்பம் தான் அவள் மணக்கப்போகும் மாப்பிளையின் பெயராம் ,
தவிர இன்னொரு பழக்கமும் இருக்கிறது கன்னிப்பெண் ஒரு இருட்டு அறையில்
ஹலோவீன் நாளில் இரவை கழிக்க அவளது வருங்கால கண்வரின் முகம்
மறுநாள் அங்கிருக்கும் கண்ணாடியில் தெரியுமாம் திருமணம் இல்லாமல் வேறு அபசகுனமாக இருந்தால் எலும்புக்கூடு தெரியுமாம் .
நம் நாட்டிலும் வெற்றிலையில் கறுப்பு தடவி இறந்த காலம் நிகழ்காலம் எல்லாம் சொல்லும் ஜோசிய மேதைகள் இருப்பதைக் கேள்விப்படிருக்கிறேன் .

சிலர் இந்த நாளில் பரிசாக வாங்கும் ஆப்பிள் கேக்கின் உள்ளே தங்கக் காசு
மோதிரம் போன்றவை ஒன்று இரண்டில் வைத்து விற்பார்கள் .இதனால் அவரது
விற்பனை அதிகமாகும்

கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டின் பல
கலாச்சாரங்களை இளைஞர்கள் எடுத்துக்கொள்கின்றனர் .இது போல் வந்ததுதான்
"valentine day " காதலர் தினம் ,
இப்போது இந்த ஹாலோவீன் நாளும் இந்தியாவில் முக்கிய நகரங்களில் வந்துவிட்டது
சென்னை அதற்கு விதிவிலக்கல்ல
கல்லூரி மாணவிகள் இதற்கென்று தயாரித்த
பயங்கரமான பிசாசு முக மூடியை அணிந்துக்கொண்டு வலம் வருகிறார்கள் இதைத்தயாரிக்கும் மனிதனும் இதனால் பணம்
கொள்ளை அடிக்கிறான் . .
நமது கலாச்சாரத்துடன் வெளிநாட்டு கலாச்சாரமும் சேர்ந்தால் நல்லதுதான் ஆனால்
நம் சம்பிரதாயங்கள் சடங்குகள் எல்லாம் மூட்டைக்கட்டிவிட்டு வெளிநாட்டுக்கலாச்சாரத்தில்
நாட்டம் கொள்ள பெற்றதாயை உதறித்தள்ளுவது
போல் ஒரு பிரமை தோன்றுகிறது ,
வெளிநாடுகளில் சுத்தம், ச்ட்டத்தை மீறாமல் இருப்பது போன்ற்வைகள் நம்மைக்கவருகின்றன

இந்த நல்ல அம்சங்களை நாம் எடுத்துக்கொள்ளலாமே !

"அன்ன கூட்"

தீபாவளி முடிந்த மறு நாள் "கோவர்த்தன பூஜை " மிகவும் உற்சாகமாக பீஹார் உத்தர்பிரதேசம் ஹரியானா ராஜஸ்தான் போன்ற மாகாணங்களில் நடக்கும் .விழாவன்று எல்லோரும் இரவு முழுவதும் தூங்காமல் ஆட்டத்திலும் பஜன்களிலும் பங்கு ஏற்று தங்களையே மறப்பார்கள். கோ என்றால் பசு வர்தனா என்றால் ஊட்டம் தருவது என இருக்கலாம் . ,ஆடுமாடுகளுக்கு வேண்டிய சக்தியைக்கொடுக்கும் புற்கள் நிறைந்த நிலங்கள் சூழ்ந்த இடம் தான் இது .

கிருஷணர் பால பருவத்தில் ஓடிவிளையாடிய இடம் தான் இந்த விரஜபூமி .இந்த இடத்தில் தான் கோவர்தன மலை வந்து அமர்ந்தது ,இந்தக்கோவர்தன மலை வந்து அமர்ந்ததற்கு வடநாட்டில் சொல்லும் புராணக்கதை என்னவென்று தெரியுமா?

துரோணாசலம் என்ற அரசன் சத்யயுகத்தில் ஆண்டு வந்தான் இவன் மலைகளின் அரசன் . அவனது மகனின் பெயர் கிரிராஜன் .ஒருநாள் புலஸ்தியமுனிவர் அரசனிடம் வந்தார்
"அரசே நான் காசிக்குப்போகிறேன் .என்னுடன் தங்கள் மகன் கிரிராஜனையும் அனுப்பி வைக்க அனுமதி தாருங்கள் " என்றார் .

"இது என் பாக்கியம் அழைத்துச்செல்லுங்கள் கிரிராஜா கிரிராஜா இங்கே வா ."

"என்ன தந்தையே நான் என்ன செய்யவேண்டும் ?'

"கிரிராஜா நீ இந்தப்புலஸ்திய ரிஷியுடன் காசிக்குச்சென்று வரவேண்டும் இது அவர் வேண்டுகோள்"

"அப்படியே செய்கிறேன் தந்தையே ஆனால் ......

"ஆனால் என்ன?

"முனிவர் என்னைத்தூக்கிச்செல்ல வேண்டும் கீழே இறக்கினால் நான் அங்கேயே அமர்ந்துவிடுவேன் இதற்கு சம்மதம் என்றால் நான் அவருடன் போகிறேன் "

புலஸ்திய ரிஷி யோசித்தப்பின் ஒப்புத்துக்கொண்டார் .

இருவரும் மதுராபுரி வந்தவுடன் கிரிராஜன் வேண்டுமென்று தன் உடலைப் பெருக்கிக்கொண்டான்,
ரிஷிக்கும் இவனைத்தூக்க முடியாமல் சிரமம் ஏற்பட கீழே இறக்கிவிட்டார்.
ஆனால் த்ன்னை இப்படி ஏமாற்றியதற்கு சாபம் கொடுத்தார்.

"உன் உருவம் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையட்டும் " ஆனால் அவசரத்தில் அவர் சாபமிட்டது தவறு என்று அவர் மனதில் தோன்ற " அன்பு கிரிராஜா துவாபரயுகத்தில் உனனை எல்லோரும் பூஜை செய்வார்கள் புகழுவார்கள் போற்றி வணங்குவார்கள் ." என்று மனதார வாழ்த்தினார்.


த்ரேதாயுகம் வந்தது ராமரின் அவதாரம் ....ராமர் வனவாசம் பின் சீதாஹரணம் என்று போய் ஸ்ரீராமர் இலங்கைக்குப்போக, கடலைக்கடக்க ,பாலம் அமைக்க ,கற்கள் சேகரிக்க கிரிராஜனை அழைத்து அனுமன் இந்த வேலையை அவனிடம் ஒப்புவித்தார் .ஆனால் அந்தப்பணியை நள்ன் முடித்துவிட கிரிராஜன் வருத்தமுற்றான்
ஸ்ரீராமர் அவன் வருத்த்தைப்போக்க " கிரிராஜனே வருந்தாதே . நான் துவாபரயுகத்தில் கிருஷணனாக அவதாரம் எடுப்பேன் அப்போது நானே உன்னை வழிபடுவேன் " என்றார்

கண்ண்ன் பிறந்தான் வளர்ந்தான் விரஜபூமிக்கு வந்து இராஸலீலையில் ஈடுபட்டான் ஒவ்வொரு வருடமும் அங்கு இந்திரபூஜை நடக்கும் ஆனால் இந்த மாயக்கண்ணன் அதை மாற்றினான் கோமாதாவுக்கும் கால்ந்டைகளுக்கும் உணவைக்கொடுக்கும் கிரிராஜனை வணங்க வைத்தான் கண்ணன் சொல்லே மந்திரமாக ஏற்றுக்கொண்டு அவன் வார்த்தையில் கட்டுண்ட விரஜவாசிகள் இந்திரனை மறந்து அந்தமலையைப்பூஜிக்கத் தொடங்கினார்கள் அவ்வளவுதான் இந்திரனுக்கு வந்தது கோபம் .திடீரென்று இடி இடித்து கனமழையை உண்டாக்கினான் .பசுக்கள் விரஜவாசிகள் ,கோபியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர் .

புன்னகையுடன் வந்தான் மாதவன் .தன் சுண்டுவிரலால் அந்த மலையைத்தூக்கி அதனடியில் தன் மக்களுக்குப்புகலிடம் கொடுத்து காத்தான் . இந்திரனும் பின்னால் கண்ணனிடம் மன்னிப்புக்கோரினான் ,

"கோவர்த்தன மலையைக்குடைப்பிடித்த கண்ணனாம் "என்ற பாடலும் உண்டு
இந்த ஞாபகமாக ஒரு சின்ன மலையைச் சாணத்தினால் உண்டாக்கி அதற்கு மலர்மாலைச் சார்த்திப்பின் அழகான ரங்கோலி என்ற வண்ணக்கோலம் இட்டு அதை கோவர்த்தனகிரியாக வழிபடுவார்கள் அந்த ஊர் மக்கள்.பின் கண்ணனுக்குப்பிடித்த பலவகை இனிப்புக்கள் முக்கியமாக பால் தயிர் சேர்த்த பலகாரங்கள் அன்னம் .பருப்பு,என்று 56 வகைகள் நைவேத்தியம் செய்ய எடுத்துவந்து அதையும் மலைப்போல் குவிப்பார்கள் .
இதை "அன்னகூட்" என்கிறார்கள் ,

சில மக்கள் சாதம் வடித்து அதையே மலைப்போல் ஆக்கி நைவேத்தியம் செய்கிறார்கள்

அண்ணாமலை கிரிவலம் வருவது போல் இந்த மலையையும் கிரிவலம் வருகிறார்கள் பகீரதன் பூமிக்குக்கொண்டு வந்த கங்கையைப்போல் இங்கும் ஒரு கங்கை இருக்கிறது இதன் பெயர் "மானஸ கங்கை"
கண்ணன் தன் மனதினால் உற்பத்திச்செய்த கங்கை இது .அதனால் "மானஸ கங்கை"என்று பெயர் வந்தது ,
இந்த மலை ஆரம்பத்தில் 30 கிமீ உயரம் இருந்ததாம் இப்போது 80 அடி உயரம்தான் இருக்கிறது என்று சொல்லிக்கொள்கிறார்கள் ,
இந்த மலையில் அங்கப்பிரதக்ஷிணமும் செய்கிறார்கள் ,இந்த கோவர்த்தனபூஜை செய்ய பாபங்கள் நீங்கி வாழ்க்கை வளமுறும்,